valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 13 June 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

அவ்வாறு செய்யத் தவறிவிட்டு உணவு உண்டால், அதற்குப் பிராயச்சித்தமாக மனம், வாக்கு, செயல் மூன்றையும் தூய்மைப் படுத்திக் கொள்ள, சாஸ்திர விதிப்படி சாந்திராயண  விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சந்நியாசிகளும் பிரம்மச்சாரிகளும் சமையல் செய்யவே கூடாது. சமையல் செய்யும்படி நேர்ந்துவிட்டால், அவர்களும் நிச்சயமாகச் சாந்திராயண  விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

அவர்களுக்கு உணவளிக்கும் கடமையை சாஸ்திரங்கள் இல்லறத்தாரிடம் ஒப்படைத்திருக்கின்றன. சந்நியாசிகள் வயிறு வளர்ப்பதற்காக எத்தொழிலையும் செய்வதில்லை .

பாபா இல்லறத்தாருக்கும் அல்லர்; வானபிரச்தரும் அல்லர். அவர் பால  பருவத்திலேயே உலகத்தைத் துறந்த பிரம்மச்சாரி. அம்மாதிரியான ஒருவருக்குப் பிச்சை எடுத்துப் பிழைப்பதே மிக்க உகந்தது.

அகில உலகங்களையும் தம்முடைய வீடாகக் கருதிய பாபா , தாமே வாசுதேவனும் விசுவம்பரனும் (உலகத்தை ஆடையாக அணிந்தவன்) என்பதையும், தாமே அழிவில்லாத பிரம்மம் என்பதையும் உறுதியாக அறிந்திருந்தார்.

உலகமே ஒரு குடும்பம் என்று நினைப்பவரே பிச்சை எடுத்துப் பிழைப்பதற்குப் பூரணமான அதிகாரம் பெற்றவர். மற்றப் பிச்சைக்காரர்கள் இதைக் கேவலமான செய்கையாகவும் பரிகாசத்திற்கு உரியதாகவும் செய்துவிடுகின்றனர்.

முதலாவதாக, வம்ச விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட வேண்டும். அடுத்ததாகச் செல்வதின்மீது ஆசையையும் புகழ் மீது ஆசையையும் விட்டுவிட வேண்டும். இம்மூன்று ஆசைகளையும் அறவே விட்டுவிட்டவனே பிச்சை எடுத்துப் பிழைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இல்லையெனில், "ஓடேந்திப்  பிழைப்பது மானமற்ற செயல்" என்னும் துகாராமின்  பாடு, சாரமில்லாததாகவும் அர்த்தமில்லாததாகவும்  ஆகிவிடும்.

இளையோரும் முதியோரும் சிறியவரும் பெரியவரும் சமர்த சாயி எவ்வளவு பெரிய சித்தர்  என்பதை நன்கு அறிந்திருந்தனர். உலகியல் எதிர்பார்ப்புகளிலும் ஆசைகளிலும் கட்டுப்பட்ட நாம்தான், அவருடைய புனிதமான பாதங்களில்மேல் வைக்கும் பக்தியில் உறுதியில்லாமல் இருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. பௌர்ணமியன்று 15 பிடி அன்னம் சாப்பிடலாம். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடியாகக் குறைத்துக் கொண்டு வந்து அமாவாசையன்று பட்டினி கிடக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அன்னமாக உயர்த்திக் கொண்டே பொய், பௌர்ணமியன்று 15 பிடி சாப்பிடலாம். இம்மாதிரியாக ஒரு சுற்று வருவதே சாந்திராயண  விரதம்.

2. சாஸ்திரங்களில் விதிப்பட்ட, ஹிந்துக்கள் அனுசரிக்க வேண்டிய, வாழ்க்கை நிலைகள் நான்கு.
  1. பிரம்மச்சரியம் - இளம் வயதில் குருகுலத்தில் கல்வி கற்கும் நிலை.
  2. இல்லறம் - திருமணம் செய்துகொண்டு உலக இன்பங்களை நுகரும் நிலை.
  3. வானபிரஸ்தம் - சொத்து சுகங்களைத் துறந்து மனைவியோடு மட்டும் வனத்தில் வாழும் நிலை.
  4. சந்நியாசம் - எல்லாவற்றையும் (மனைவியையும்) துறந்த நிலை.

Thursday, 6 June 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆங்கிலேயர் வண்டியில் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார். முன்னால் கட்டப் பட்டிருந்த குதிரைகளோ, திடீரென்று ஏற்பட்ட தடங்கலால், மிரண்டு ஓடின. ஆங்கிலேயர் நிலை தடுமாறிப் பாதையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.

பெரும் பிரயத்தனம் செய்து குதிரை வண்டி நிறுத்தப் பட்டது பாதையில் இழுத்துக்கொண்டு போகப் பட்டவர், தூக்கி நிறுத்தப்பட்டு வண்டியில் உட்கார வைக்கப் பட்டார். குதிரை வண்டி மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தது.

ஐயகோ! ஷிர்டி ஒரு பக்கம் இருக்க, பம்பாய் மற்றொரு பக்கம் இருக்க, கொபர்காங்க்விலிருந்த  மருத்தவமனைக்கு குதிரைவண்டி சென்றது.

பாபாவினுடைய  கட்டளைக்குக் கீழ்ப்படியாத பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ததுபோல, குற்றவுணர்ச்சி யால்   தம்மைத்தாமே நொந்துகொண்டு, ஆங்கிலேயர் சில நாள்கள் அம்மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது .

ஜனங்களுக்கு இம்மாதிரியாக கணக்கற்ற அனுபவங்கள் இருந்தன. அதன் விளைவாக, இம்மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு சந்தேகமும் பயமும் ஏற்பட்டது பபவினுடைய ஆக்ஞைகளுக்கு  கீழ்படிந்து நடந்து கொண்டார்கள்; கீழ்ப்படியாமல் நடப்பதற்கு ஒருவருக்குமே தைரியம் இருக்கவில்லை.

சில சமயங்களில் வண்டியின் சக்கரம் கழன்றோடியது. சில சமயங்களில் குதிரைகள் நேரத்தில் சோர்ந்து போயின; ரயில்கள் தவறவிடப் பட்டன. மக்கள் பட்டினி கிடகும்படியும் விரக்தியில் மனம் புழுங்கிக் குமுரும்படியும் நேர்ந்தது.

அவருடைய ஆக்ஞைக்கு கட்டுப் பட்டு நடந்தவர்கள் ரயிலைத் தவற விடாது நேரத்தில் பிடித்தார்கள்; சில சமயங்களில் ரயில்கள் நேரம் தவறி அவர்களுக்கு சௌகரியமாக வந்தன! இனிமையாகவும் சௌகரியமாகவும் பிரயாணம் செய்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்கவில்லை .

பிச்சையெடுத்துப் பிழைப்பதை பாபா ஏன் பல வருடங்களுக்கு வாழ்நெரியாகக் கொண்டார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், இந்த விவரணத்தைக் கேளுங்கள் .

பாபாவினுடைய  வாழ்நெறியையும் நடத்தையையும் பற்றி முழுமையில் யாராவது சிந்தித்தால், பிச்சை எடுத்துப் பிழைத்ததே பாபாவுக்கு மிக்க ஒப்பிதம் என்பது விளங்கும்.
அவ்வாறு செய்ததால் , ஷிர்டி வாழ் மக்களுக்கு, இல்லறதோருக்கு  விதிக்கப் பட்ட கடமைகளைச் செய்வதற்கு நல்வாய்ப்பளித்தார். அவர்களுடைய நன்மைக்காகச் செய்யப் பட்டு, அவர்களுக்கு ஆனந்தமும் அளித்த நற்செயலாகும் அது.

வேறெதிலும் ஈடு படாத விசுவாசத்துடன், மனம், வாக்கு , உடல், செல்வம், அனைத்தையும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு அத்தியந்த (மிக நெருங்கிய) பக்தராகிறார்.

இல்லறதோர் தாம் சமையில் செய்யும் உணவில் ஒரு சிறிய பகுதியை தினமும் பிரம்மச்சாரிகளையும் சந்நியாசிகளையும் நினைத்துக் கொண்டு ஹோமத்தில் (புனித அக்கினியில்) இட வேண்டும்.

Thursday, 30 May 2013

ஷிர்டி சாய்  சத் சரிதம்

"சீக்கிரமாக திரும்பி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, பாபாவினுடைய  அனுமதியைத் தெளிவாகப் பெறாமலேயே கிளம்பி விட்டார். என்ன ஆயிற்று என்று இப்பொழுது  கேளுங்கள்

குதிரைவண்டி சிரித்தும் லேசானதுமானது. குதிரைகள் கட்டுப்பாடில்லாமல் பள்ளம் படுகுழிகளைக் கூடப் பார்க்காமல் மூர்க்கத் தனமாக ஓடின. தாத்யாவிணுடைய  உயிர் மயிரிழையில் தொங்கியது

ஆனால், சாயியினுடைய அருள் அவரைக் காப்பாற்றி விட்டது நல்ல காலமாக, பெரிய ஆபத்து ஏதும் நேராமல், வண்டி ஒரு கருவேலமரத்தின் மேல் மோதி அங்கேயே உடைந்து விழுந்து விட்டது.

அவ்விதமாகவே ஒருசமயம், பெருந்தகையும் கனவாணும் கிருஹச்தருமான ஓர் அங்கிலேயர், மனத்தில் எதோ ஒரு நிச்சய நோக்கத்துடன் பாபாவை தரிசனம் செய்வதற்காக பம்பாயிலிருந்து வந்தார்.

சாந்தொர்க்கரிடமிருந்து  மாதவராவுக்கு விலாசமிடப்பட்ட சிபாரிசுக் கடிதம் ஒன்று கொண்டுவந்தார். தங்குவதற்கு ஒரு கூடாரம் கேட்டு வாங்கிக் கொண்டு அதில் சுகமாகத் தங்கினார்.

பாபாவினுடைய  விருப்பமின்றி, மசூதியின் படிகளில் ஏறித் திருப்தியாக அவரை தரிசனம் செய்வதென்பது முடியாத காரியம் என்பது எல்லாருக்குமே தெரியும்.

மூன்று முறைகள் அந்த கனவான் மசூதியின் படிகளில் ஏற முயன்றார்; ஆயினும், அம்முயற்சிகள் வீண் போயின! வந்தவர் பெரிதும் மனமுடைந்து போனார்

மசூதியின் படிகளில் ஏறி, மண்டியிட்டு வணங்கி, பாபாவின் கைகளை முத்தமிட்டுவிட்டுச் சிறிதுநேரம் அங்கு அமர வேண்டும் என்னும் ஆவல் அவருடைய மனத்தின்  அடித்தளத்தில் இருந்தது.

அவருடைய ஆவல் அவ்வாறு இருந்தாலும், பாபா அவரை அந்த நேரத்தில் மசூதிக்குள் வந்து தம்மருகில் உட்கார அனுமதிக்க விரும்பவில்லை.

அவர் சபா  மண்டபத்தில் இருக்க வேண்டுமென்று பாபா விரும்பினார். விருப்பமிருந்தால் அங்கிருந்தே தரிசனம் செய்யட்டுமென்றும் நினைத்தார் .

ஆகவே, ஆங்கிலேயர் எழுந்து முற்றத்திற்கு வந்து, வீடு திரும்பி போவதற்கு விடை பெற்றுக் கொள்ள முயன்றார். பாபா அவரிடம் கூறினார், "ஏன் இந்த அவசரம்? நீர் நாளைக்குப் போகலாமே".

சுற்றியிருந்த மக்களும் அவரைப் போக வேண்டாம் என்று பலவிதமாக மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். பாபாவின் அனுமதியின்றி வீடு திரும்பியவர்கள் எவ்விதம் வருத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் கூறினார்.

ஆனால், எவருமே விதியை எதிர்த்துச் செயல்பட முடியாது! அவர் அதை ஒப்புக் கொள்ளாது அனுமதியில்லாமலேயே கிளம்பிவிட்டார். சங்கடங்களும் சோதனைகளும் எதிர்கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் குதிரைவண்டி ஒழுங்காகத்தான் ஓடியது. ஆனால், பின்னர்க் குதிரைகள் தடம் மாறி ஓட ஆரம்பித்தன. சாவூல் விஹிர் கிராமத்தை தாண்டிச் சிறிது தூரம் சென்றபோது, திடீரென்று ஒரு சைக்கிள் வண்டி குறுக்கே வந்தது.


Thursday, 23 May 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

பாபாவின்  கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் திரும்பும் வழியில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. பலர் திருடர்களால் கொள்ளையடிக்கப் பட்டார்கள்; அவ்வனுபவம் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஞாபகம் இருந்தது.

உணவுண்ட பிறகே செல்லும்படி சொல்லப் பட்ட பின்னும், பசியுடன் அவசரமாக ஊருக்குக் கிளம்பியவர்கள் ரயிலைக் கோட்டை விட்டதுமல்லாமல், பசியாலும் எரிச்சலாலும் வருந்தினார்கள். இது பல பக்தர்கள் தாங்களே அனுபவித்தவாறு. (மூல நூல் ஆசிரியரும் ஒருமுறை இவ்வனுபவம் பெற்றார் ).

ஒரு முறை தாத்யா கோதே பாடீல் கோபர்கங்வ் வரச்சந்தைக்குப் போக விரும்பினார்; ஆகவே, மசூதிக்கு வந்தார்

குதிரைவண்டியை வெளியே நிறுத்திவிட்டு வந்து, பாபாவை தரிசனம்  செய்தார் அனுமதி பெரும் பாவனையில் பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செளுதிவிட்டுக் கிளம்ப முயன்றார்.

திரும்பத் திரும்ப பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெறுவதைத் தவிர்க்க முயன்றார்கள், அல்லது தள்ளிப் போட்டார்கள். ஆனால், பாபாவுக்கு நல்ல நேரம் எது, கேட்ட நேரம் எது என்பது தெரியும் தாத்யா  வெளியேற அவசரப் பட்டதை கண்ட பாபா கூறினார், "கொஞ்சம் பொறு! -

"சந்தைக்குப் போவது இருக்கட்டும்; பிறகு பார்த்துக்  கொள்ளலாம். கிராமத்தை விட்டு வெளியே போக வேண்டா". ஆயினும், தாத்யா  கட்டாயப் படுத்துவதைக் கண்டு அவர் சொன்னார்,  "சாமாவைக் கூட்டிக் கொண்டு போ".

'சாமாவை எதற்காகக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்" என்று தமக்குள்ளேயே நினைத்துக் கொண்டு, பபவினுடைய பரிந்துரையை அலட்சியம் செய்துவிட்டு, தாத்யா  சந்தைக்குப் போவதற்காகப் போய்  வண்டியில் உட்கார்ந்தார்.

இரண்டு குதிரைகளில் ஒன்று அதிவேகமானது; முன்னூறு ரூபாய் விலை. சாவூல் விஹிர் கிராமத்தை (ஷிர்டியிலிருந்து 3 மைல் ) நெருங்கியபோது கட்டுக் கடங்காமல் நாலுகால் பாய்ச்சலாக ஓடியது.

சந்தைக்குச் சடுதியில் செல்லக் கூடிய, சவுக்கையே அறியாத குதிரை, கால்தடுக்கிக் கீழே விழுந்தது. குதிரை வண்டி தடாலென்று சாய்ந்தது தாத்யா  கீழே விழுந்ததால் இடுப்புக்கு மேல் சுளுக்கிக் கொண்டது

அய்யோ! என்ன சந்தை! என்ன சரக்குகள் வாங்குதல்! தாத்யாவுக்கு  உடனே தம் அன்னை சாயியின் ஞாபகம் வந்தது 'சாயியினுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிதிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்; நடந்தது நடந்துவிட்டது; இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது' என்று தாத்யா  வருத்தப் பட்டார்.

இன்னொரு சமயத்தில் இதேபோன்ற நிகழ்ச்சி நடந்தது. இம்முறை கோல்ஹார்  கிராமத்திற்குச் செல்ல ஆயத்தம்  செய்தார். குதிரைகளை வண்டியில் பூட்டிக் கொண்டு முழுத் தயார் நிலையில் பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக பாபாவின் பாதங்களை வணங்கினார் .


Thursday, 16 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பாபாவுக்குக்  கீழ்படியாததன் விளைவுகள் - பாபா பிச்சை எடுத்தது ஏன் ? இல்லறத்தோரின்  ஐந்து பாவங்களும் (பஞ்ச சூனா ) பாவ நிவிர்த்தியும் - தர்கத் தம்பதியின் பக்தி

முந்தைய அத்தியாத்தின் கதையைத் தொடரும் விதமாக, பாபாவின் அனுமதியின்றித் தம் தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல முயன்றவர்கள், எவ்வாறு சங்கடங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை விவரிக்கிறேன்
அதுபோலவே, இல்லறத்தோரின்  பஞ்சசூனா போன்ற பாவங்களை நிவர்த்தி செய்யும் விதமாகவும் மக்களுக்கு நன்மையளிக்கும் விதமாகவும் பாபா மதுகரி* பிச்சை எடுத்துப் பிழைத்ததையும் சொல்கிறேன்.

மேலும் படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்  பூண்டு வரை சாயி எவ்வாறு எங்கும் வியாபித்துள்ளார் என்பதையும், சாயியே அருள்கூர்ந்து இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை நம்முடைய மனத்தில்  பதியுமாறு செய்ததையும் சொல்கின்றேன்.

ஆகவே, என்னிடம் கதை கேட்கும் மக்களே! நீங்கள் கவனத்துடன் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் . ஏனெனில், இப்புனிதமான கதைகளை சிரத்தையுடன் கேட்டால் ஷேமமடை வீர்கள்.

ஷிர்டிக்குச் செல்லும் புனிதப் பயணம் ஒரு லக்ஷணத்தை உடையது. பாபாவினுடைய  அனுமதியின்றிப் புனிதப் பயணி எவரும் வீடு திரும்ப முயன்றால் அவர் விக்கினங்களையே  எதிர்கொள்வார்.

வீடு திரும்ப அனுமதி கிடைத்தவர் ஷீரடியில் மேற்கொண்டு தங்கினாலும், சிரமங்களை அனுபவிப்பார். இதை எல்லாருமே நடைமுறையில் பார்த்துவிட்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுகரீ என்னும் வார்த்தைக்குத் தேன் செய்யும் (வண்டு) என்று பொருள். தேனீ எவ்வாறு ஒவ்வொரு மலராகச் சென்று தேன்  செய்வதற்குண்டான மகரந்தத்தை சேகரிக்கிறதோ , அவ்வாறே பிச்சை எடுத்துப் பிழைப்பவர் ஒரே இல்லறதானைத் தொந்தரவு செய்யாமல், வீடுவீடாகச் சென்று பல இல்லங்களிலிருந்து உணவைத் தேடிக்கொள்வதே  மதுகரீ பிச்சை எனப்படும்.


Thursday, 9 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பாபா! இப்பொழுது  நான் அவசரமாகக் கிளம்பவில்லை எனில் பம்பாய் செல்லும் ரயிலைக் கோட்டை விட்டு விடுவேன் என்னுடைய உத்தியோகத்திற்கு குந்தகம் விளைந்து விடும் யஜமானர் என்னை நிச்சயமாக வேலையிலிருந்து  நீக்கிவிடுவர்." (பக்தரின் கவலை)

"இங்கு வேறு யஜமானர் எவரும் இல்லை! போய்  ஒரு சோள  ரொட்டியாவது சாப்பிடு மதிய உணவு உண்டபிறகு போ! (பாபாவின் பதில்)

இந்த ஆக்ஞையை  மீறுவதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? சிறியவர்கள், பெரியவர்கள், விவேகமுள்ளவர்கள், நல்லது-கெட்டது  தெரிந்தவர்கள், அனைவரும் சுயானுபவத்தால்  உண்மை நிலையை அறிந்திருந்தனர்.

பாபாவினுடைய  ஆக்ஞைக்கு அடிபணிந்தவர்கள் ரயிலை ஒருபோதும் தவற விட்டதில்லை ஆக்ஞையை அலட்சியம் செய்தவர்கள் நிச்சயமாக பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டார்கள்
இம்மாதிரி  அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனை எத்தனையோ! ஒவ்வொன்றும் புதியது தனித்தன்மை வாய்ந்தது. இவற்றைச் சுருக்கமாக சொல்லுவேன்.

ஹெமாத் இப்பொழுது சாயி பாதங்களில் சரணடைகிறேன் அடுத்த அத்தியாயத்தில், ஷிர்டியில் இருந்து வீடு திரும்புவதற்கு பக்தர்கள் பாபாவின் அனுமதியைப் பெற வேண்டியதின் முக்கியத்துவம் விவரிக்கப்படும்.

பாபாவினுடைய  அனுமதி பெற்றவர்கள் வீடு திரும்பியதையும், அனுமதி கிடைக்காவதர்கள் ஷிர்டியிலேயே தங்கிவிட்டதையும், பாபாவின் ஆக்கையை மதிக்காதவர்கள் எவ்வாறு அபாயங்களில் மாட்டிக்கொண்டனர் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்
அதுபோலவே, பாபா எவ்வாறு மதுகரீ பிக்ஷை எடுத்தார் என்பதுபற்றியும், ஏன் பாபா பிச்சை எடுத்து உண்டார் என்பது பற்றியும் பஞ்சசூனா பாவ நிவர்திபற்றியும் பிற்பாடு விளக்கப்படும்
ஆகவே கதை கேட்பவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு கணமும் கவனத்துடன் உங்களுடைய நன்மைக்காகவும் நல்வாழ்வுக்காவும் சாயி சரித்திரத்தை கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட "ஸ்ரீ சமர்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில், "நரஜன்ம மகிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மகால்சாப்தியுடனும் மசூதியில் உறங்கியது" என்னும் எட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்



Thursday, 2 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

எவ்வாறு கண்பத் கோதே பாடீல் (ஷிர்டியை சேர்ந்தவர்) என்ற பக்தர் மீது பாபா விருப்பம் செலுத்தினாரோ, அவ்வாறே குசால்சந்தின் சிறிய தகப்பனாரின்மீதும் அவர் மிகப் பிரீதியுடையவராக இருந்தார்

மார்வாடி சமூகத்தவராக இருந்தாலும் அவர் பாபாவை மிக விரும்பினார் இருவரும் அடிக்கடி சந்தித்தனர்; பரஸ்பரம் மகிழ்ச்சியடைந்தனர்.

சில காலத்திற்குப் பிறகு, பெரிய சேட்  ஸ்ரீ ஹரியினுடைய இச்சைப்  படி வைகுண்ட பதவி யடைந்தார் ஆனால், பாபா இந்த நட்பை மறக்க வில்லை. வாஸ்தவத்தில் இக் குடும்பத்தின் மீது பாபா வைத்திருந்த அக்கறை பன்மடங்காகியது.

இதற்குப் பிறகும் பாபா குசால்சந்தின்மேல் வைத்திருந்த பிரேமை வளர்ந்தது. பாபா ஜீவிதமாக இருந்தவரை குசால்சந்தின் நல்வாழ்வை இரவுபகலாக கவனித்துக் கொண்டிருந்தார்.

தம் அன்பர்களுடன் சுமார் ஒன்றரை மைலுக்கப்பாலிருந்த  ரஹாதாவிருகுச் சில சமயங்களில் மாட்டுவண்டியிலும் சில சமயங்களில் குதிரை வண்டியிலும் பாபா செல்வார்.

கிராம எல்லையில் வாத்திய கோஷங்களோடு கிராம மக்களால் பாபா வரவேற்கப் படுவார். பிறகு, கிராம மக்கள் பிரேமையுடன் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்குவர்
அங்கிருந்து பாபா ஆனந்தம் பொங்கும் ஆஅடல் பாடல்களுடன் கிராமத்தினுள் மரியாதையாக அழைத்து செல்லப் படுவார்.

பிறகு, குசால்சந்த் பாபாவைத் தம்முடைய இல்லத்தினுள் அழைத்துச் சென்று சுகமான ஆசனத்தில் உட்காரவைத்து விட்டுச் சிதறுண்டு ஏதாவது கொடுப்பார்.

இருவரும் பழைய நினைவுகளை பேசுவர்; மிகுந்த சந்தோஷத்தை அடைவர். அவர்களுடைய மகிழ்ச்சியை யாரால் வர்ணிக்க முடியும்!

மகிழ்ச்சி நிரம்பிய இந்தச் சந்திப்பு, பழ ஆயிரம் சாப்பிடுதல் ஆகியவை முடிந்தபிறகு, பாபா  அன்பர்களோடு தம்மிலே மூழ்கிய ஆனந்தத்துடன் திரும்பி ஷீரடிக்கு வருவார்.

ரஹாதா கிராமம் ஒரு திசையில் இருந்தது; நிம்காங்க்வ் கிராமம் மற்றொரு திசையில் இருந்தது. இரண்டுக்கும் நடுவில் ஷிர்டி கிராமம் இருந்தது.

மையமான ஷிர்டியில் இருந்து பாபா அவருடைய வாழ்நாளில் இவ்விரண்டு கிராமங்களை தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. இருப்பினும் அவருக்கு எங்கு நடக்கும் விஷயங்களும் (எல்லாமே) தெரிந்திருந்தன.

அவர் வேறெந்த ஊருக்கும் போனது கிடையாது; ரயிலையும் பார்த்தது கிடையாது. ஆனால், ரயில்கள் வரும் நேரம், கிளம்பும் நேரம், கால அட்டவணை அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

நேரத்தில் ரயிலைப் பிடிப்பதற்காக பக்தர்கள் ஏற்பாடுகளை மும்முரமாக செய்வார்கள். வீடு திரும்ப பாபாவினுடைய  அனுமதியை வேண்டி அவர்கள் சென்றபோது, "ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்" என்றுதான் கேட்பார் பாபா.