valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தம்மிலேயே மூழ்கி எந்நேரமும் 'அல்லா மாலிக்' ஜபம் செய்பவருக்கு, சன்னிதானத்தில் பக்தர்கள் இருப்பது எப்படி ஒரு பிரதிபந்தமாக (மாற்றுத் தளையாக - தடையாக) ஆக முடியும்?

அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சமே இல்லாமற்போய் வீடுபேற்றில் உறைந்துவிட்டார். 'இரண்டுண்டு' என்னும் பாவம் வேருடன் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது. தம்முடைய நிஜமான சொரூபத்திலேயே மூழ்கியிருந்தார்.

இதில் ஒவ்வொரு அக்ஷரமும் சத்தியம்; அணுவளவும் அசத்தியம் இல்லை. ஆயினும் உலகத்திற்கு வழிகாட்டுவதால்தான், ஞானியர் தங்களுடைய அவதார நோக்கமான கடமையை நிறைவேற்றியவர்கள் ஆகின்றனர்.

ஞானிகள் ஆறு குணதோஷங்களிலிருந்தும் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை) விடுபட்டவர்கள். நிரந்தரமாக உருவமற்ற நிலையில் இருப்பவர்கள். பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே உருவம் ஏற்பவர்கள். அவர்களுக்கு ஏது மரணம்?

தேகமும் இந்திரியங்களும் ஒன்றுசேர்வது ஜனனம்; அவை பிரிவது மரணம். பாசபந்தங்களில் மாட்டிக்கொள்வது ஜனனம்; அவற்றிலிருந்து விடுபடுவது மரணம்.

பிறப்பை இறப்பு தவிர்க்கமுடியாதவாறு தொடர்கிறது; ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கமுடியாது. ஜீவனுடைய இயற்கையான லக்ஷணம் மரணம் நிலை; ஜீவன் உயிருடன் இருப்பது செயற்கையான நிலை.

தம்மிச்சையாக அவதாரம் செய்பவர்களுக்கும், காலனின் தலைமேல் காலை வைத்து மரணத்தை அடித்து வீழ்த்தும் சக்தி பெற்றவர்களுக்கும், வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் என்பது பற்றி என்ன விசாரம்!

பக்தர்களுக்கு மங்களம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பத்தால் பல அவதாரங்கள் எடுப்பவர்களை ஜனனமும் மரணமும் எப்படிக் கட்டிவைக்க முடியும்? இரண்டுமே மாயையான கற்பனைகள் அல்லவோ?

தேகம் கீழே விழுவதற்கு முன்னமேயே தேஹத்தைச் சாம்பலாக்கிவிட்டவருக்கு மரணம் பற்றி என்ன பயம்? அவர் மரணத்தை வென்றவர் அல்லரோ?

மரணமே தேகத்தின் இயற்கையான நிலை. மரணமே தேகத்தின் சுகமான நிலை. உயிரோடு இருப்பதுதான் தேகத்தின் செயற்கையான நிலை. இது சிந்தனையாளர்களின் கருத்து.

ஜன்மமென்பது என்னவென்று அறியாத ஆனந்தமோஹனமான சமர்த்த சாயிநாதரின் உடல் எவ்வாறு மரணமடைய முடியும்? தேகம் என்று ஒன்று இருக்கிறது என்ற உணர்வை உதறியவல்லரோ சாயி!

சாயீ பூரணமான பாரா பிரம்மம். அவருக்கேது ஜனனமும் மரணமும்? 'பிரம்மமே சத்தியம்; ஜகமனைத்தும் மாயை' என்றுணர்ந்தவருக்கு உடலைப்பற்றிய உணர்வு ஏது?

அவர் பிராணனைத் தரித்ததும், ஒரு நிலையில் அதை விடுத்ததும், ஏறும் காணமுடியாதவாறு உலகெங்கும் சுற்றிவந்ததும், அவருடைய யோகசக்தியால் விளைந்த, பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே செய்யப்பட்ட லீலைகள்.