valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவ் பதில் கூறினார், "இங்கே, நான் இங்கேதான் இருக்கின்றேன் பாபா".பாபா அவரை வினவினார், "ஏன் எனக்கு ஏழு ரூபாய்தான் கொடுத்தீர்?"

தேவ் சொன்னார், "நான் இருப்பது ரூபாய் கொடுத்தேன் பாபா." பாபா கேட்டார், "இது யாருடைய பணம்?" தேவ் சொன்னார், "பாபா, இது தங்களுடைய பணம். " பாபா கேட்டார், "அப்படியானால் நீர் ஏன் நழுவப்பார்க்கிறீர்?-

"வாரும், இங்கு வந்து என்னருகில் அமைதியான மனத்துடன் உட்காரும்". தேவ் பாபாவின் ஆணைக்கு அடிபணிந்தார்.

நித்திய நியமத்தின்படி ஹாரதி நடந்து முடிந்தது. கூடியிருந்தவர்கள் அவரவர் இல்லங்களுக்கு திரும்பினர். தேவ், பாலக்ராமைச் சந்தித்து முன்பு கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டார்.

அவரிடம் பூர்வ விருத்தாந்தத்தைச் சொல்லும்படி கேட்டார். பாலக்ராமும் பழைய நிகழ்ச்சியை ஆதியோடந்தமாக விவரித்தார். தேவ் அவரை மேலும் வினவினார். "பாபா எப்படி உங்களை உபாசனை மார்க்கத்தில் வழிகாட்டினார்?-

"பிரம்ம சிந்தனை எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்தாரா? என்னுடைய ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுங்கள் !" தேவ் மிகப் பணிவாகப் பிரார்த்தனை செய்தார்.

பாலகிராம் தேவின் ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுவதற்காகப் பேச ஆரம்பித்தபோது பாபாவே பாலா சாஹேப் தேவைக் கூப்பிட்டனுப்பினார்.

சாயி பேரன்புடையவர் அல்லரோ! தேவை அழைத்து வருவதற்காக சந்த்ரூவை அனுப்பினார். ஒருகணமும் தாமதியாது. தேவ் பாபாவைக் காண்பதற்கு வந்தார்.

அப்பொழுது மாலை நான்கு மணி ஆகியிருந்தது. சாயி மசூதியின் கைப்பிடிச்சுவரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டிருந்தததை தேவ் கண்டார்.

அங்கே சென்றவுடன் தேவ் வந்தனம் செய்தார். பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார், "நீர் யாரிடம், எங்கு, எதைப்பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருந்தீர்?"

தேவ் பதில் கூறினார், "நான் காகா தீக்ஷிதர் வாடா மாடியில் பாலக்ராமிடமிருந்து தங்களுடைய கீர்த்திபற்றிய சங்கதிகளை கேட்டுக்கொண்டிருந்தேன்".

"இருபத்தைந்து ரூபாய் கொண்டுவாரும்" என்று பாபா தேவுக்கு ஆணையிட்டார். உடனே தேவ் பணத்தைக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபா கேட்டார், "எத்தனை கொண்டு வந்தீர்? தேவ் சொன்னார், "இருபத்தைந்து". "வாரும், வந்து என்னுடன் உட்காரும்" என்று பாபா அழைத்தார். தேவ் பாபாவுடன் மசூதிக்குள் சென்றார்.

பாபா கம்பத்தினருகில் அமர்ந்தார். மசூதியில் வேறு எவரும் இல்லை. பாபா சொன்னார், "நீர் எனக்குத் தெரியாமல் என்னுடைய கந்தல் துணியைத் திருடிவிட்டீர்".

"எனக்குக் கந்தல் துணியைப்பற்றி ஏதும் தெரியாது" என்று தேவ் உறுதியளித்தார். ஆகவே, சாயி அவரிடம் சொன்னார், "அப்படியானால் அது இவ்விடந்தான் எங்காவது இருக்கவேண்டும்".