valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"மற்றவர்களின் கண்களுக்கு நான் இங்கிருந்து நகராததுபோலத் தெரியலாம். ஆயினும், நான் உத்தியாபன விழாவில் விருந்துண்டேன். என்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்; அவ்வாறே என்னுடன் இருவரை அழைத்துச் சென்றேன். -

"சாப்பாட்டு நேரத்திற்கு அவகாசம் இருந்தது. ஆகவே, முதலில் நான் மட்டும் சாவகாசமாகச் சென்றேன். உமக்கு சந்நியாசி வேஷம் தெரியாதா? அந்த ரீதியில் நான் முதலில் பிரவேசம் செய்தேன். -

"நான் எதிர்பாராது வந்ததைக் கண்டவுடன், பைசாவுக்காக வந்திருப்பதாக நீர் பீதியடைவில்லை? பின்னர், நான் உம்முடைய சந்தேகங்களை நிவிர்த்தி செய்தேன். -

"நான் சாப்பாட்டிற்காகத்தான் வந்திருக்கிறேனென்றும் என்னுடன் இருவரை அழைத்துவருவேன் என்றும் சொல்லவில்லையா? சொன்னவாறே  சரியான நேரத்திற்கு இருவருடன் வந்து சாப்பிடவில்லையா?-

"இதோ பாரும்; என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்தையைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய பிராணனையும் கொடுப்பேன். என்னுடைய வார்த்தை என்றுமே பொய்யாகாது. "

சாயிநாதர் இவ்வாறு சொன்னபோது ஜோக்கின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பாபா அளித்த உறுதிகள் என்றுமே வேறுவிதமாக நடந்ததில்லை. எப்பொழுதும் எல்லாருடைய அனுபவங்களும் அப்படியே!

பின்னர், மிகுந்த சந்தோசத்துடன் ஜோக் எல்லா விவரங்களையும் தேவுக்கு ஒரு நீண்ட கடிதத்தின் மூலமாகத் தெரிவித்தார்.

தேவ் அந்தக் கடிதத்தைப் படித்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார். "நான் சாயியைக் குற்றம் சொன்னது வெட்கக்கேடு!" என்று நினைத்துத் தலைகுனிந்தார்.

"சாயியின் மஹிமை மகத்தானது, எல்லாம் தெரிந்தவனென்ற என்னுடைய கர்வம் ஒரு வெட்கக்கேடு. ஆனால், அன்று வந்த சந்நியாசி பாபாதான் என்று நான் எப்படி அனுமானம் செய்திருக்கமுடியும் என்று எனக்கு விளங்கவில்லையே?-

"நான் பாபாவை உத்தியாபன விழாவிற்கு அழைப்பதற்கு முன்பாகவே சந்நியாசி அவருடைய முதல் விஜயத்தை முடித்துவிட்டாரே! அதுவும் நிதி திரட்டுவதற்காக வன்றோ விஜயம் செய்தார்?-

"நான் ஏற்கெனவே அவரை இரண்டு-நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். அதே சந்நியாசி, அந்தக் காலகட்டத்திற்கு முன்பாகவே வந்து, சாப்பாடுதான் வேண்டுமென்று கேட்டால் நான் எப்படி அவர்தான் பாபாவேன்று யூகிக்க முடியும்?-

"ஆனால், 'நான் மதியம் சாப்பிட வரும்போது என்னுடன் இரண்டு பேர்கள் வருவார்கள்' என்று பாபா சொன்ன வார்த்தையைப் புரிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டுவிட்டேன். -

"பாபாவுக்கு அழைப்பு விடுத்த பிறகு, சந்நியாசி முதன்முறையாக, அதுவும் சாப்பாட்டிற்கென்று வந்திருந்தால் நான் இவ்வாறு ஏமாறியிருக்க மாட்டேன்.-