ஷீர்டி சாயி சத்சரிதம்
மேகா இரவுபகலாக சாயிசங்கர நாமகோஷம் செய்தார். அவருடைய புத்தி ஸாயியில் ஒன்றிவிட்டது. கரைகளும் குறைகளும் வெளியேறி மனம் தூய்மையடைந்தது.
சாயியை கண்ணுக்கெதிரே தெரியும் சங்கரராகப் பாவித்ததால், சாயியின் அனன்னிய பக்தரானார். சங்கர, சங்கர, என்று எந்நேரமும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். வேறெந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சாயியே அவர் தினமும் பூஜை செய்யும் தெய்வம். சாயியே கிரிஜாரமணன் (சிவன்). இந்த மனோபாவம் வேரூன்றிய பிறகு மேகா சதாசர்வ காலமும் சந்தோஷமாக இருந்தார்.
சிவனுக்கு வில்வத்தின் மீது பிரியம்; ஆனால், ஷிர்டியில் வில்வமரம் இல்லை. வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்று ஆவலைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் தினமும் இரண்டு மூன்று மைல்கள் நடப்பார் மேகா.
இரண்டு மூன்று மைல்கள் நடப்பது என்ன பெரிய காரியம்? வில்வதளங்களை கொணர்ந்து சிறப்பாக சிவபூஜை செய்து திருப்தியடைய, மலையை கடக்கவும் அவர் தயாராக இருந்தார்.
வெகுதூரம் நடந்துசென்று வில்வதளங்களை கொணர்ந்து இதர பூஜை சாமான்களையும் சேகரித்துக்கொண்டு, கிராமத்து தேவதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் சாஸ்திர விதிகளின்படி பூஜை செய்வார்.
இது முடிந்தவுடன் மசூதிக்கு செல்வார். பாபா அமரும் இருக்கைக்கு அன்புடன் நமஸ்காரம் செய்வார். பிறகு பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டு விட்டு பாத தீர்த்தத்தை (பாதங்களை கழுவிய நீர்) முதலாக அருந்துவார்.
மேகாவைப் பற்றி, கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய கதைகள் பல உண்டு. இக் கதைகள் சாயியின் எங்கும் நிறைந்த சக்தியையும் சாயி கிராம தேவதைகள் மீது வைத்திருந்த பக்தியையும் எடுத்துக் காட்டும்.
மேகா உயிர் வாழ்ந்தவரை தினமும் மதிய ஆரத்தியை அவரே செய்தார். கிராம தேவதைகளின் பூஜையை முதலில் முடித்துக்கொண்டு, கடைசியாக மசூதிக்குச் செல்வார்.
இதுவே அவருடைய தினப்படி நடவடிக்கையாக இருந்தது. ஒருநாள், இந்தக் கிரமம் தவறி விட்டது. எவ்வளவு முயன்றும் கண்டோபா பூஜையை அன்று செய்ய முடியவில்லை.
அன்றும் நித்திய கிரமப்படி பூஜை செய்ய விரும்பினார். ஆனால், எவ்வளவு பிரயத்தனம் செய்தபோதிலும் கோயிலின் கதவுகளை திறக்க முடியவில்லை. ஆகவே, பூஜையைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டு மசூதிக்கு ஆரத்தியுடன் வந்தார்.
பாபா உடனே விளம்பினார், "இன்று உம்முடைய நித்திய பூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டீர்; ஆனால், ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப்படாமலேயே இருக்கிறது. -
மேகா இரவுபகலாக சாயிசங்கர நாமகோஷம் செய்தார். அவருடைய புத்தி ஸாயியில் ஒன்றிவிட்டது. கரைகளும் குறைகளும் வெளியேறி மனம் தூய்மையடைந்தது.
சாயியை கண்ணுக்கெதிரே தெரியும் சங்கரராகப் பாவித்ததால், சாயியின் அனன்னிய பக்தரானார். சங்கர, சங்கர, என்று எந்நேரமும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். வேறெந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சாயியே அவர் தினமும் பூஜை செய்யும் தெய்வம். சாயியே கிரிஜாரமணன் (சிவன்). இந்த மனோபாவம் வேரூன்றிய பிறகு மேகா சதாசர்வ காலமும் சந்தோஷமாக இருந்தார்.
சிவனுக்கு வில்வத்தின் மீது பிரியம்; ஆனால், ஷிர்டியில் வில்வமரம் இல்லை. வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்று ஆவலைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் தினமும் இரண்டு மூன்று மைல்கள் நடப்பார் மேகா.
இரண்டு மூன்று மைல்கள் நடப்பது என்ன பெரிய காரியம்? வில்வதளங்களை கொணர்ந்து சிறப்பாக சிவபூஜை செய்து திருப்தியடைய, மலையை கடக்கவும் அவர் தயாராக இருந்தார்.
வெகுதூரம் நடந்துசென்று வில்வதளங்களை கொணர்ந்து இதர பூஜை சாமான்களையும் சேகரித்துக்கொண்டு, கிராமத்து தேவதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் சாஸ்திர விதிகளின்படி பூஜை செய்வார்.
இது முடிந்தவுடன் மசூதிக்கு செல்வார். பாபா அமரும் இருக்கைக்கு அன்புடன் நமஸ்காரம் செய்வார். பிறகு பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டு விட்டு பாத தீர்த்தத்தை (பாதங்களை கழுவிய நீர்) முதலாக அருந்துவார்.
மேகாவைப் பற்றி, கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய கதைகள் பல உண்டு. இக் கதைகள் சாயியின் எங்கும் நிறைந்த சக்தியையும் சாயி கிராம தேவதைகள் மீது வைத்திருந்த பக்தியையும் எடுத்துக் காட்டும்.
மேகா உயிர் வாழ்ந்தவரை தினமும் மதிய ஆரத்தியை அவரே செய்தார். கிராம தேவதைகளின் பூஜையை முதலில் முடித்துக்கொண்டு, கடைசியாக மசூதிக்குச் செல்வார்.
இதுவே அவருடைய தினப்படி நடவடிக்கையாக இருந்தது. ஒருநாள், இந்தக் கிரமம் தவறி விட்டது. எவ்வளவு முயன்றும் கண்டோபா பூஜையை அன்று செய்ய முடியவில்லை.
அன்றும் நித்திய கிரமப்படி பூஜை செய்ய விரும்பினார். ஆனால், எவ்வளவு பிரயத்தனம் செய்தபோதிலும் கோயிலின் கதவுகளை திறக்க முடியவில்லை. ஆகவே, பூஜையைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டு மசூதிக்கு ஆரத்தியுடன் வந்தார்.
பாபா உடனே விளம்பினார், "இன்று உம்முடைய நித்திய பூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டீர்; ஆனால், ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப்படாமலேயே இருக்கிறது. -