ஷீர்டி சாயி சத்சரிதம்
அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புத்தர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.
அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.
அந்தச் சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். நாமத்தின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது.
சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுபவனவே. சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!
இந்தப் பையனின் தகப்பனார்தான் தீவிர பாபா பக்தர்; தைரியசாலி; உதாரகுணம் படைத்தவர். சத்தியசீலர். ஆனால், முதுமையால் அவருடைய உடல்நலம் சீரழிந்துவிட்டது. (ரகுநாத் ராவ் டெண்டுல்கர்)
பம்பாய் நகரத்தில் ஒரு பிரபலமான வெளிநாட்டு வியாபார நிறுவனத்தில் அவர் பல ஆண்டுகள் யோக்கியமாகவும் விசுவாசத்துடனும் பணிபுரிந்தார்.
பின்னர், முதுமை ஏற, ஏற அவருக்கு கண்பார்வை மங்கியது. உடலின் அவயங்கள் ஓய்ந்து போயின. நிச்சலமாக ஓய்வெடுக்க விரும்பினார்.
உழைப்பதற்கு வேண்டிய சக்தி இல்லை. உடல்நிலையைத் தேற்றிக்கொள்வதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு நிம்மதியாக ஓய்வை அனுபவித்துக்கொண்டிருந்தார் ரகுநாத் ராவ்.
விடுப்பு ஒரு முடிவுக்கு வந்தபோதும், பூரணமான இளைப்பாறலும் தெம்பும் கிட்டவில்லை. ஆகவே, விடுப்பை நீடிக்க வேண்டி நிறுவனத்திற்கு ஒரு விண்ணப்பம் எழுதினார்.
மனுவைப் படித்த, ரகுநாத் ராவின் நேர் உயர் அதிகாரி விடுப்பை நீடிக்கப் பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்; தயாளர்.
பரந்த மனம் படைத்த முதலாளி. விசுவாசமாகவும் யோக்கியமாகவும் செய்யப்பட்ட சேவையைக் கருத்திற்கொண்டு பணியாளரின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சம்பளத்தில் பாதியை மாதாந்திர ஓய்வூதியமாக அன்புடன் அளிக்கிறார்.
இது அரசாங்கத்தின் செயல்முறை. மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களுங்கூட நேர்மையான பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில், சமயம் வரும்போது இம்முறையையே அனுசரிக்கின்றன.
அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புத்தர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.
அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.
அந்தச் சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். நாமத்தின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது.
சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுபவனவே. சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!
இந்தப் பையனின் தகப்பனார்தான் தீவிர பாபா பக்தர்; தைரியசாலி; உதாரகுணம் படைத்தவர். சத்தியசீலர். ஆனால், முதுமையால் அவருடைய உடல்நலம் சீரழிந்துவிட்டது. (ரகுநாத் ராவ் டெண்டுல்கர்)
பம்பாய் நகரத்தில் ஒரு பிரபலமான வெளிநாட்டு வியாபார நிறுவனத்தில் அவர் பல ஆண்டுகள் யோக்கியமாகவும் விசுவாசத்துடனும் பணிபுரிந்தார்.
பின்னர், முதுமை ஏற, ஏற அவருக்கு கண்பார்வை மங்கியது. உடலின் அவயங்கள் ஓய்ந்து போயின. நிச்சலமாக ஓய்வெடுக்க விரும்பினார்.
உழைப்பதற்கு வேண்டிய சக்தி இல்லை. உடல்நிலையைத் தேற்றிக்கொள்வதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு நிம்மதியாக ஓய்வை அனுபவித்துக்கொண்டிருந்தார் ரகுநாத் ராவ்.
விடுப்பு ஒரு முடிவுக்கு வந்தபோதும், பூரணமான இளைப்பாறலும் தெம்பும் கிட்டவில்லை. ஆகவே, விடுப்பை நீடிக்க வேண்டி நிறுவனத்திற்கு ஒரு விண்ணப்பம் எழுதினார்.
மனுவைப் படித்த, ரகுநாத் ராவின் நேர் உயர் அதிகாரி விடுப்பை நீடிக்கப் பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்; தயாளர்.
பரந்த மனம் படைத்த முதலாளி. விசுவாசமாகவும் யோக்கியமாகவும் செய்யப்பட்ட சேவையைக் கருத்திற்கொண்டு பணியாளரின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சம்பளத்தில் பாதியை மாதாந்திர ஓய்வூதியமாக அன்புடன் அளிக்கிறார்.
இது அரசாங்கத்தின் செயல்முறை. மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களுங்கூட நேர்மையான பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில், சமயம் வரும்போது இம்முறையையே அனுசரிக்கின்றன.