valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 December 2023

ஷீர்டி சாயி சத்சரிதம்


42 . மஹாசமாதி (முதற் பகுதி)


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி! கொடைவள்ளலே! புண்ணிய நதி கோதாவரியின் கரையில் வசிப்பவரே! உருவமேற்ற பிரம்மமே! கோவணம் அணிந்தவரே!  ஞானிகளில் தலைசிறந்தவரே! உம்மை வணங்குகிறேன்.

ஞானியாக அவதாரம் செய்த சாயியே பிறவிக் கடலைக் கடக்க வழிகாட்டுவார்; பாதங்களால் தீனர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்; பக்தர்களின் நிஜமான கற்பக விருட்சம்.

கடந்த அத்தியாயத்தில், அவருடைய புடைச்சிற்பம் தண்ணீரில் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்ட அற்புதமான லீலை விவரிக்கப்பட்டது.

அதுபோலவே, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அவருக்குத் தெளிவாக அறிவுரை வழங்கி, ஞானேச்வரி பாராயணத்தை தொடர்வதற்கு அருள் செய்து, அவருடைய ஆசையை பூர்த்திபண்ணிய விவரமும் சொல்லப்பட்டது.

சாராம்சம் என்னவெனில், குருவின் கிருபை உதித்தவுடன் உலகவாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது; மோட்சத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன. துன்பமெல்லாம் இன்பமாகிறது!

எந்நேரமும் சத்குருவின் பாதங்களை நினைத்துக்கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விலகுகின்றன; வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன; மரணத்திற்கு மரணம் ஏற்படுகிறது!

ஆகவே, கதைகேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி சமர்த்தரின் கதைகளைக் கேட்கவேண்டும். கேட்பவர்களை அவை மிகப் புனிதர்களாக ஆக்கும்.

இந்த அத்தியாயத்தில், சாயியின் இயல்பைத் பாப்போம். அவர் கடுமையான இதயம் படைத்தவரா; மென்மையானவரா?

இதுவரை நீங்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் சாயியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கேட்டீர்கள். இப்பொழுது, அவர் உடலை உகுத்த சரித்திரத்தைக் கவனமாக கேளுங்கள்.

பாபாவுடன் சமகாலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சுகத்தை அனுபவித்த ஷீர்டி மக்கள் எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்!