ஷீர்டி சாயி சத் சரிதம்
ஒரு சமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட சாயி பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.
அவரை சந்திப்பதற்கு வந்த மாதவ்ராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்கு சென்ற போதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார். -
"சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?" சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தை தம் கையில் எடுத்துப் புரட்டி பார்த்துவிட்டுத் திருப்பித் கொடுத்தார்.
ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடம் இருந்து பிரசாதமாக பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.
மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனி யினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆவல் யதேச்சையாக தோன்றியதால், கையிலெடுத்திக்கொண்டு வந்ததாகவும் விளக்காமாகச் சொன்னார்.
இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், "நான் இதை உனக்கு கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்".
இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி ஷிர்டிக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை சாயியின் கரங்களில் வைத்தார்.
பாபா அவருக்கு அதை பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், "இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்". இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதல் அளிக்கப்பட்டார்.
பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், "இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்". இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.
பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் ஆதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களை (புத்தகங்களை) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?
பாபாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.
ஷீர்டி இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களில் இருந்து வந்து இங்கே திரும்பத் திரும்ப கூடுவர்; ஆன்மீக விஷயங்களை பற்றிக் கலந்து ஆலோசிப்பர்.
ஒரு சமயம், பாகவத பாராயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட சாயி பக்தரொருவர், காகா மஹாஜனி என்ற பெயர் கொண்டவர், பாகவத புத்தகப் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு ஷிர்டிக்கு வந்தார்.
அவரை சந்திப்பதற்கு வந்த மாதவ்ராவ், தற்செயலாக அப் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தார். மசூதிக்கு சென்ற போதும் கையில் புத்தகம் இருந்தது. பாபா அவரைக் கேட்டார். -
"சாமா, இதென்ன புத்தகம் உன் கையில்?" சாமா பதில் சொன்னார். பாபா புத்தகத்தை தம் கையில் எடுத்துப் புரட்டி பார்த்துவிட்டுத் திருப்பித் கொடுத்தார்.
ஒரு காலத்தில் காகா மஹாஜனி பாபாவிடம் இருந்து பிரசாதமாக பெற்றுக்கொண்ட ஏகநாத பாகவதத்தின் பிரதியே அப்புத்தகம்.
மாதவராவ், புத்தகம் தம்முடையதில்லையென்றும் காகா மஹாஜனி யினுடையது என்றும் பாபாவுக்குத் தெளிவுபடுத்தினார். படிக்க வேண்டுமென்ற ஆவல் யதேச்சையாக தோன்றியதால், கையிலெடுத்திக்கொண்டு வந்ததாகவும் விளக்காமாகச் சொன்னார்.
இருந்தபோதிலும் பாபா சாமாவிடம் கூறினார், "நான் இதை உனக்கு கொடுக்க நேர்ந்ததால் உன்னுடைய சேகரிப்பில் இதை வைத்துக்கொள். உனக்கு உபயோகப்படும்".
இவ்வாறு நடந்ததால், சிலகாலம் கழித்துக் காகா மஹாஜனி ஷிர்டிக்கு மறுபடியும் விஜயம் செய்தபோது, தாம் வாங்கிக்கொண்டு வந்த புதியதொரு ஏகநாத பாகவதப் பிரதியை சாயியின் கரங்களில் வைத்தார்.
பாபா அவருக்கு அதை பிரசாதமாகத் திருப்பிக் கொடுத்தார். கொடுக்கும்போது ஆக்கினையாகச் சொன்னார், "இதை மிக பத்திரமாக வைத்துக்கொள்ளும். இது உமக்கு உண்மையாகவே மிகவும் உபயோகமாக இருக்கும்". இவ்வாறு காகா மஹாஜனி ஆறுதல் அளிக்கப்பட்டார்.
பாபா மிகவும் மனம் கனிந்து மேலும் கூறினார், "இதுதான் உமக்கு நன்கு பணி புரியும்; இதை வேறு யாரிடமும் கொடுக்காதீர்". இதைக் கேட்ட காகா மஹாஜனி பிரேமையுடன் வந்தனம் செய்தார்.
பாபா எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் ஆதலால், முழுக்க முழுக்க விருப்பமேதுமில்லாதவர். இயற்கையாகவே துறவு தர்மத்தை அனுசரித்த பாபா, உலகியல் பொருள்களை (புத்தகங்களை) சேகரிப்பதில் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டார்?
பாபாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்? நடைமுறை ரீதியில் பார்த்தால், இப் புத்தக வங்கி பக்தர்கள் புராணங்களைக் காதால் கேட்டு இன்புறவும் பயனடையவும் உதவியாக இருந்தது.
ஷீர்டி இப்பொழுது ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களில் இருந்து வந்து இங்கே திரும்பத் திரும்ப கூடுவர்; ஆன்மீக விஷயங்களை பற்றிக் கலந்து ஆலோசிப்பர்.