ஷீர்டி சாயி சத் சரிதம்
குரு என்ன விரும்புகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அவர் வாய்திறந்து சொல்வதற்கு முன்பே சேவையை ஆரம்பித்துச் செய்பவனை உத்தம சிஷ்யன் என்று அறிக.
குருவின் ஆணையை அட்சர சுத்தமாகத் தெரிந்துகொண்டு, காலங்கடத்தாது உடனே சேவையில் ஈடுபடுபவனை மத்திம சிஷ்யன் என்று அறிக.
குரு திரும்ப திரும்பச் சொன்னபிறகும், செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு படியிலும் தடுக்கி விழுபவனை அதம சிஷ்யன் என்று அறிக.
பரம வைராக்கியம் (ஆசையற்ற நிலை) மனத்துள்ளே இல்லை; எது நித்தியம் (சாசுவதம்), எது அநித்தியம் என்னும் விவேகமும் இல்லை. இம் மனிதருக்கு ஜென்மம் முழுவதும் தேடினாலும் குருவின் அருள் எப்படிக் கிடைக்கும்?
குருவின் பாதங்களில் நிரந்தரமாக மனதை இருத்தியவரின் இச்சைகளை இறைவன் பூர்த்திசெய்கிறான். பராத்பரன் (பரமேஸ்வரன்) அவரைச் சலனமில்லாத வராகவும் ஆசைகளில் இருந்து விடுபட்டவராகவும் மாற்றிவிடுகிறான்.
சிரத்தை நிர்மலமாகவும் பலமாகவும் இருக்க வேண்டும். கூடவே பிரக்ஞய்யின் (உள்ளுணர்வின்) பலமும் வேணும். இவை இரண்டுடன் சபூரியும் (ஆடாத, அசையாத தீரமும்) சேர வேண்டும். ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.
மூச்சையடக்கும் முயற்சி இங்கே தேவையில்லை. பிராணாயாமம், ஹடயோகம், சமாதி நிலை, உலகவுணர்வுக்குத் திரும்புதல், இதெல்லாம் நம்மால் முடியாத காரியம்.
சிஷ்யன் என்னும் பூமி தயாரானவுடன் குருவின் இடமிருந்து விதையைப் பெற்றுக் கொள்ள அதிக நாள்கள் ஆவதில்லை. ஏனெனில், குரு அனுக்கிரஹம் செய்வதெற்கென்றே ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்.
உருவத்தோடு கூடிய இறைவனின் பிரதட்சயமான காட்சியை உணமையான பக்தர்களே காண முடியும். பாவனை உள்ளவர்களுக்கே பக்தி பொங்கும்; மற்றவர்கள் நடிப்பு யுக்தியைத்தான் கையாள வேண்டும்!.
பாபா பிறகு காகவிடம் சொன்னார், "இந்தக் குடுவை நீரைக் கையில் வைத்துக்கொள்ளும். நான் இப்பொழுது ஹலால் செய்து ஆட்டிற்கு நற்கதியளிக்கிறேன்".
ஆட்டுக்கடா மரணத்தருவாயில் இருந்தது. பக்கீர் பாபாவுக்கு (படே பாபாவுக்கு ) சமயோசிதமான யோசனை ஒன்று தோன்றியது. அருகில் ஒரு தகியா (பக்கீர்கள் ஓய்வெடுக்கும் இடம்) இருந்தது.
ஆகவே, அவர், 'ஆட்டை தகியாவில் பலியிடலாமா?' என்று பாபாவை யோசனை கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்றபின், ஆட்டைத் தகியாவுக்கு கொண்டுபோகும் முயற்சியில் அவ்விடத்தில் இருந்து நடத்தியபோது ஆடு இயற்கையாகவே மரணமடைந்தது.
ஆடு மரணமடைவது தவிர்க்க முடியாதது என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. ஆயினும் அந்த வேளையை உபயோகித்து பாபா ஒரு லீலை புரிந்தார்.
குரு என்ன விரும்புகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அவர் வாய்திறந்து சொல்வதற்கு முன்பே சேவையை ஆரம்பித்துச் செய்பவனை உத்தம சிஷ்யன் என்று அறிக.
குருவின் ஆணையை அட்சர சுத்தமாகத் தெரிந்துகொண்டு, காலங்கடத்தாது உடனே சேவையில் ஈடுபடுபவனை மத்திம சிஷ்யன் என்று அறிக.
குரு திரும்ப திரும்பச் சொன்னபிறகும், செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு படியிலும் தடுக்கி விழுபவனை அதம சிஷ்யன் என்று அறிக.
பரம வைராக்கியம் (ஆசையற்ற நிலை) மனத்துள்ளே இல்லை; எது நித்தியம் (சாசுவதம்), எது அநித்தியம் என்னும் விவேகமும் இல்லை. இம் மனிதருக்கு ஜென்மம் முழுவதும் தேடினாலும் குருவின் அருள் எப்படிக் கிடைக்கும்?
குருவின் பாதங்களில் நிரந்தரமாக மனதை இருத்தியவரின் இச்சைகளை இறைவன் பூர்த்திசெய்கிறான். பராத்பரன் (பரமேஸ்வரன்) அவரைச் சலனமில்லாத வராகவும் ஆசைகளில் இருந்து விடுபட்டவராகவும் மாற்றிவிடுகிறான்.
சிரத்தை நிர்மலமாகவும் பலமாகவும் இருக்க வேண்டும். கூடவே பிரக்ஞய்யின் (உள்ளுணர்வின்) பலமும் வேணும். இவை இரண்டுடன் சபூரியும் (ஆடாத, அசையாத தீரமும்) சேர வேண்டும். ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.
மூச்சையடக்கும் முயற்சி இங்கே தேவையில்லை. பிராணாயாமம், ஹடயோகம், சமாதி நிலை, உலகவுணர்வுக்குத் திரும்புதல், இதெல்லாம் நம்மால் முடியாத காரியம்.
சிஷ்யன் என்னும் பூமி தயாரானவுடன் குருவின் இடமிருந்து விதையைப் பெற்றுக் கொள்ள அதிக நாள்கள் ஆவதில்லை. ஏனெனில், குரு அனுக்கிரஹம் செய்வதெற்கென்றே ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்.
உருவத்தோடு கூடிய இறைவனின் பிரதட்சயமான காட்சியை உணமையான பக்தர்களே காண முடியும். பாவனை உள்ளவர்களுக்கே பக்தி பொங்கும்; மற்றவர்கள் நடிப்பு யுக்தியைத்தான் கையாள வேண்டும்!.
பாபா பிறகு காகவிடம் சொன்னார், "இந்தக் குடுவை நீரைக் கையில் வைத்துக்கொள்ளும். நான் இப்பொழுது ஹலால் செய்து ஆட்டிற்கு நற்கதியளிக்கிறேன்".
ஆட்டுக்கடா மரணத்தருவாயில் இருந்தது. பக்கீர் பாபாவுக்கு (படே பாபாவுக்கு ) சமயோசிதமான யோசனை ஒன்று தோன்றியது. அருகில் ஒரு தகியா (பக்கீர்கள் ஓய்வெடுக்கும் இடம்) இருந்தது.
ஆகவே, அவர், 'ஆட்டை தகியாவில் பலியிடலாமா?' என்று பாபாவை யோசனை கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்றபின், ஆட்டைத் தகியாவுக்கு கொண்டுபோகும் முயற்சியில் அவ்விடத்தில் இருந்து நடத்தியபோது ஆடு இயற்கையாகவே மரணமடைந்தது.
ஆடு மரணமடைவது தவிர்க்க முடியாதது என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. ஆயினும் அந்த வேளையை உபயோகித்து பாபா ஒரு லீலை புரிந்தார்.