valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

1916 ஆம் ஆண்டில் அவருடைய துன்பங்களும் வாழ்க்கையின் மீது வெறுப்பும் உச்சநிலையை எய்தின. புனிதமான ஷிர்டியிலேயே பிராணனை விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

அச்சமயத்தில் அவர் குடும்பத்துடன் ஷிர்டியில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஓரிரவு என்ன நடந்ததென்று கேளுங்கள்.

தீக்ஷிதர் வாடாவுக்கு எதிரே நிறுத்தியிருந்த ஒரு மாட்டு வண்டியின் மேல் ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்தார். மனத்துள்ளே கட்டுக்கடங்காத எண்ணங்கள் ஓடின.

ஆர்வம் இழந்துபோய் மனமுடைந்து வாழ்க்கையையே வெறுத்தார். அவர் எண்ணினார், "போதும், போதும், இந்தத் துன்பங்கள். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது."

இவ்வாறு நினைத்து வாழ்க்கையையே வெறுத்து ஆம்ப்ட்டேகர் கிணற்றில் குதித்துவிடத் தயாரானார்.

அவர் நினைத்தார், "யாரும் அருகில் இல்லை. அமைதியான இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வேன். துன்பங்களில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபடுவேன்."

தற்கொலை செய்துகொள்வது மஹாபாவம்; ஆயினும் அவர் இந்த உறுதியான முடிவை எடுத்தார். ஆனால், சூத்ரதாரியான சாயி பாபா இந்த மூடத்தனமான செயலைத் தடுத்துவிட்டார்.

ஆம்ப்ட்டேகர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில், உணவுவிடுதி முதலாளியான சகுணமேரு நாயக்கரின் வீடு இருந்தது. சகுண, பாபாவின் நெருங்கிய பக்தர்; சேவகர்.

சகுண திடீரென்று வீட்டின் வாயிற்படிக்கு வந்து, உடனே ஆம்பிடேகரை வினவினார். "அக்கல்கோட் மஹாராஜின் இந்த போதியை (புராணம்) நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?"

"எங்கே? பார்க்கிறேன்; பார்க்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டே ஆப்பிடேக்கர் ஆர்வத்துடன் அப் புத்தகத்தை கையில் வாங்கி கொண்டார். மேலெழுந்த வாரியாக ஒரு முறை புரட்டினார். பிறகு, நடுவில் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

கர்மமும் தர்மமும் நன்கு பிணைந்தது போல (அதிர்ஷ்டவசமாக), அவர் எடுத்துக் படிக்க ஆரம்பித்த பகுதி அவருடைய அந்தரங்கமான எண்ணங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்படி இருந்தது; மின்னலைப்போல் அவருடைய மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆம்டேகர் தற்செயலாக படிக்க நேர்ந்த கதையை இப்பொழுது விவரிக்கிறேன்; எல்லாரும் கேளுங்க. இந்நூல் பெரிதும் விரிந்துவிடும் என்ற பயம் காரணமாகச் சுருக்கமாக சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்; கேளுங்கள்.

அகமுக நிட்டையில் சிறந்த ஞானியான மஹாராஜ் அக்கல்கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவருடைய பக்தர்களில் ஒருவர் கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டு பொறுக்கமுடியாத அளவிற்கு துன்பத்திலாழ்த்தப்பட்டார்.