valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சுமார் அரைநாழிகை (12 நிமிடங்கள்) கழிந்த பிறகு தேவ் மறுபடியும் பாபாவின் சமீபத்திற்கு வந்தார். வசைமழை அப்பொழுதும் பொழிந்து கொண்டிருந்தது. "நீர் எதற்காக மேலே வந்தீர்?" என்று பாபா கேட்டார்.

"வெளியே போம், வாடாவிற்குப் போய்ச்சேரும்!" இதைக் கேட்ட தேவ் பாபாவின் ஆணைக்குப் பணிந்து அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு வாடாவிற்குத் திரும்பினார்!

பிறகு அவர், நடந்ததையெல்லாம் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே ஜோக்கிடமும் பாலக்ராமிடமும், யதார்த்தமாகவும் முழுமையாகவும் விவரித்தார்.

பிறகு சுமார் ஒரு நாழிகைக்கு (24  நிமிடங்கள்) வசைமொழியும் சாபங்களும் தொடர்ந்து பொழிந்தன. நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழிந்த பிறகு, பாபாவே பக்தர்களைத் தம்மிடம் அழைக்க ஆரம்பித்தார்.

மற்றவர்களுடன் சேர்ந்து தேவும் பொய் மசூதியில் அமர்ந்தார். ஸ்ரீ சாயி சொன்னார், "முதியவரின் ஜீவன் கலங்கியிருக்கலாம் .-

"கேவலம் கந்தல் துணி என்ன பெரிய விஷயம்? ஆயினும், நான் வசைமாரி பொழிந்து அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேன். ஆனால், அவர் அதைத் திருடிவிட்டார். அவ்வாறிருக்க நான் வேறென்ன செய்யமுடியும்? என்னால் அதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

"ஆனால், அல்லா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரும் இவரைச் சீர் செய்து ஆசியளிப்பார்." பிறகு, மன்னிக்கும் குணமே உருவான சாயி கேட்டார், "பாவூ, நீர் தக்ஷிணை கொடுப்பீரா?"

தேவ் கேட்டார், "எவ்வளவு கொண்டுவர வேண்டும்?" "பன்னிரண்டு கொண்டுவரும், சீக்கிரம்" என்று பாபா சொன்னார். ஆனால், தேவ் பாக்கெட்டில் பார்த்தபோது, ஒரு நோட்டுதான் இருந்தது; அதை உடைத்துச் சில்லறையாக மாற்றமுடியவில்லை.

தேவ் நிலைமையை பாபாவிடம் சொன்னார். "இருக்கட்டும், எனக்கு வேண்டா. இன்று காலையில் நீர் இரண்டு தடவை தக்ஷிணை கொடுத்தீர். எனக்கு அது ஞாபகமில்லாமல் போய்விட்டது" என்று பாபா சொன்னார்.

இருந்தபோதிலும், தேவ் தேவையான பணத்தைத் தேடிகொண்டுவது பாபாவிடம் அளித்தார். அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்தார்.

"இப்பொழுதெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?" என்று பாபா தேவைக் கேட்டார். "ஒன்றும் இல்லை" என்று தேவ் பதிலளித்தார். உடனே, பாபா தேவுக்கு ஆணையிட்டார், "நியாயமாகப் போதி வாசித்துக்கொண்டிரும்.-

"நீர் பொய் வாடாவில் உட்கார்ந்துகொண்டு நித்திய நியமமாகப் பொதியை வாசியும். வாசிக்கும் சங்கதிகளை எல்லோருக்கும் பாவத்துடன் எடுத்துச் சொல்லும்.

"உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் சொல்கிறீர்?" ஏன் இந்தத் திருட்டு வேளையில் இறங்குகிறீர்?"