valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆணையை சிரமேற்கொண்டு வணங்கிவிட்டு தாதா உடனே உடையணிந்து கொண்டு கோர்ஹாலா கிராமத்திற்குச் செல்லக் கிளம்பியபோது திருப்பியழைக்கப்பட்டார்.

" ஓய்! வாங்கும் வேலையைச் செய்வதற்கு வேறு யாரையாவது அனுப்பலாமே. நீர் எதற்கு அனாவசியமாக அலையவேண்டும்?" என்று பாபா சொன்னார்.

ஆகவே, மாமிசம் வாங்கிக்கொண்டு வருவதற்கு பாண்டுவை அனுப்பலாம் என்று தாதா முடிவு செய்தார். அப்பொழுது பாபா தாதாவிடம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

பாண்டு கிளம்பிச் சிறிது தூரம் சென்றபிறகு, "சரி, இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்"  என்று சொல்லி பாபா பாண்டுவைத் திரும்பி வரும்படி செய்தார்.

பின்னர் ஒருசமயம், ஹண்டி செய்யவேண்டுமென்ற திடீர் உற்சாகம் பாபாவுக்கு எழும்பியது. அடுப்பின்மேல் அண்டாவை ஏற்றி மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

பிறகு அரிசியைக் களைந்து அளவான நீருடன் அதைச் சேர்த்தார். விறகுகளை அடுக்கி அடுப்பை மூட்டி அருகில் உட்கார்ந்துகொண்டு வாயால் ஊதா ஆரம்பித்தார்.

கிராமமக்கள் அனைவருமே அவர் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யத் தயாராக இருந்தனர். எவராவது ஒருவர் நெருப்பை ஊத்தி ஜுவாலையைப் பெருக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்திருப்பார். ஆனால், பாபாவின் ஆணையின்றி ஒருவருக்கும் இதைச் செய்ய தெரியமில்லை.

சமையல் செய்வதற்கோ உணவுப் பொருள்களைக் கொண்டுவருவதற்கோ பக்தர்களுக்கு ஒரு கோடி காண்பித்தால் போதும்; அவர்மேல் கொண்ட அன்பினால் அதை மிகுந்த உற்சாகத்துடன் செய்துமுடிக்கப் பலர் தயாராக இருந்தனர். இதுவிஷயமாக உதாசீனம் காட்டியவர் சாயியே!

அவர் உதாசீனம் செய்தார் என்று சொல்வதும் சரியாகாது. தாமே சமையல் செய்வது தம்முடைய நன்மைக்கே என்று அவர் நினைத்ததால் , அன்னதானம் செய்வதில் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவத்தில் அர்த்தம் என்ன இருக்கிறது?

அவரோ  மதுகரீப் பிச்சை எடுத்தவர்; அதற்காக தம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளும் அளவிற்கு மட்டும் வீடு வீடாகச் சென்று கால் பாகம் சோளரொட்டி இரந்தவர் .

அப்படிப்பட்ட மனிதர் அன்னதானம் செய்வதற்குத் தாமே கஷ்டப்பட்டு உழைத்தால்தான் திருப்தியடைவார். ஆகவே, பாபா இதற்காக யார்மீதும் சார்ந்திருப்பதை விரும்பவில்லை.

நூறுபேர்களுக்குச் சுயமாகச் சமைப்பதற்கு மாவு, அரிசி, பருப்புகள் போன்ற சாமான்களை அவரே பார்த்து வாங்கிக்கொண்டு ரொக்கமாக பணம் பட்டுவாடா செய்தார்.

கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு அவரே மாளிகைக்கு கடைக்குச் சென்ற காட்சி, உலகவிவகாரங்களில் மனிதன் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டுமென்பதை மக்களுக்கு உணர்த்தியது.