ஷீர்டி சாயி சத்சரிதம்
"ஏற்கெனவே பல உணவுப்பண்டங்களைச் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. இந்த முறையும் எப்படிக் குடிக்கப்போகிறேன்?" இந்த வக்கிரமான சந்தேகம் என் மனத்தில் உதித்தபோது, முதல் மிடறே மிகச் சுவையுள்ளதாக இருந்தது.
நான் சங்கோசப்பட்டுத் தயங்குவதைக் கண்டா பாபா மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார், "அதை முழுக்கக் குடித்துவிடும்." மறுபடியும் அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்காதென்பதை மறைமுகமாகச் சொன்னார் போலும்!
பின்னர் அவ்வாறே நடந்தது! அன்றிலிருந்து இரண்டு மாதங்களில் பாபா தம்முடைய அவதாரத்தை முடித்துக்கொண்டு நிர்வாணம் (முக்தி) அடைந்தார்.
இப்பொழுது, அந்த மோருக்கு ஏற்படும் தாகத்தைத் தனித்துக்கொள்ளும் வழி, சாயி கதாமிருதத்தை குடிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கைகொடுப்பதற்கு வேறெதுவுமே இல்லை!
ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்! சாயிநாதரே எந்தக் கதையை ஞாபகப்படுத்துகிறாரோ அதை அடுத்தபடியாகச் சொல்கிறேன். கதை கேட்பவர்கள் தங்களுடைய கவனத்தை நீடிக்கட்டும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாய்பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஹண்டி வர்ணனை' என்னும் முப்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
க்ஷேமம் உண்டாகட்டும்.