ஷீர்டி சாயி சத்சரிதம்
குதர்க்கத்தை முழுமையாக உதறித் தள்ளுக; இல்லையெனில் அது உங்களை வழி மடக்கும். கர்வத்தைக் காலால் மிதித்து நாசம் செய்க; அதன் பிறகே அக்கரை சேரமுடியும்.
இப்பொழுது, பாபாவே சொன்ன சிறப்பானதொரு கதையைக் கேளுங்கள். குருவின் திருவாய்மொழியான இவ்வமுதத்தை அருந்திப் பரமானந்தத்தை அடையுங்கள்.
(சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த உருவக கதை இங்கு ஆரம்பம்) "ஒரு சமயம் நாங்கள் நால்வர் ஏற்கெனவே போதிகளையும் புராணங்களையும் படித்து ஞானம் பெற்றிருந்ததால், பிரம்ம (முழுமுதற்பொருள்) நிரூபணம் செய்ய ஆரம்பித்தோம். -
எங்களில் ஒருவர் கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டி, 'ஒருவன் தன்னுடைய முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேறெவரையும் சார்ந்து இருத்தல் தகாது' என்று வாதம் செய்தார்.-
அவருக்கு மற்றொருவர் பதிலுரைத்தார், 'யாருடைய மனம் அவருக்கு அடங்கி இருக்கிறதோ அவரே பாக்கியசாலி. ஆகவே, தன்னைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்றறிந்த சங்கல்பங்களையும் விகல்பங்களையும் சூன்யமாக்கிவிட வேண்டும்.'-
மூன்றாமவர் சொன்னார், 'எல்லாமே அழியக்கூடியன (அநித்தியம்); மாறுதல் அடைந்துகொண்டேயிருக்கும். மாறுதல் ஏதும் அடையாததே அழியாதது (நித்தியம்). நித்தியம் எது, அநித்தியம் எது என்ற சிந்தனையை எப்பொழுதும் செய்து கொண்டிரு.'-
நான்காமவர் புத்தக ஞானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்தி, மனம், பேச்சு, உடல், பஞ்சப் பிராணன்கள் அனைத்தையும் குருபாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுவதையே நம்பினார். -
குருவே இவ்வுலகின் உள்ளும் வெளியும் பரவியிருக்கும் நகரும் நகராப் பொருள்களில் உறைந்திருக்கும் இறைவன், என்று மனத்துள் நிர்த்தாரணம் செய்வதற்கு ஆழமானதும் அசைக்க முடியாததுமான விசுவாசம் (நிஷ்டை) அவசியம். -
வெறும் சாஸ்திர நிபுணர்களோ, வாதத்தில் மட்டும் வல்லவர்களோ, எதையும் உரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்பவர்களோ, சொப்பனத்திற்குக்கூட ஞானத்தை அடைய முடியாது. இங்கே தேவையானது சுத்தமான விசுவாசமுள்ள பக்தன்.-
இவ்வாறாக, நான்கு புத்திசாலிகளும் (நாங்கள்) அதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்றெண்ணித் தேட ஆரம்பித்தோம். வேதனையேதும் இல்லாத சுதந்திரமான மனத்துடன் சொந்த புத்தியாலேயே கண்டுபிடிக்க வேண்டும்.-
மூன்று பேர்கள் மனத்திலும் இந்த இச்சையே மேலோங்கியது. ஆயினும் காட்டில் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருந்தபோது, வழியில் ஒரு 'வஞ்சாரியைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கேட்டார், - (நான்காமவர் சாயி)
குதர்க்கத்தை முழுமையாக உதறித் தள்ளுக; இல்லையெனில் அது உங்களை வழி மடக்கும். கர்வத்தைக் காலால் மிதித்து நாசம் செய்க; அதன் பிறகே அக்கரை சேரமுடியும்.
இப்பொழுது, பாபாவே சொன்ன சிறப்பானதொரு கதையைக் கேளுங்கள். குருவின் திருவாய்மொழியான இவ்வமுதத்தை அருந்திப் பரமானந்தத்தை அடையுங்கள்.
(சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த உருவக கதை இங்கு ஆரம்பம்) "ஒரு சமயம் நாங்கள் நால்வர் ஏற்கெனவே போதிகளையும் புராணங்களையும் படித்து ஞானம் பெற்றிருந்ததால், பிரம்ம (முழுமுதற்பொருள்) நிரூபணம் செய்ய ஆரம்பித்தோம். -
எங்களில் ஒருவர் கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டி, 'ஒருவன் தன்னுடைய முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேறெவரையும் சார்ந்து இருத்தல் தகாது' என்று வாதம் செய்தார்.-
அவருக்கு மற்றொருவர் பதிலுரைத்தார், 'யாருடைய மனம் அவருக்கு அடங்கி இருக்கிறதோ அவரே பாக்கியசாலி. ஆகவே, தன்னைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்றறிந்த சங்கல்பங்களையும் விகல்பங்களையும் சூன்யமாக்கிவிட வேண்டும்.'-
மூன்றாமவர் சொன்னார், 'எல்லாமே அழியக்கூடியன (அநித்தியம்); மாறுதல் அடைந்துகொண்டேயிருக்கும். மாறுதல் ஏதும் அடையாததே அழியாதது (நித்தியம்). நித்தியம் எது, அநித்தியம் எது என்ற சிந்தனையை எப்பொழுதும் செய்து கொண்டிரு.'-
நான்காமவர் புத்தக ஞானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்தி, மனம், பேச்சு, உடல், பஞ்சப் பிராணன்கள் அனைத்தையும் குருபாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுவதையே நம்பினார். -
குருவே இவ்வுலகின் உள்ளும் வெளியும் பரவியிருக்கும் நகரும் நகராப் பொருள்களில் உறைந்திருக்கும் இறைவன், என்று மனத்துள் நிர்த்தாரணம் செய்வதற்கு ஆழமானதும் அசைக்க முடியாததுமான விசுவாசம் (நிஷ்டை) அவசியம். -
வெறும் சாஸ்திர நிபுணர்களோ, வாதத்தில் மட்டும் வல்லவர்களோ, எதையும் உரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்பவர்களோ, சொப்பனத்திற்குக்கூட ஞானத்தை அடைய முடியாது. இங்கே தேவையானது சுத்தமான விசுவாசமுள்ள பக்தன்.-
இவ்வாறாக, நான்கு புத்திசாலிகளும் (நாங்கள்) அதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்றெண்ணித் தேட ஆரம்பித்தோம். வேதனையேதும் இல்லாத சுதந்திரமான மனத்துடன் சொந்த புத்தியாலேயே கண்டுபிடிக்க வேண்டும்.-
மூன்று பேர்கள் மனத்திலும் இந்த இச்சையே மேலோங்கியது. ஆயினும் காட்டில் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருந்தபோது, வழியில் ஒரு 'வஞ்சாரியைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கேட்டார், - (நான்காமவர் சாயி)