ஷீர்டி சாயி சத்சரிதம்
மஹராஜ் அவரிடம் கேட்கிறார், "ஆனால், உமக்கு அந்த அளவிற்கு விசுவாசம் இருக்கிறதா?" "ஆமாம்" என்று அவர் (ம.ம) சொன்னதும் பாபா அவரைக் கண்களை மூடிகொள்ளச் சொல்லி ஆணை இடுகிறார்.
பாபாவின் ஆணைப்படி அவர் (ம.ம) நின்றிருந்தவாறே கண்களை மூடியவுடன் திடீரென்று யாரோ கீழே விழுந்ததுபோல அவருக்குத் தடாலென்ற சத்தம் கேட்கிறது.
அச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்ட அவர் (ம.ம) உடனே கண்களைத் திறந்து பார்க்கிறார். அவர் கட்டுகளிலிருந்தும் சிறையிலிருந்தும் விடுபட்டு விட்டார். மாறாக, போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்.
அவர் (ம.ம) திகிலடைந்து பாபாவை நோக்குகிறார். பாபா புன்னகை புரிந்துகொண்டே அவரிடம் சொல்கிறார், "பலே, பலே! நீர் இப்பொழுது வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறீர்.-
"போலீஸ் அதிகாரிகள் இங்கு வருவர். நடந்ததனைத்தையும் நோட்டம் விட்டபின், அடக்கமுடியாத குரூரமான கைதியாக உம்மை மட்டுமே காண்பர். மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவீர்".
அவர் (ம.ம) மனம் திறந்து பதில் சொல்கிறார், "பாபா, நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கும். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், இப்பொழுது விடுதலை செய்யுங்கள்! உங்களைத் தவிர என்னைக் காப்பாற்றக்கூடியவர் எவரும் இல்லை".
இதைக் கேட்ட, பாபா அவரிடம் சொல்கிறார், "மறுபடியும் உம் கண்களை மூடிக்கொள்ளும்". அவர் (ம.ம) கண்களை மூடி மறுபடியும் திறந்தபின் இன்னொரு அற்புதம் காண்கிறார்.
இப்பொழுது அவர் (ம.ம) சிறைக்கூண்டுக்கு வெளியே இருக்கிறார். பாபா அருகில் இருக்கிறார். அவர் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். பாபா அவரை வினவுகிறார்.-
"நீர் இப்பொழுது செய்யும் நமஸ்காரத்திற்கும் ஏற்கெனவே செய்த நமஸ்காரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? யோசித்துப் பதில் சொல்லும்!"
அவர் (ம.ம) கூறுகிறார், "ஓ, பூமிக்கும் வானத்திற்குமுள்ள வித்தியாசம் உண்டு. இதுவரை செய்யப்பட்ட நமஸ்காரங்கள் கேவலம் திரவிய லாபத்திற்காகவே செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது செய்த நமஸ்காரமோ உங்களை பரமேச்வரனாகவே கருதிச் செய்யப்பட்டது!-
"முன்பு உங்களிடம் விசுவாசம் இல்லை. மாறாக, நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு, ஹிந்துக்களை மதம் மாற்றி பாழ்படுத்துவதாக எண்ணி ரோஷமடைந்தேன்."
"ஆகவே, பாபா கேட்கிறார், "உம்முடைய மனதில் முஸ்லீம் தெய்வங்களின் மீது பக்தி இல்லையா?" அவர் (ம.ம) "இல்லை" என்று பதிலளிக்கிறர்.
பாபா மறுபடியும் அவரைக் கேட்கிறார், "உம்முடைய இல்லத்தில் பஞ்ஜா இல்லை? தாபூத் தினத்தன்று அதை நீர் தொழுவதில்லை? உம்முடைய மனத்தையே கேளும்!
மஹராஜ் அவரிடம் கேட்கிறார், "ஆனால், உமக்கு அந்த அளவிற்கு விசுவாசம் இருக்கிறதா?" "ஆமாம்" என்று அவர் (ம.ம) சொன்னதும் பாபா அவரைக் கண்களை மூடிகொள்ளச் சொல்லி ஆணை இடுகிறார்.
பாபாவின் ஆணைப்படி அவர் (ம.ம) நின்றிருந்தவாறே கண்களை மூடியவுடன் திடீரென்று யாரோ கீழே விழுந்ததுபோல அவருக்குத் தடாலென்ற சத்தம் கேட்கிறது.
அச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்ட அவர் (ம.ம) உடனே கண்களைத் திறந்து பார்க்கிறார். அவர் கட்டுகளிலிருந்தும் சிறையிலிருந்தும் விடுபட்டு விட்டார். மாறாக, போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்.
அவர் (ம.ம) திகிலடைந்து பாபாவை நோக்குகிறார். பாபா புன்னகை புரிந்துகொண்டே அவரிடம் சொல்கிறார், "பலே, பலே! நீர் இப்பொழுது வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறீர்.-
"போலீஸ் அதிகாரிகள் இங்கு வருவர். நடந்ததனைத்தையும் நோட்டம் விட்டபின், அடக்கமுடியாத குரூரமான கைதியாக உம்மை மட்டுமே காண்பர். மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவீர்".
அவர் (ம.ம) மனம் திறந்து பதில் சொல்கிறார், "பாபா, நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கும். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், இப்பொழுது விடுதலை செய்யுங்கள்! உங்களைத் தவிர என்னைக் காப்பாற்றக்கூடியவர் எவரும் இல்லை".
இதைக் கேட்ட, பாபா அவரிடம் சொல்கிறார், "மறுபடியும் உம் கண்களை மூடிக்கொள்ளும்". அவர் (ம.ம) கண்களை மூடி மறுபடியும் திறந்தபின் இன்னொரு அற்புதம் காண்கிறார்.
இப்பொழுது அவர் (ம.ம) சிறைக்கூண்டுக்கு வெளியே இருக்கிறார். பாபா அருகில் இருக்கிறார். அவர் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். பாபா அவரை வினவுகிறார்.-
"நீர் இப்பொழுது செய்யும் நமஸ்காரத்திற்கும் ஏற்கெனவே செய்த நமஸ்காரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? யோசித்துப் பதில் சொல்லும்!"
அவர் (ம.ம) கூறுகிறார், "ஓ, பூமிக்கும் வானத்திற்குமுள்ள வித்தியாசம் உண்டு. இதுவரை செய்யப்பட்ட நமஸ்காரங்கள் கேவலம் திரவிய லாபத்திற்காகவே செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது செய்த நமஸ்காரமோ உங்களை பரமேச்வரனாகவே கருதிச் செய்யப்பட்டது!-
"முன்பு உங்களிடம் விசுவாசம் இல்லை. மாறாக, நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு, ஹிந்துக்களை மதம் மாற்றி பாழ்படுத்துவதாக எண்ணி ரோஷமடைந்தேன்."
"ஆகவே, பாபா கேட்கிறார், "உம்முடைய மனதில் முஸ்லீம் தெய்வங்களின் மீது பக்தி இல்லையா?" அவர் (ம.ம) "இல்லை" என்று பதிலளிக்கிறர்.
பாபா மறுபடியும் அவரைக் கேட்கிறார், "உம்முடைய இல்லத்தில் பஞ்ஜா இல்லை? தாபூத் தினத்தன்று அதை நீர் தொழுவதில்லை? உம்முடைய மனத்தையே கேளும்!