valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


43 . மஹாசமாதி (இரண்டாம் பகுதி)


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சமர்த்த சாயியின் நிர்யாணயம் விவரிக்கப்பட்டது. விட்டுப்போனதும் நிறைவு பெறாததுமான விவரங்கள் இந்த அத்தியாயத்தில் சம்பூரணம் (நிறைவு) செய்யப்படும்.

சமர்த்த சாயியின் மீது எனக்கு ஏற்பட்ட அற்புதமான பிரேமை அவருடைய அருள் வெளிப்பாடே, சாயியின் பொற்பாதங்களில் மூழ்கிய ஹேமாட் அவருடைய இந்தச் சரித்திரத்தை எழுதுகிறேன்.

அவரே பிரேமபக்தியை அளிக்கிறார்; சரித்திரத்தின் மஹிமையை மேம்படுத்துபவரும் ஒரே. இக் காரணம் பற்றியே அவரை ஆராதிக்கும் நெறிமுறை பெருமை வாய்ந்தது. அதுவே உலகியல் பற்றுகளிலிருந்து நம்மைப் பிரிக்கிறது.

ஆதலின், நான் என் உடலாலும் பேச்சாலும் மனத்தாலும் அவரை ஆயிரம் தடவைகள் வணங்குகிறேன். சிந்தனை செய்வதால் அவருடைய  மஹிமையை உணரமுடியாது; அனன்னியமான சரணாகதியால்தான் முடியும்.

மூட்டையாகச் சேர்ந்திருக்கும் பாவங்களையும் மலங்களையும் கழுவித் தள்ளி மனத்தூய்மை அடைவதற்கு இதர சாதனைகளால் பயனில்லை.

மனத்தூய்மை பெறுவதற்கு ஹரிபக்தர்களின் கீர்த்தியை நினைப்பதும் பஜனையாகவும் கீர்த்தனையாகவும் பாடுவதையும்விட சுலபமான சாதனை எவ்வளவு தேடினாலும் அகப்படாது.

ஆகவே, நாம் முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் பிடிப்போம்; அத்திப்பற்றிச் சிறிது ஆலோசனை செய்வோம். நம்முடைய ஆனந்தத்தின் இருப்பிடமான சாயியைப்பற்றிய வியாக்கியானதைத் தொடர்ந்து சொல்லுவோம்.

அவருடைய நிர்யாணம் ஏன் விஜயதசமியன்று நிகழ்ந்தது என்பதும், எவ்வாறு தாத்யாவைச் சாக்குபோக்காக வைத்து வரும்பொருள் உரைக்கப்பட்டது என்பதும், ஏற்கெனவே விவரமாகச் சொல்லப்பட்டன.

தேகத்தை விடுக்கப்போகும் சமயத்திலும் தருமம் செய்யவேண்டியதுபற்றி விழிப்புடன் இருந்தது, லக்ஷ்மி பாயிக்கு தானம் செய்தது, ஆகிய அனைத்து விஷயங்களும் பின்னர் எடுத்துரைக்கப்பட்டன .