ஷீர்டி சாயி சத்சரிதம்
காலக்கிரமத்தில் மதராஸ் கோஷ்டி ஷிர்டியிலிருந்து கிளம்ப விரும்பியது. அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைத்தது.
"அல்லா மாலிக் நிறையக் கொடுப்பார். அல்லா உங்களுக்கு நல்வாழ்வு அளிப்பார்?". இந்த ஆசீர்வாதமே அவர்களுக்கு யாத்திரையின் போது பல நன்மைகளை விளைவித்தது.
சாயியின் ஆசீர்வாதங்களுடன், அவருடைய நாமத்தைப் பகலிலும் இரவிலும் தியானம் செய்துகொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர். எள்ளளவு இன்னலும் எங்கும் ஏற்படாது பிரயாணம் செய்தனர்.
சாயி ஆசியளித்தவாறே, வழியில் எந்தவிதமான தடங்கலோ இன்னலோ ஏற்படாமல் பல புண்ணிய தரிசனங்களை முடித்துக்கொண்டு சுகமாகத் திரும்பிவந்து இல்லத்தைச் சேர்ந்தனர்.
அவர்கள் திட்டமிட்டிருந்த புனிதப் பயணங்களுக்கு மேலாகவே அநேக தரிசனங்கள் பெற்றனர். சாயியின் ஆசீர்வாதம் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றி பேசிப் பேசி ஆனந்தத்தால் நிறைந்தனர்.
மேலும், மகானின் "அல்லா நல்வாழ்வு அளிப்பர்" என்ற மங்களகரமான ஆசீர்வாதம் எழுத்துக்கெழுத்து சத்தியாமாகி, அவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறின.
மதராஸிலிருந்து வந்த புனிதப் பயணிகள் நற்குணங்கள் பொருந்திய சாத்விகர்கள்; இறையுணர்வு பெற்றவர்கள்; பக்தர்கள். சாயி அவர்களுக்கு பந்தவிமோசனம் (கட்டுகளிலிருந்து விடுபடுதல்) அளித்தார்.
இதுபோலவே, சுவாரசியமான இன்னொரு கதை சொல்கிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆச்சரியம் அடைவார்கள்.
பரமதயாளரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷமுமான சாயி, அன்பார்ந்த பக்தர்களின் ஆசைகளை சிரமம் பார்க்காமல் எவ்வாறு எப்பொழுதும் முழுமையாக நிறைவேற்றி வைக்கிறார் என்பது நன்கு விளங்கும்.
பாந்த்ரா நகரம் (தற்போது பம்பாய் மாநகரத்தின் புறநகர்) தாணே ஜில்லாவில் இருக்கிறது. அங்கு வாழ்ந்துவந்த ரகுநாத்ராவ் தெண்டுல்கர் எனும் பெயர் கொண்ட பக்தர், தைரியசாலி; கூர்த்த மதியாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்.
எப்பொழுதும் சந்தோஷமாக இருந்த அவர், சாயியின் பாதகமலங்களின் மீது மிகுந்த பிரேமை கொண்டு அவருடைய போதனையாகிய மகரந்தத்தின்மேல் ஆசை வைத்து இடைவிடாது சாயிநாம ஜபம் செய்துவந்தார்.
சாயியின் லீலைகளை 'பஜனைமாலை' என்ற ரூபத்தில் நூலாக இயற்றியவர் இவரே. பக்தியுடனும் பிரேமையுடனும் இதை வாசிப்பவர் ஓவ்வொரு சொல்லிலும் சாயியைக் காண்பார்.
சாவித்திரி என்பது அவருக்கு மனைவியின் பெயர். பாபு அவர்களின் மூத்த மகன். சாயியின் லீலையையும் அவர்களுடைய விசித்திரமான அனுபவத்தையும் பற்றிக் கேளுங்கள்.
காலக்கிரமத்தில் மதராஸ் கோஷ்டி ஷிர்டியிலிருந்து கிளம்ப விரும்பியது. அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைத்தது.
"அல்லா மாலிக் நிறையக் கொடுப்பார். அல்லா உங்களுக்கு நல்வாழ்வு அளிப்பார்?". இந்த ஆசீர்வாதமே அவர்களுக்கு யாத்திரையின் போது பல நன்மைகளை விளைவித்தது.
சாயியின் ஆசீர்வாதங்களுடன், அவருடைய நாமத்தைப் பகலிலும் இரவிலும் தியானம் செய்துகொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர். எள்ளளவு இன்னலும் எங்கும் ஏற்படாது பிரயாணம் செய்தனர்.
சாயி ஆசியளித்தவாறே, வழியில் எந்தவிதமான தடங்கலோ இன்னலோ ஏற்படாமல் பல புண்ணிய தரிசனங்களை முடித்துக்கொண்டு சுகமாகத் திரும்பிவந்து இல்லத்தைச் சேர்ந்தனர்.
அவர்கள் திட்டமிட்டிருந்த புனிதப் பயணங்களுக்கு மேலாகவே அநேக தரிசனங்கள் பெற்றனர். சாயியின் ஆசீர்வாதம் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றி பேசிப் பேசி ஆனந்தத்தால் நிறைந்தனர்.
மேலும், மகானின் "அல்லா நல்வாழ்வு அளிப்பர்" என்ற மங்களகரமான ஆசீர்வாதம் எழுத்துக்கெழுத்து சத்தியாமாகி, அவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறின.
மதராஸிலிருந்து வந்த புனிதப் பயணிகள் நற்குணங்கள் பொருந்திய சாத்விகர்கள்; இறையுணர்வு பெற்றவர்கள்; பக்தர்கள். சாயி அவர்களுக்கு பந்தவிமோசனம் (கட்டுகளிலிருந்து விடுபடுதல்) அளித்தார்.
இதுபோலவே, சுவாரசியமான இன்னொரு கதை சொல்கிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆச்சரியம் அடைவார்கள்.
பரமதயாளரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷமுமான சாயி, அன்பார்ந்த பக்தர்களின் ஆசைகளை சிரமம் பார்க்காமல் எவ்வாறு எப்பொழுதும் முழுமையாக நிறைவேற்றி வைக்கிறார் என்பது நன்கு விளங்கும்.
பாந்த்ரா நகரம் (தற்போது பம்பாய் மாநகரத்தின் புறநகர்) தாணே ஜில்லாவில் இருக்கிறது. அங்கு வாழ்ந்துவந்த ரகுநாத்ராவ் தெண்டுல்கர் எனும் பெயர் கொண்ட பக்தர், தைரியசாலி; கூர்த்த மதியாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்.
எப்பொழுதும் சந்தோஷமாக இருந்த அவர், சாயியின் பாதகமலங்களின் மீது மிகுந்த பிரேமை கொண்டு அவருடைய போதனையாகிய மகரந்தத்தின்மேல் ஆசை வைத்து இடைவிடாது சாயிநாம ஜபம் செய்துவந்தார்.
சாயியின் லீலைகளை 'பஜனைமாலை' என்ற ரூபத்தில் நூலாக இயற்றியவர் இவரே. பக்தியுடனும் பிரேமையுடனும் இதை வாசிப்பவர் ஓவ்வொரு சொல்லிலும் சாயியைக் காண்பார்.
சாவித்திரி என்பது அவருக்கு மனைவியின் பெயர். பாபு அவர்களின் மூத்த மகன். சாயியின் லீலையையும் அவர்களுடைய விசித்திரமான அனுபவத்தையும் பற்றிக் கேளுங்கள்.