valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அவையெல்லாவற்றிலும் ஒரு புடைச்சிற்பத்தின் அழகு என்னை மோகங்கொள்ளச் செய்தது. மேலும், அது என்னுடைய இஷ்டதேவதை?

ஆதியிலிருந்து எனக்கு சாயியின் மீது ஈர்ப்பு இருந்தது. அந்த மூர்த்தியை நேருக்குநேர் பார்த்தவுடனே, அதை உடனே வாங்கிவிடவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது. உடனே அதற்குண்டான விலையைக் கொடுத்து வாங்கினேன்.

சிற்பத்தை வீட்டிற்கு கொண்டுவந்து சுவரில் மாட்டினேன். எனக்கு பாபாவின்மேல் மிகுந்த பிரேமை இருந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

உங்களிடம் சிற்பத்தை அளித்த காலகட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நான் ஆரோக்கியம் இழந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

என்னுடைய மைத்துனருடைய பெயர் நூர் முஹம்மது பீர்பாய், என்னுடைய கால் வீங்கியிருந்தது; குணப்படுத்துவதற்காக அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.

இவ்வாறு, உடல்நலம் குன்றியிருந்த நிலையில் நான் மைத்துனரின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கினேன். அந்த மூன்று மாதங்களில் என்னுடைய வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

இருந்தபோதிலும், புகழ்பெற்ற அப்துல் ரஹிமான் பாபா, மௌலானா சாப், முஹம்மது ஹுசேன், சாயி பாபா, தாஜுத்தீன் பாபா, ஆகியவர்களின் படங்கள் இடத்தைவிட்டு நகரவில்லை.

இவர்களுடையதும், இவர்களைப் போன்ற மற்ற ஞானிகளுடையதுமான அழகிய புகைப்படங்கள் என் வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. இவற்றையும் காலச்சக்கரம் விட்டுவைக்கவில்லை.

நான் இங்கு இந்த கதியில் இருந்தபோது படங்களை ஏன் ஏழரைச்சனி பிடிக்கவேண்டும்? உற்பத்தில் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களும் என்றாவது ஒருநாள் அழிந்துதான் போகவேண்டுமென்பதை நான் உணர்கிறேன்.

இருப்பினும், நிலைமை இவ்வாறு இருந்தபோது, சாயி மாத்திரம் எப்படி விடுபட்டார்? இதை விளக்க இன்றுவரை யாராலும் இயலவில்லை.

இதுபற்றிய காதையை ஆரம்பத்திலிருந்து கேட்டால் நீங்கள் பெரும் வியப்படைவீர்கள்! நகரும் நகராப் பொருள்களுடன் சாயி ஒன்றியிருப்பதையும் கற்பனைக்கு எட்டாத அவருடைய சூக்குமமான செயல் திறமையையும் அறிந்துகொள்வீர்கள்.

தாரியா என்ற செல்லப்பெயர் கொண்ட முஹம்மது ஹுசைன் என்பவரிடம் அப்துல் ரஹிமான் பாபா என்ற ஞானியின் சிறிய படம் ஒன்று இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அப் படத்தின் பிரதியொன்றை எனக்கு அவர் கொடுத்திருந்தார். அதை நான் என் மைத்துனருக்கு கொடுத்திருந்தேன். மைத்துனர், ஞானி அப்துல் ரஹிமானின் நெருங்கிய சிஷ்யர்.

அவரிடம் அது மேஜை இழுப்பறையில் எட்டு ஆண்டுகள் கிடந்தது. ஒருநாள் சகஜமாக மேஜை இழுப்பறையைத் திறந்தபோது எதிர்பாராதவிதமாக அதைக் கவனித்தார். அதை பம்பாயிலிருந்த, புகைப்படம் எடுப்பவர் ஒருவரின் கடைக்கு எடுத்துச் சென்றார்.