valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

அண்ணா சிஞ்சனிகருக்கு ஐம்பது வயதிற்குமேல் ஆகியிருந்தது; பற்கள் விழுந்துவிட்டன. மாவசிப்பாயியும் வயதானவர்; முதிர்ச்சியடைந்தவர். இருவருக்குமிடையே தான் தண்டா எழுந்தது.

அண்ணா சிஞ்சானிகர் பாபாவுக்கு சேவை செய்ய ஷிர்டியில் தம் மனைவியுடன் வசித்துவந்தார். வயது முதிர்ந்த மாவசிப்பாயி ஒரு விதவை. பாபாவின் வயிற்றை பலமாகப் பிசைந்துவிட்டு வேகத்தில் மாவாசிப்பாயிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

நிர்மலமான மனமுடைய மாவசிப்பாயி, பாபாவுக்கு சேவை செய்வதில் தம்முடைய பலத்தையெல்லாம் காண்பித்தார். தம்முடைய இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு பாபாவின் வயிற்றை உக்கிரமாகப் பிசைந்துவிட்டார்.

பாபாவுக்கு பின்னால் உறுதியாக நின்று கொண்டு அவருடைய வயிற்றை இரு கைகளாலும் மாற்றி மாற்றி அமுக்கி பிசைந்தார். அவருடைய செய்கை, பார்ப்பதற்கு தயிர் கடைவதுபோல இருந்தது.

சாயி நாமத்தை ஜபம் செய்வதிலேயே மனத்தைப் பறிகொடுத்த மாவாசிப்பாயி, பயமேதுமின்றி வயிற்றை அமுக்கியும் பிசைந்தும் செய்யும் சேவையைத் தொடர்ந்தார். பாபாவும் வலியோ அசௌகரியமோ ஏதும் இருந்ததாகக் காட்டவில்லை. நல்லாரோக்கியத்திற்கு உதவும் செயலாகவே இதை ஏற்றுக்கொண்டார்.

ஆயினும் இது வயிற்றையும் முதுகையும் ஒன்றாய்க்கிவிடுவது போன்ற அசாதாரணமான மசாஜ்தான்! இந்த சேவை மாவாசிப்பாயிக்கு பாபாவிடம் இருந்த பிரேமையைத்தான் வெளிப்படுத்தியது. ஆயினும், பார்ப்பவர்கள் பாபா அவதிப்படுவது கண்டு இரக்கம் கொண்டனர்.

தம் மீது இருக்கும் கபடமற்ற அன்பால் விளைந்ததென்று அறிந்து, பாபா இம்மாதிரியான கடுமையான சேவைகளை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக அவர்கள் தம்மை என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு க்ஷேமத்தை அடையட்டும் என்றெண்ணினார்.

ஒரு ஞானியின் சங்கத்தில் இருக்கும் பேற்றை அடைய நாம் என்ன பெரிய தவம் செய்துவிட்டோம்? ஒன்றும் இல்லையே ! எந்த பக்தனையும் ஒதுக்கிவிடாத தீனவஸ்தலரான சாயியின் கருணையன்றோ இதற்கு காரணம்!

மசாஜ் செய்யும்பொழுது மாவாசிப்பாயி காட்டிய திறமைதான் என்னே! அவருடைய பலம் வாய்ந்த இயக்கத்தால் பாபா மேலும் கீழுமாக போய் வந்தார். அவ் வம்மையாரும் அவ்விதமே அசைந்தார்.

அண்ணா சிஞ்சணிகர் என்னவோ, மறுபக்கத்தில் லேசாகக் குனிந்தவாறு தம்முடைய சேவையைச் சீராகச் செய்துகொண்டிருந்தார். தம்முடைய சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மாவாசிப்பாயிக்கு தம்முடைய முகமும் விசையுடன் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருந்தது தெரியவில்லை. இதனால் என்ன நடந்ததென்று கேளுங்கள்.

சேவை செய்ய வேண்டுமென்கிற தீவிர ஆவலால் உந்தப்பட்ட மாவாசிப்பாயிக்கு பாபாவின் வயிற்றைப் பிசைந்து விட்டதில் பரம திருப்தி ஏற்பட்டது. ஆயினும் சேவை செய்யும் உற்சாகத்தில் அவர் ஆடிய ஆட்டத்தில் , தலை ஒரு பக்கமாகச் சாய்ந்து அண்ணா சிஞ்சணிக்கரின் தலையை உரசியது!