ஷிர்டி சாயி சத் சரிதம்
"பரிபூரணமாக சரணாகதியடைந்தவன் மேல் தயை காட்டுவீராக. இந்த வார்த்தைகளால் அவருடைய கருணையை மலரச் செய்து அவருடைய மன்னிப்புக்கும் அருளுக்கும், தீனனும் தாசனுமான என் சார்பில் அபயவரம் வேண்டு".
பாந்த்ராவில் இது நடந்துகொண்டிருந்தபோது, 200 மைல்களுக்கு அப்பாலிருந்த ஷீரடிக்கு உடனே செய்தி வந்து விட்டது! பாபா அங்கு என்ன சொன்னார் என்று கேளுங்கள்.
ஸாயி மகாராஜருக்கு நடந்ததும் நடப்பதும் நடக்கப் போவதும் இடம் காலம் என்னும் எந்தத் தடைகளுமின்றி எல்லாமே தெரிந்திருந்தன என்பதற்கு இதுவே பிரத்யக்ஷமான நிரூபணம்.
பையன் (மகன்) ஷீரடியில் இருந்தாலும், அவன் பாபாவுக்கு வணக்கம் செலுத்துவதற்கு அதே நாளில் அதே நேரத்தில் சென்ற பொது, என்ன நடந்தது என்பதைக் கேளுங்கள்; கதை கேட்பவர்களே!
பையன் தாயுடன் உற்சாகமாக வந்து, பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது சாயீ தாயாரிடம் கூறியதைக் கேட்டு வியப்படைந்தான்.
"தாயே, இன்று என்னால் என்ன செய்ய முடிந்தது? தினமும் செய்வதுபோல் நான் இன்றும் பாந்த்ராவுக்கு சென்றேன். ஆனால், அங்கு சோறோ கஞ்சியோ எதுவுமே உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை. நான் பட்டிநியாகத் திரும்பிவர நேரிட்டது!-
"இந்த ருனானுபந்தத்தை பார். (பூர்வ ஜன்ம சம்பந்தமும் அதனால் விளையும் பந்தங்களும்). கதவு மூடியிருந்தாலும் நான் இஷ்டமாக உள்ளே நுழைந்துவிட்டேன்; யார் என்னைத் தடுக்க முடியும்?-
"முதலாளி வீட்டில் இல்லை. என்னுடைய குடலைப் பசி பிடுங்கியது. உடனே அந்த நண்பகல் நேரத்தில் ஒருபிடி அன்னங்கூட இல்லாமல் திரும்பிவிட்டேன்!-
இந்த வாரதைகளைக் கேட்டவுடனே, அனேகமாக தந்தை நிவேதனம் செய்ய மறந்துவிட்டிருப்பார் என்று மகன் யூகித்து விட்டான்.
"என்னை வீட்டிற்கு திரும்பி போக அனுமதியுங்கள்!" என்று பாபாவை வேண்டினான். பாபா அறவே மறுத்துவிட்டார்! அதற்குப் பதிலாகப் பையனை அங்கேயே பூஜை செய்ய அனுமதித்தார்.
மகன் அன்றைய தினமே ஷிர்டியிலிருந்து விவரமான கடிதம் அனுப்பினான். அதைப் படித்த தந்தை மனமுருகிப் போனார்.
பாந்த்ராவிலிருந்து எழுதப் பட்ட கடிதமும் ஷீரடிக்கு வந்து சேர்ந்தது! பயின் ஆச்சரியமடைந்தான். அவனுடைய விழிகளிலிருந்து கண்ணீர் தரை தாரையாக பெருகிக் கன்னங்களில் வழிந்தோடியது.
சாயியினுடைய இந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! அன்பு ஏன் இதயத்தில் பொங்கி எழாது? இந்த சம்பவத்தால் உருகாத கல்மனமும் உண்டோ?
இந்தப் பையனின் அன்பான தாயார்தான், ஒரு சமயம் ஷிர்டியிலிருந்த பொது பாபாவால் அனுக்ரஹிக்கப் பட்டார். இப்பொழுது அந்த நூதனமான காதையைக் கேளுங்கள்!
"பரிபூரணமாக சரணாகதியடைந்தவன் மேல் தயை காட்டுவீராக. இந்த வார்த்தைகளால் அவருடைய கருணையை மலரச் செய்து அவருடைய மன்னிப்புக்கும் அருளுக்கும், தீனனும் தாசனுமான என் சார்பில் அபயவரம் வேண்டு".
பாந்த்ராவில் இது நடந்துகொண்டிருந்தபோது, 200 மைல்களுக்கு அப்பாலிருந்த ஷீரடிக்கு உடனே செய்தி வந்து விட்டது! பாபா அங்கு என்ன சொன்னார் என்று கேளுங்கள்.
ஸாயி மகாராஜருக்கு நடந்ததும் நடப்பதும் நடக்கப் போவதும் இடம் காலம் என்னும் எந்தத் தடைகளுமின்றி எல்லாமே தெரிந்திருந்தன என்பதற்கு இதுவே பிரத்யக்ஷமான நிரூபணம்.
பையன் (மகன்) ஷீரடியில் இருந்தாலும், அவன் பாபாவுக்கு வணக்கம் செலுத்துவதற்கு அதே நாளில் அதே நேரத்தில் சென்ற பொது, என்ன நடந்தது என்பதைக் கேளுங்கள்; கதை கேட்பவர்களே!
பையன் தாயுடன் உற்சாகமாக வந்து, பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது சாயீ தாயாரிடம் கூறியதைக் கேட்டு வியப்படைந்தான்.
"தாயே, இன்று என்னால் என்ன செய்ய முடிந்தது? தினமும் செய்வதுபோல் நான் இன்றும் பாந்த்ராவுக்கு சென்றேன். ஆனால், அங்கு சோறோ கஞ்சியோ எதுவுமே உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை. நான் பட்டிநியாகத் திரும்பிவர நேரிட்டது!-
"இந்த ருனானுபந்தத்தை பார். (பூர்வ ஜன்ம சம்பந்தமும் அதனால் விளையும் பந்தங்களும்). கதவு மூடியிருந்தாலும் நான் இஷ்டமாக உள்ளே நுழைந்துவிட்டேன்; யார் என்னைத் தடுக்க முடியும்?-
"முதலாளி வீட்டில் இல்லை. என்னுடைய குடலைப் பசி பிடுங்கியது. உடனே அந்த நண்பகல் நேரத்தில் ஒருபிடி அன்னங்கூட இல்லாமல் திரும்பிவிட்டேன்!-
இந்த வாரதைகளைக் கேட்டவுடனே, அனேகமாக தந்தை நிவேதனம் செய்ய மறந்துவிட்டிருப்பார் என்று மகன் யூகித்து விட்டான்.
"என்னை வீட்டிற்கு திரும்பி போக அனுமதியுங்கள்!" என்று பாபாவை வேண்டினான். பாபா அறவே மறுத்துவிட்டார்! அதற்குப் பதிலாகப் பையனை அங்கேயே பூஜை செய்ய அனுமதித்தார்.
மகன் அன்றைய தினமே ஷிர்டியிலிருந்து விவரமான கடிதம் அனுப்பினான். அதைப் படித்த தந்தை மனமுருகிப் போனார்.
பாந்த்ராவிலிருந்து எழுதப் பட்ட கடிதமும் ஷீரடிக்கு வந்து சேர்ந்தது! பயின் ஆச்சரியமடைந்தான். அவனுடைய விழிகளிலிருந்து கண்ணீர் தரை தாரையாக பெருகிக் கன்னங்களில் வழிந்தோடியது.
சாயியினுடைய இந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! அன்பு ஏன் இதயத்தில் பொங்கி எழாது? இந்த சம்பவத்தால் உருகாத கல்மனமும் உண்டோ?
இந்தப் பையனின் அன்பான தாயார்தான், ஒரு சமயம் ஷிர்டியிலிருந்த பொது பாபாவால் அனுக்ரஹிக்கப் பட்டார். இப்பொழுது அந்த நூதனமான காதையைக் கேளுங்கள்!