valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 December 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

'ஆரதி சாயி பாபா' என்ற இந்த ஆரதிப் பாட்டு ராமஜனார்தனர் இயற்றிய 'ஆரதி ஞான ராஜா' என்ற பாட்டைப் போலவே அமைந்திருக்கிறது. இரண்டுமே ஒரே விருத்தத்தில் (மெட்டில்) அமைந்தவை.


ராமஜனார்தனர் என்பவர் ஜனார்த்தன சுவாமியின் பக்தர். மாதவ் அட்கர் சாயி பாதங்களில் மூழ்கியவர். இந்தக் கவிதை பரிபூரணமாக சாயி பிரசாதம் நிரம்பியது. எந்த பஜனையும் இந்தப் பாட்டைப் பாடாமல் நிறைவுபெறாது.


இந்த ஆரதி பாபாவுக்கு பிடித்தமானதுங்கூட! இதை முழுமையாகக் கேளுங்கள். இந்தப் பாட்டு உதீயுடன் பாபாவால் அனுப்பப்பட்டது. பலனைப்பற்றி பிறகு தெரிந்துகொள்வீர்கள்; பாட்டைக் கேளுங்கள்.


ஆரதிப் பாட்டு

ஆரதி செய்கிறோமே, ஓ சாயி பாபா! ஜீவன்களுக்கு
சௌக்கியம் அளிப்பவரே, பாததூளிகளில் இவ்வடிமைக்கு
அடைக்கலம் தாருங்கள்; பக்தர்களுக்கு அடைக்கலம்
தாருங்கள். (பல்லவி)


மன்மதனை எரித்தவரே, சுய சொரூபத்தில் மூழ்கியவரே,
மோட்சத்தை நாடும் ஜனங்களுக்கு ஸ்ரீரங்கனாகத் தோன்றுகிறீர்;
ஸ்ரீரங்கனாகவே தோன்றுகிறீர்.

மனத்தின் பாவம் எப்படியோ, அப்படியே தேவரீர்
அளிக்கும் அனுபவமும். கருணைக்கடலே, உம்முடைய
மாயை அவ்விதமே, உம்முடைய மாயை அவ்விதமே.

உம்முடைய நாமத்தை ஜபம் செய்தால் சம்சார துக்கங்கள்
அழிந்துபோகின்றன. உம்முடைய செய்கை ஆழங்கான
முடியாதது! அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்;
அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்.

கலியுகத்தின் அவதாரமே, தேவரீர் குணமுள்ள பிரம்மமாக
அவதரித்திருக்கிறீர். ஓ, சுவாமி தத்த  திகம்பரரே!
தத்த திகம்பரரே.

வாரமொருமுறை வியாழக்கிழமையில் பக்தர்கள் பிரபுவின் பாதங்களை தரிசனம் செய்ய புனிதப் பயணம் செய்கிறார்கள்.
பிறவி அச்சத்தை நிவாரணம் செய்யுங்கள்; அச்சத்தை
நிவாரணம் செய்யுங்கள்.

உமது பாததூளிகளுக்குச் செய்யும் சேவையே என்னுடைய
பொக்கிஷம்; நான் உங்களை வேறெதுவும் கேட்கவில்லை.
ஓ, தேவாதிதேவா, தேவாதிதேவா.