valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


என் மைத்துனரின் கண்ணில் பட்டால், உடனே அதை எடுத்துச் சென்று கடலில் ஜலசமாதி செய்துவிடுவார் என்று நான் உள்ளூர உணர்ந்தேன்.

அதை வீட்டில் வைத்திருப்பதில் பிரயோஜனம் ஏதுமில்லை. என் மைத்துனர் அதைப் பார்த்துவிட்டால் மூழ்கடித்துவிடுவார். பக்தரல்லாத எவரிடமும் அதை நிம்மதியான மனத்துடன் கொடுக்கவும் முடியாது.

நன்கு சிந்திக்காமல் யாருக்காவது கொடுத்து, அவர் அதை யோக்கியமாக வழிபடாமல் விட்டுவிட்டால், என் மனம் நிரந்தரமாக வேதனைபட்டுக்கொண்டிருக்கும். இதுவே என்னுடைய நீண்டநாள் கவலையாக இருந்தது.

ஆதலால், அது நன்கு பராமரிக்கப்படக்கூடிய ஒரு நல்ல இடத்தை நான் கண்டுபிடிக்கவேண்டும்.  விதிமுறைகளின்படி எவருடைய வீட்டில் அது நன்கு பரமாரிக்கப்படுமோ, அவருடைய கையில் சிற்பத்தை ஒப்படைக்கவேண்டும்.

நான் இவ்வாறு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தைத்துக்கொண்டிருந்தபோது பீர் மௌலானா (வேறொரு இஸ்லாமிய ஞானி) அவர்களின் தர்பாருக்குச் சென்று, அவர் சிஷ்யர் இஸ்மூ முஜாவரிடம் எல்லா விவரங்களையும் கலந்துரையாட வேண்டுமென்ற  நல்ல யுக்தியை சாயியே என் மனத்தில் எழும்படி செய்தார்.

உடனே நான் பீர் மௌலானாவின் தர்பாருக்குச் சென்று இஸ்மூ முஜாவரிடம் தனிமையில் எல்லா விவரங்களையும் தெரிவித்தேன்.

சிற்பம் உங்களிடம் பத்திரமாக இருக்கும் என்று நாங்கள்  இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்தோம். அன்றைய தினமே நாங்கள் இருவரும் மனத்தில் இவ்வாறு உறுதிசெய்து கொண்டோம்.

சாயியின் இந்தப் புடைச்சிற்பம் உங்களுடைய இல்லத்தில் இருக்கவேண்டும். நாங்களே அதை எடுத்துகொண்டுபோய் உங்களிடம் சேர்ப்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அது தகுந்த இடத்தில இருக்கும்.

இவ்வாறு செய்யப்பட்ட நிச்சயத்தின் பிரகாரம், நாங்கள் உங்களிடம் பிரதிமையை பயபக்தியுடன் அளித்தோம். நீங்கள் சாப்பிடத் தயாராக இருந்த நிலைமையைப் பார்த்தால் நான் உடனே திரும்பிவிட்டேன்.

இவ்வளவு நீளமான காதையைக் கேட்பதற்கு அப்பொழுது உங்களுக்கு அவகாசம் (காலம்) இல்லை. ஆகவே, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சாவகாசமாச் சொல்லிக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் (நோக்கத்தில்) நான் திரும்பிவிட்டேன்.

இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம், என்று தள்ளிபோட்டுப் போட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்பாராதவிதமாக, நாம் இருவரும் இன்று பரஸ்பரம் சந்தித்தோம்.

எனக்குப் பழைய காதலி ஞாபகம் வந்தது. நீங்களும் எனக்கு சொப்பன அற்புதத்தைச் சொன்னீர்கள். இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் அபூர்வமன்றோ! இது ஓர் அற்புதாமான லீலையன்றோ ! (அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று இங்கு முடிகிறது.)

கதைகேட்பவர்களே! இப்பொழுது, பிரேமை மிகுந்த பக்தர்களை சாயி எவ்வாறு அன்புடன் நடத்தினார் என்பதை விளக்கும் இன்னொமொரு காதையை நிலையான சித்தத்துடன் கேளுங்கள்.