valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஒரு பைசாவைக் கூட அவர் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. மருத்துவ ரீதியில் அவருடைய புகழ், அவர் பெற்ற நோய் நிவாரண வெற்றிகளைச் சார்ந்தே வளர்ந்தது. ஏழைஎளியவர்களின்  நோய் தீர்த்து, ஆரோக்கியம் தந்து, அந்த ஜில்லாவிலேயே (அஹமத் நகர்) சிறந்த ஹகீம் எனப் புகழ் பெற்றார்.

ஆனால், இந்த ஹகீம் மற்றவர்களுடைய நல்வாழ்வுக்காகவே வாழ்ந்தார். தமக்கு என்ன கிடைக்கும் என்பதை உதாசீனம் செய்துவிட்டார்.  மற்றவர்களுக்கு நன்மை நடக்கவேண்டுமென்பதற்காக அவர்களுடைய சகிக்க முடியாத வலிகளையும்  அவஸ்தைகளையும் தம்முடைய உடலில் ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொண்டார்.

கதை கேட்பவர்களுக்கு நிவேதேனமாக, பாபாவின் தயை ஒழுகும் சுபாவத்தையும் எங்கும் நிறைந்த இயல்பையும் எடுத்துக் காட்டுமாறு இந்த சந்தர்ப்பத்தில் புதினமான கதை ஒன்று சொல்கிறேன்.

1910 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னாள் தனத்திரி யோதசியன்று பாபா துனியுனுள்  விறகுகளை போட்டுக் கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்
திடீரென்று பார்த்தால் , கொழுந்து விட்டுப் பெரிதாக எரிந்து கொண்டிருந்த துனி யினுடைய  தீயில் பாபாவினுடைய  கை செருகப் பட்டிருந்தது. பாபா நிச்சிந்தையாக தான் இருந்தார். கை என்னவோ கருகிப் போய்  விட்டது.

அவருடைய தொண்டரான மாதவ் இதை உடனே கவனித்தார். அருகிலிருந்த மாதவராவ் தேச்பாண்டேவும் இதைப் பார்த்து விட்டு, உடனே பாபாவை நோக்கி ஓடினார்.

பாபாவுக்குப் பின்பக்கமாகச் சென்று, தம்முடைய இரு கைகளையும் பாபாவின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கோத்து  பாபாவைப் பின்னுக்கு இழுத்தார்.

"ஆஹா !" பாபா என்ன காரியம் செய்து விட்டீர்?" என்று கூவினார். இக் கூவலைக் கேட்ட பாபா, மோன நிலையிலிருந்து திரும்பி, "ஓ  சாமா, உனக்கு தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயினுடைய கையிலிருந்து திடீரென்று நழுவிக் கொல்லனுடைய உலைக் களத்தில் விழுந்து விட்டது.

"அவ்வாறு செய்யும்போது அவளையுமறியாமல் கையில் இடுக்கிக் கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டாள் . மித மிஞ்சிய  சுறு சுறுப்பான, அமைதியற்றிருந்த குழந்தை, கையிலிருந்து விழுந்துவிட்டது. ஆனால் , சாமா, அப் பெண் குழந்தை விழுந்தவுடனேயே நான் குழந்தையை தூக்கி விட்டேன்.

"அவ்வாறு அப் பெண் குழந்தையை உலைக் களத்தில் இருந்து எடுக்கும்போது இது நடந்து விட்டது! கை எரிந்து கருகிப் போனால் போகட்டும்; குழந்தை உயிர் பிழைத்ததே!"

"யாரால், எந்த விதமாக, தீகாயமடைந்த கைக்கு வைத்தியம் செய்யப் படவேண்டும்?" என்றெண்ணி மாதவராவ் பிரமித்துப் போனார். நானா சாந்தோர்கருக்கு கடிதம் எழுத வேண்டுமென்று தீர்மானித்தார்.



Thursday 20 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஓர் ஆடு கொல்லப்  படும்போது  அதனுடைய குடல்கள் உள்வெளியாகத் திருப்பிக் கழுவப்பட்டு மடிப்பு மடிப்பாக உலர வைக்கப்படும்.

அதுபோலவே பாபா குடல்களை வெளியே எடுத்து உள்வெளியாக திருப்பி, ஜாக்கிரதையாக கழுவிச் சுத்தம் செய்தார்  பிறகு, அவர் குடல்களை ஒரு நாவல் மரத்தின்மீது உலர்தினார் மக்கள் இதைப் பார்த்து ஆச்சரியமும் பயமும் அடைந்தனர்.

இக்காட்சியை  தம் கண்களாலேயே  பார்த்த மனிதர்கள் இன்னும் வாழ்கின்றனர். அபூர்வமான சித்தர் இவர், என்று அவர்கள் சொல்கின்றனர்.

சில சமயங்களில் அவர் கைகளையும் கால்களையும் உடலிலிருந்து பிரித்துக் கண்ட யோகம் பயில்வார். பிரிந்த அவயங்கள் மசூதியில் தனித் தனியாக பல இடங்களில் விழுந்து கிடக்கும்.

உடலின் அவயங்கள் கண்ட துண்டமாக இவ்வாறு விழுந்து கிடக்கும் பயங்கரமான காட்சியை பார்க்க, மக்கள் கூட்டங்கூட்டமாக மசூதிக்கு ஓடி வந்த போது  அவர்கள் பார்த்தது பாபாவின் முழுமையான உருவத்தையே!

ஒருசமயம் இந்தக் காட்சியை பார்த்த ஒருவர் பீதியடைந்து, யாரோ ஒரு கொலைகாரன் பாபாவைக் கொன்று விட்டுத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டான் என்று நினைத்தார்

மசூதியின் நான்கு மூலைகளிலும் உடலின் அங்கங்கள் இறைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. அது நள்ளிரவு நேரம்; யாருமே அருகில் இல்லை; அவர் மிகக் கவலையுற்றார்

யாரிடமாவது போய்ச் சொல்லலாம் என்று பார்த்தால், சிக்கலில் மாடிக் கொள்ளக் கூடும் என்பது அவருடையப் பிரச்சினை. ஆகவே, அவர் மசூதிக்கு வெளியில் போய்  உட்கார்ந்து கொண்டார்.

அது பாபாவினுடைய யோகப் பயிற்சிகளுள் ஒன்றாக இருக்கலாம், என்று அவருக்குக் கனவிலும் தோன்றவில்லை. சின்னாபின்னமாக வெட்டப் பட்ட உடலின் காட்சி அவருக்குப் பெரும் பீதியை அளித்தது.

அவர் கண்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவர் விரும்பினாராயினும் முதற் செய்தி கொடுப்பதால் கொலைக் குற்றம் தம் மீது சாட்டப் படலாம் என்று பயந்தார் இந்த பயமே அவரை எவரிடமும் இச் செய்தியை சொல்ல முடியாமல் செய்து விட்டது.

அவருடைய மனதில் எண்ணற்ற கற்பனைகள் தோன்றின. ஆகவே, அவர் பொழுது புலர்ந்த பிறகு மறுபடியும் சென்று பார்த்தார்; பெரு  வியப்படைந்தார்.

அவர் ஏற்கனவே கண்ட காட்சி முழுக்க மறைந்து விட்டது. பாபா தம்முடைய வழக்கமான இடத்தில சௌக்கியமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். தாம் கண்டது ஒரு கனவோ என்று அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

தோதி-போதி  போன்ற யோக சாதனைகளை  பாபா தம் சிறு வயதிலிருந்தே பயின்று வந்தார். எவராலுமே அவருடைய யோக சக்திகளையும் அச் சக்திகளால் அடைய முடிந்த மர்மமான உடல் நிலைகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 


Thursday 13 December 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்
கிராமத்து மக்களுக்கு அவர் நாட்டுமருந்துகளைக் கொடுத்துவந்தார். நோயினுடைய குறிகளை அறிந்து மருத்துவம் செய்து அதில் பெருமளவில் வெற்றியடைந்து புகழ் பெற்ற ஹகீமாகத் திகழ்ந்தார்

ஒருமுறை பக்தர் ஒருவருக்குக் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போய்  நெருப்புக் கோளங்களைப்  போல ஆகி விட்டன. கண்விழிகளில் ரத்த  நாளங்கள் வெடித்து விடும் போலச் சிவப்பேறிக் கிடந்தன. ஷீரடியில் வைத்தியர் ஒருவரும் கிடைக்கவில்லை.

நம்பிக்கையுள்ள எளிமையான பக்தர்கள் அவருடைய கண்களை பாபாவிடம் காண்பித்தனர். உடனே பாபா செங்கோட்டைக் காய்களை  கொணரச் செய்து அவற்றை அரைத்து இரண்டு உருண்டைகளாக செய்து கொண்டார்.

இம்மாதிரியான உபாதைக்கு சிலர் கர்மாவை உபயோகிப்பர். சிலர் பசும்பாலைப் பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் வைப்பர். சிலர் சீதள கற்பூரத் தையோ கண்ணுக்கிடும் மையையோ உபயோகிப்பர்.

அனால், பாபாவின் உபாய்மோ யாருமே கண்டறியாதது. செங்கோட்டை  உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொரு கண்ணாக அப்பி, துண்டுத் துணியால் கட்டுப்போட்டு விட்டார்.

மறுநாள் காலையில் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களின்மீது தாரையாக தண்ணீர் ஊற்றப் பட்டது. வீக்கம் அறவே வடிந்து விட்டது. விழிக் கோளங்கள்  நிர்மலமாக ஆகிவிட்டிருந்தன .

கண் எவ்வளவு நுட்பமான அங்கம்! ஆனால், செங்கோட்டையின் பிசின்கூட எரிச்சலையோ வலியையோ உண்டாக்கவில்லை. நேத்திர ரோகத்தை முழுமையாக முழுமையாக நிவாரணம் செய்து விட்டது. இம்மாதிரி எத்தனையோ அனுபவங்கள்.

பாபாவுக்கு தோதீ-போதி (ஹட யோகம்) தெரிந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்து விட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார். பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்

மசூதியிலிருந்து கிணறு  இருந்த அதே தூரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. ஆலமரதுக்கப்பால் மற்றொரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுக்கு அவர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்வார்.

நண்பகலில் கொளுத்தும் வெய்யிலில் யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, அவரே கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து முகத்தையும்  வாயையும் கழுவிக் கொள்வார்.

இம்மாதிரியான ஒரு சந்தர்பத்தில், அவர் குளிப்பதற்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது  வேகமாகக் குடல்களை வெளியே எடுத்து அவ்விடத்திலேயே கழுவ ஆரம்பித்தார்



Thursday 6 December 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

நற்செய்கையோ  அல்லது துற்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றியோ சூசகமோ குறிப்போ சொல்லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

ஒன்றுமறியாதவர்  போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மகா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே சாயியின் லக்ஷணம்.

மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா ஷீரடியில் வாழும் பிரத்யக்ஷமான தெய்வம் என்றே அனைத்து  மக்களும் பாவித்தனர்.

பாபாவினுடைய அற்புதச் செயல்கள் என்னே ! பாமாரனாகிய நான் அதை எவ்வளவுதான் வர்ணிக்க முடியும்! மூர்த்திகளுக்கும் கோயில்களுக்கும் பாபா செய்த புனருத்தான பணிகள் அபாரமானவை.

ஷிர்டியிலிருந்த சனி, கணபதி, சங்கர் - பார்வதி, கிராம தேவி, மற்றும் மாருதி கோயில்களினுடைய சீரமைப்பு தாத்யா பாட்டீல்  மூலம் செய்யப் பட்டது.

மக்களிடமிருந்து பாபா தக்ஷிணை ரூபமாக வாங்கிய பணத்தில் ஒரு பகுதி தர்ம காரியங்களுக்காகச் செலவிடப்பட்டது. ஒரு பகுதி மக்களுக்கு வழங்கப் பட்டது.

சிலருக்கு 30 ரூபாய், சில பேருக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று, பாபா யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென்று விரும்பினாரோ அவர்களுக்கெல்லாம் வழங்கினார்.

இந்தப் பணம் அனைத்தும் தருமத்திலிருந்து வந்ததே; வாங்கிக் கொண்டவர்களும் அதை தருமம்  என்றே கருதினர். பாபாவும் அத்  தொகைகள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடப் படவேண்டுமென்று விரும்பினார்.

இவ்விதமாக சாயி தரிசனத்தால் சிலர் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் ஆனார்கள். பலர் குஷ்டரோகத்திலிருந்து நிவாரணமடைவார்கள் . பலர் ஷேமத்தை அடைந்தார்கள்.

பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல்  பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். மூலிகைத் தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி பெற்றனர்.

பாபாவினுடைய  மகிமை அபாரமானது. எவராலும் அளவிடமுடியாதது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர்.

காலைகடன்களை முடித்த பின், சில நாள்களில் குளித்து விட்டும், சில நாள்களில் குளிக்காமலும் துனியின்  அருகில் ஒரே இடமாக தினமும் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

இடுப்பைச் சுற்றி ஒரு சுத்தமான  வேட்டியை கட்டிக் கொண்டு, நீளமான சட்டையை போட்டுக்கொண்டு, தலையில் அழகான வெள்ளை நிறத் தலைப் பாகை அணிந்து கொண்டிருப்பார். ஆரம்ப காலத்தில் இதுவே அவருடைய உடை.

Thursday 29 November 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

அடுத்த ஆண்டு விளைச்சல் குறைந்துபோனால் பற்றாக்குறையைச்  சரிக் கட்ட உதவுமென்ற நோக்கத்தில், விவசாயிகள் நடப்பு ஆண்டின் அறுவடையைப் பெருமளவில் சேமித்து வைக்கிறார்கள்.

அவ்வாறே பாபா ஒரு மூட்டை கோதுமையைக் கொள்முதலாக எப்பொழுதும் வைத்திருந்தார். மாவு அரைப்பதற்கு ஓர் எந்திரமும் சலிப்பதற்கு ஒரு முறமும் ஜல்லடையும் மசூதியில் இருந்தன. வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள்கள் குறைவில்லாமல் இருந்தன.

முற்றத்தில் ஓர் அழகான துளசி மாடமும் இருந்தது. அவ்விடத்திலேயே அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு தேரும்  இருந்தது.

பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின்  பயனாகவே நாம் ஓர் அவதார புருஷரை சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டி விடுங்கள்.

பூர்வ ஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது.  இதுவே நமக்கு மனதில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளில் இருந்து விடுதலையும் அளிக்கிறது.

வருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ சமர்த்த  சாயியின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதவுமே இணையாகாது.

தன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் சாயியின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன்? எவரெவர் அவருடைய பாதங்களிலேயே  மூழ்கி மனதுடன் இருக்கின்றனரோ, அவரவர் சாயியால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப் படுகின்றனர்.

தண்டமும் மான் தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில்  வசிப்பவர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், துறவிகள், உதாசீகள், இம்மாதிரியாகப் பலவகையான சாதுக்கள் பாபாவிடம் வந்தனர்.

பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார் 'அல்லாமாலிக்' அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (சட்கா ) கை வீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.

தவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தமும் பொழிந்தது. கடைசி வரை பாபா வினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடை போட முடியவில்லை

அரசராயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லா விதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப் பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே!


Thursday 22 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம் 
 
கோகுலாஷ்டமி (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி) பண்டிகையன்று கோபாலகாலா கொண்டாட வைப்பார். அது போன்றே, ஈத் பண்டிகையின்போது முஸ்லீம்கள் அவர் வாழ்ந்த மசூதியில் நமாஸ் செய்வதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை.

ஒருமுறை முஹர்ரம் பண்டிகை நெருங்கியபோது சில முஸ்லீம்கள் ஒரு தாபூதைக் (பாவாடையைக்) கட்டிக் கொண்டு கிராமத்தினுள் ஊர்வலமாக எடுத்து செல்லவேண்டுமென்று விரும்பினர்.

பாபாவின் அனுமதி கிடைத்த பிறகு ஒரு பாடை கட்டப்பட்டு நான்கு நாள்கள் வைக்கப் பட்டிருந்தது. ஐந்தாவது நாள், மனத்தில் சுகமும் இன்றி துக்கமும் இன்றி அது காலி செய்யப் பட்டது.

முஸ்லீம் என்று நினைத்தால் அவருக்குக் காத்து குத்தப் பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு சுன்னத் செய்யப் பட்டிருந்தது. அவதார புருஷரான சாயி ஹிந்துவும்  அல்லர்; முஸ்லீமும் அல்லர்.

ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது. சங்கும் மணிகளும் முழங்கின. அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச் சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு சம்மதம் இல்லாதவை)

மசூதியில் சதா பஜனை நடந்தது. அன்னதானமும் நடந்தது. ஹிந்துக்கள் அவருக்குப் பாத பூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?

முஸ்லீமாக இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினி ஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளை தூக்கி எறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?

இவ்விதமாக மக்கள் வியந்து போனார்கள். இது எவ்வாறு நடக்க முடியும் என்று நேரில் கண்டு கொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே நடந்து கொண்டார்கள்! தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப் போனார்கள்!

சதாசர்வ காலமும் ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவேன்றோ முஸ்லீமேன்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப் பட்டவராக இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம். ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவு கூடப் பிரமாணம் ஆகாது.

தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ் ஜாதியோ, மேல் ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப் பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.

பக்கீர்களுடன் அமர்ந்து உணவு உண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்து விட்டாலும்  சரி, வெறுப்படைந்து முகம் கோண மாட்டார்.



Thursday 8 November 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

புராதனமான கோயில்களைப் புதுப்பிப்பதில் பாபா எவ்வளவு பிரீதியுடையவராக இருந்தார் என்ற முந்தய காதையின் தொடர்ச்சியை நினைவு கூர்வோம்.

பரோபகார ரீதியில் பாபா எவ்வாறு சிரமங்களை மேற்கொண்டார் என்பது பற்றியும், பக்தர்களுடைய துக்கங்களையும் உபாதிகளையும்  தம்முடலில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காகத் தம்முடலை வருத்திக் கொண்டு எவ்வாறு அவர்களைக் காத்தருளினார் என்பது பற்றியும்,

சமாதி நிலையில் எவ்வாறு கண்டயோகம், தோதி - போதி, இத்யாதி பிரயோகங்களை செய்தார் என்பது பற்றியும், சில சமயங்களில் உடம்பிலிருந்து தலை, கை, கால் ஆகிய அவயங்களை பிரித்தெடுத்து வைத்து, மறுபடியும் அவற்றை முன்போலவே எப்படி ஒன்று கூறினார் என்பது பற்றியும் இப்பொழுது சொல்கிறேன்.

ஹிந்து என்று கருதினால் அவர் பார்வைக்கு ஒரு முஸ்லீமைப்  போல இருந்தார். முஸ்லீம் என்று நினைத்தால் அவர் ஒரு ஹிந்துவின் லக்ஷணங்களுடன் விளங்கினார். இந்த அபூர்வமான  அவதாரத்தை எந்தப் பேரறிக்னரால் விளக்க முடியும். ?

அவர் ஹிந்துவா, முஸ்லீமா என்று எவராலும் அணுப்  பிரமாணமும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு வர்க்கத்தினரை யும் அவர் ஒன்று போலவே நடத்தினார்.

ஸ்ரீ ராம நவமி ஒரு ஹிந்துப் பண்டிகை. ஆனால், அவர்தான் அதைக் கொண்டாட வைத்தார். சபா மண்டபத்தில் தொட்டில் கட்டிக் கதாகாலட் சேபமும்  நடக்கும்படி செய்தார்.

மசூதியின் எதிரிலிருந்த சவுக்கதில் தொட்டில் கட்டப்படும். ஸ்ரீ ராம் ஜனன கதா காலத்செபமும்  செய்ய வைப்பார். அன்றிரவே முஸ்லீம்களுக்குச் சந்தக் கூடு ஊர்வலம் நடத்தவும் அனுமதி தந்தார்.

முஸ்லீம்கள் எவ்வளவு பேர்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பேர்களையும் சேர்த்து, சந்தனக் கூடு ஊர்வலம் மரியாதையுடன் நடத்தப்பட்டது. இவ்விதமாக அவர் இரண்டு பண்டிகைகளையும் மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட வைத்தார்.

ஸ்ரீ ராம நவமி உற்சவ சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடத்துவதிலும் குதிரைகள், தோடாக்கள் , தலைப் பாகைகள் போன்ற பொருள்களைப் பரிசாக அளிப்பதிலும் மிக மகிழ்ச்சியடைந்தார். 


Thursday 1 November 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

தக்ஷிணை கேட்டு வாங்கிய பணம் பழைய கோயில்களைப் புதிப்பிக்க எவ்வாறு செலவிடப் பட்டது என்பது பற்றியும் தோதீ - போதீ, கண்ட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளில் பாபா தம் உடலை வருத்திக் கொண்ட விவரமும் -

எவ்வாறு பாபா மற்றவர்களின் நல்வாழ்வுக்காக கஷ்டப் பட்டார் என்பது பற்றியும் பக்தர்களின் சங்கடங்களை எவ்வாறு நிவாரணம் செய்தார் என்பது பற்றியும் - இவையனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டு கதை கேட்பவர்களைத் திருப்தி செய்யும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'ஸ்ரீராம ஜன்ம உற்சவம்" என்னும் ஆறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


Thursday 25 October 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்! 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுணம்? தாத்யா பாடீலை இந்த ஆபத்திலிருந்து விடுவிப்பது எப்படி?" என்று மக்கள் வியந்தனர்.

பாகோஜி சிந்தே (பாபாவுக்கு பணியால் போல் சேவை செய்த அடியவர்.) தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார். பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம் போல் துவம்சம் செய்யப் பட்டார்.

மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதே போன்று செங்கற்களால் தாக்கப் பட்டார்கள்.

'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்?" என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்த போதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது.  கடைசியில் பாபா அமைதியடைந்தார்.

உடனே ஒரு ஜவுளிக்கடைக்காரர் அழைக்கப் பட்டு, தங்கச் சரிகை போட்ட தலைப் பாகை கொண்டு வரச் செய்யப் பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப் பாகையைத் தாத்யாவுக்கு கட்டி விட்டார்.

இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

எக்காரணம் பற்றி அவர் கடும் கோபமடைந்தார்? எப்படிக் காண நேரத்தில் சாந்தியடைந்து சந்தோசம் ஆகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்கமே புரியவில்லை.

சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும்.

பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்று மனதில் தோன்றுகிறது; எதை முதலில் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்கு முக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது.

எந்நாளும் பாரபட்சம் காட்ட முடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்க வேண்டுமென்ற ஆவலைத் திருப்தி செய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்கு பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்பது பற்றிய வாய்மொழி விவரங்களையும் முதியோர்களிடம் நான் கேட்டவாறு ஆதிகாலக் கதைகளையும் என்னுடைய சக்தி அனுமதிக்கும் அளவில் சொல்கிறேன்; கேளுங்கள். 


Thursday 18 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

எப்படியிருப்பினும், இந்த வேலையும் பக்தர்களின் கடுமையான உழைப்பால் அம்முறையிலேயே (மசூதி தளம் பரவிய) அந்தச் சூழ்நிலையிலேயே இரவோடு இரவாக முடிக்கப்பட்டது.

பெருமுயற்சி எடுத்து பதர்கள் இரவில் இரும்புதூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். அடுத்த நாள் காலையில் பாபா தூண்களைப் பிடுங்க முயல்வார். நல்ல சமயமாகப் பார்த்து, பக்தர்கள் மறுபடியும் தூண்களை நிலைப் படுத்துவார்கள். இத் தொடர்முயற்சிகளே  அவர்களைச் சோர்வடையச் செய்தன.

எல்லாரும் கீழ்ப்பாய்ச்சியை இழுத்துக் கட்டிக் கொண்டு, இரவைப் பகலாக்கி, அவர்களுடைய இதயத்திலிருந்த ஒரு பெரும் ஆவலை தீர்த்துக் கொள்ளக் கடுமையாக உழைத்தனர்.

முதலில் இவ்விடம் (மசூதியின் எதிரில்) ஒரு சிறு முற்றம் அடங்கிய திறந்த வெளியாகவே இருந்தது. ஒரு கொட்டகை கட்டுவதற்குத் தகுதியான இடம் என்று தீட்சிதர் கருதினார்.

எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்று தீர்மானம் செய்துகொண்டு இருப்புத் தூண்களையும் இரும்புக் கோணச் சட்டங்களையும் வாங்கினார்கள். இரவு படுத்துக் கொள்வதற்கு பாபா சாவடிக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு, அவர்கள் வேலையை முடித்தார்கள்.

இரவு முழுவதும் பெருமுயற்சி செய்து  பக்தர்கள் இரும்புத் தூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். காலையில் சாவடியிலிருந்து திரும்பிவந்தவுடனே பாபா கம்பங்களை பிடுங்க ஆரம்பிப்பார்.

ஒருநாள் பாபா கடுங்கோபம் கொண்டார். ஒரு கையால் தாத்யாவின் கழுத்தை நெரித்துக் கொண்டே மறுகையால் ஒரு கம்பத்தை பிடுங்க முயற்சி செய்தார்.

இரும்புத் தூணை பலமாக ஆட்டி அதைப் பிடுங்கி விட்டார். பிறகு அவர் தாத்யாவினுடைய தலைப்பாகையை பறித்து, ஒரு தீக்குச்சியால் அதைக் கொளுத்தி கோபம் பொங்கக் குழிக்குள் விட்டெறிந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய கண்கள் நெருப்புக் கோலங்கள் போல ஜொலித்தன. அவருடைய முகத்தை நேருக்கு நேராக யாரால் பார்க்க முடிந்தது. எல்லாருமே நாடு நடுங்கி போனார்கள்.

சட்டென்று தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து, சுப காரியம் என்று குறிப்பளிப்பது போலக் குழியில் வீசி எறிந்தார்.

சாபங்களும் திட்டுகளும் வசையும் சரமாரியாக பொழிந்தன. தாத்யா மனதளவில் பயந்து நடுநடுங்கி போனார். ஓர் இக்கட்டான நிலைமை உருவாகிட்டது. இது எங்கனம் நடந்தது?


Thursday 11 October 2012

ஷிர்டி சாய் சத் சரிதம் 

பாலபுவாவும் தம்மைப் பொறுத்தவரை எண்ணம் நிறைவேறியது பற்றி மிக்க மகிழ்ச்சியடைந்தார். பாபா வுக்கும் சந்தோசம். எல்லாருடைய மனோரதமும் நிறைவேறியது.

புவாவுக்கு கனத்த சம்பாவனை கிடைத்தது. பாபாவின் ஆணைப்படி அவருக்கு நூற்றைம்பது ரூபாய் அளிக்கப்பட்டது. புவாவினுடைய மகிழ்ச்சி கரைபுரண்டது.

கவடேயில் ஐந்து வருடங்களில் கிடைக்ககூடிய வருமானத்தை பாபா ஒரே வருடத்தில் கொடுத்துவிட்டார். பாலபுவாவுக்கு ஏன் சந்தோசம் பொங்கி பாபாவிடம் விசுவாசம் அதிகரிக்காது?

ஆயினும், பின்னர் தாசகனு ஷீரடிக்கு ஒருமுறை வந்தபோது, ஸ்ரீ ராம நவமி கதாகாலட் ஷேபப் பொறுப்பு பாபாவின் அனுமதியுடன் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஏழையிலும் ஏழைகள் உட்பட அனைவரும் ஆனந்தம் அடையுமாறு எல்லாருக்கும் அன்னதானம் செய்யப் படுகிறது.

அச்சமயத்தில் சமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கேதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் சாயி நாமம் வானைப் பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது.

உருஸ் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்ததைப் போலவே, கோபால் குண்டுக்கு மசூதியை புனருத்தாரணம் செய்து அழகுபடுத்த வேண்டும் என்னும் யோசனையும் மனதில் உதித்தது.

மசூதி புனருத்தானம் செய்யப்பட வேண்டுமென்றும் அதையும் தம் கைப் படச் செய்யவேண்டுமென்றும்  கோபால் குன் தீர்மானம் செய்தார். வேலைக்கு வேண்டிய கற்களை தயார் செய்தார்.

ஆனால் கோபால் குண்டுக்கு இந்த சேவையை செய்யக் கொடுத்து வைக்க வில்லை என்று தெரிகிறது. பிறகு, பாபாவின் விருப்பப்படி இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

நானா சாஹேப் சாந்தோர்கர் இப்பணியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் காகா சாஹேப் தீட்சிதர் தளம் பரவும் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பாபா விரும்பியதாக இப்பொழுது தெரிகிறது.

சிறிது காலம் கழித்து அது அவ்வாறே நடந்தது. முதலில், பக்தர்கள் சோர்ந்து போகும் வரை திரும்பத் திரும்ப அனுமதி கேட்டும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. மஹால் சாபதி பரிந்துரை செய்யுமாறு வேண்டிக் கொள்ளப் பட்டார். இதன் பிறகே பாபா அனுமதி தந்தார்.

இரவோடு இரவாக தளம் போடப் பட்டது. அடுத்த நாளிலிருந்தே பாபா ஆசனமாக ஒரு சிறு மெத்தையை உபயோகிக்க ஆரம்பித்தார்.

1911  ஆம் வருடம் ஒரு சபா மண்டபம் கட்டப் பட்டது. ஆனால், ஓ! அது என்னே பகீரதப் பிரயத்தனம்.! என்ன உழைப்பு! எத்தனை தொந்தரவுகள்! இது போதாதென்று இவ்வேலை அவர்களுடைய பயத்தால் நடுங்க வைத்தது. 


Thursday 4 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பாலபுவாவுக்கு இவ்விரண்டு உற்சவங்களுக்கு முப்பது ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வருடம் கவடேயில் காலரா நோய் கண்டு, கிராம மக்கள் அவதிப் பட்டனர்.

அதனால், ஸ்ரீ ராம நவமி உற்சவம் கொண்டாட முடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு வெளியில் போய் விட்டதாகவும் அடுத்த வருடம் வரச் சொல்லியும் புவாவுக்கு கடிதம் வந்தது.

சுருங்கச் சொன்னால், ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்யும் பாக்கியமும் சன்மானமும் புவாவிற்கு அவ்வர்டம் கிடைக்காமல் போய்விட்டன. ஆனால், அது அவருக்கு  ஷிர்டி செல்வதற்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. ஆகவே, புவா ஹரி சீதாரம் தீஷிதரை சந்தித்தார்.

தீஷிதர் பாபாவின் பரம பக்தராதலால், அவர் மனது வைத்தால் ஷிர்டிக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும். சுவாமி காரியுமும் நடக்கும் என்று அவர் நினைத்தார்.

அவர் தீஷிதரிடம் கூறினார், "இந்த வருடம் எனக்கு சன்மானம் கிடைக்காமல் போய் விட்டது. ஆகவே, நான் பாபாவை தரிசனம் செய்வதற்காகவும் கதாகாலட்ஷேபம் செய்வதற்காகவும் ஷிர்டி செல்லவேண்டுமென்று நினைக்கிறேன்".

தீஷிதர் பதில் கூறினார். "சன்மானம் கிடைக்குமென்று நிச்சயமாக சொல்லமுடியாது. கொடுப்பதோ இல்லையோ  பாபாவின் கையில்தான் இருக்கிறது. கதாகாலட்ஷேபம்  செய்வதற்கும் பாபாவின் சம்மதம் தேவை!".

இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே காகா மகா ஜனி அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராமலேயே அங்கிருந்த அனைவருக்கும் ஷீரடியின் உதி பிரசாதத்தை அளித்தார். இது சுப சகுனமாக கருதப் பட்டது.

மகாஜனி அப்பொழுதுதான் ஷிர்டியிலிருந்து திரும்பி இருந்தார்; ஷீரடியில் அனைவரும் நலம் என்று தெரிவிப்பதற்காக அப்பொழுது அங்கு வந்தார்; சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

தாம் பாபாவை அனுமதி கேட்பதாகவும் அனுமதி கிடைத்தால் நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்பதாகவும் தீஷிதர் புவாவிடம் பரம பிரீதியுடன் சொன்னார்.

யாத்திரைச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் ஷீரடிக்கு வரச் சொல்லி புவாவுக்கு ஒரு கடிதம் வந்தது; இதற்காக ஒருவர் மனத்தில் சந்தேகங்களை எழும்பிக் கொண்டு தொந்தரவுபடக் கூடாது என்ற குறிப்பும் இருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு தீஷிதர் ஷிர்டிக்குச் சென்றார்; பாபா தம்முடைய அனுமதியை அளித்தார். பாலபுவா ஷீரடிக்கு வந்தார்; யதேஷ்டமாக (மனம் திருப்தி அடையும் வரை) சாயி தரிசனம் செய்தார்.

பாபாவும் மிகுந்த பிரேமையுடன் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை கோலாகலமாக கதாகாலட்சேபத்துடனும் பண்டிகைக் குதூகலத்துடனும் பாலபுவாவை வைத்துத் தம்முடைய முன்னிலையில் நடத்திக் கொண்டார். 


Thursday 27 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

'இன்னும் என்ன தேவை இருக்க முடியும்? ஆனால், சாயியின் திருவாய் மொழி என்றுமே சோடை போனதில்லையே?' என்று நான் யோசித்தேன். உற்சவம் இன்னும் சம்பூரணமாகவில்லை என்று என் மனத்துள் அப்போதுதான் உதித்தது.

அன்றைய உற்சவம் நடந்துவிட்டது; ஆனால், மறுநாள் 'கோபாலகாலா' நடக்காமல் உற்சவம் முடிந்துவிட்டது என்று எவ்வாறு சொல்ல முடியும்?

இப்படியாக, பஜனை, கோபால கலா எல்லாம் அடுத்த நாள் கொண்டாடப் பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு பாபா தொட்டிலை அவிழ்த்துவிட அனுமதியளித்தார்.

அடுத்த வருடம் காலட்சேபம் செய்ய பீஷ்மா கிடைக்கவில்லை. ஆகவே, பாலபுவா சாதார்கர் காலட்சேபம் செய்வதற்கு அணுகப்பட்டார். ஆனால், அவரோ 'பிர்ஹாட் சித்த கவடே' என்னும் ஊருக்கு காலத்ஷேபதிர்காகப்  போக வேண்டியிருந்ததால் அவரும் கிடைக்கவில்லை.

ஆகவே, காகா மகா ஜனி, நவீன துகாராம் என்று பிரசித்தி பெற்ற பால புவா பஜணியை அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவத்தை பாலபுவா பஜனி நடத்தி வைத்தார்.

அவர் கிடைக்காமல் போயிருந்தாலும் காக மஹா ஜனியே காலட்சேபம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பார். அவருக்கு தாச கணு இயற்றிய ஸ்ரீராம சனனக் காதைச் செய்யுள்கள் மனப்பாடம்.

மூன்றாவது வருடம் பாலபுவா சாதார்கரே சரியான சந்தர்ப்பத்தில் ஷீரடிக்கு வந்து சேர்ந்தார். இது எப்படி நடந்தது என்பதை கவனமாக கேளுங்கள்.

சாயி பாபாவின் கீர்த்தியைக் கேள்விப்பட்ட பிறகு பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் அவர் மனத் தெழுந்தது. அவருக்கு வழித்துணைக்கு ஒருவர் தேவை; துணை எப்படிக் கிடைக்கும் என்பதே அவருடைய சிந்தனையாக இருந்தது.

பாலபுவா ஒரு ஹரிதாசர்; சாதாரா என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால், அச்சமயத்தில் அவர் பம்பாய் நகரத்திலுள்ள பரேலில் வசித்து வந்தார்.

சாதாரா ஜில்லாவில் பிர்ஹாட் சித்த கவடே என்னும் தேவஸ்தானம் ஒன்று இருந்தது. ஸ்ரீ ராமநவமியன்று அங்கே கதாகாலட்சேபம் செய்வதற்காக சாதர்கர் வருடாந்திரமாக ஒரு மானியம் பெற்றுக் கொண்டிருந்தார்.

அந்த தேவஸ்தானத்துடன் அவருக்கு வருடாந்திரமாக இரண்டு உற்சவங்களுக்கு சம்பந்தம் இருந்தது; ஒன்று ஆடி மாத ஏகாதசி, இரண்டாவது சித்திரை மாதத்தின் ஸ்ரீ ராமநவமி;

மொகலாய சக்கரவர்த்தி (அக்பர்) ஏற்படுத்திய சாசனத்தின்படி நூற்று இருபது நான்கு ரூபாய், செலவுகளுக்காக அங்கீகாரம் செய்யப் பட்டிருந்தது. மூல சமஸ்தானத் திலிருந்து முறைப் படி இத்தொகை இந்தக் கோயிலின் குறிப்பிட்ட செலவுகளுக்காகப் பிரித்தளிக்கப்பட்டு இருந்தது. 


Thursday 20 September 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

கதாகாலட்சேபம் தடங்கலின்றி நடக்குமோ, நடக்காதோ!" என்று அவர் கவலையுற்றார்.

நரம்புத் தளர்ச்சியினால் கால் கனத்துப் போக, மசூதியின் படிகளை தடுமாறிக் கொண்டே ஏறினார்.

பாபா அவரை, 'தொட்டில் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது' என்று வினவினார். கதாகாலட்சேபதைப் பற்றியும் கொண்டாட்டத்தில் விவரங்களும் சுருக்கமாக சொல்லப்பட்டவுடன் பாபா மகிழ்ச்சி யடைந்தார்.

பாபா, அருகிலிருந்த சுவர் மாடத்திலிருந்து ஓர் அழகான மாலையை எடுத்து காகாவின் கழுத்தில் அணிந்தார். பீஷ்மா அணிவதற்காக இன்னொரு மாலையை அவரிடம் கொடுத்தார்.

பாபா தொட்டிலைபற்றிக் கேட்ட கேள்வி எல்லாரையும் சஞ்சலப் பட வைத்தது. ஆனால், பாபா காகாவுக்கு மாலை அணிவித்ததைப் பார்த்ததும், எல்லாரும் நிம்மதி, பெருமூச்சு விட்டனர்.

பீஷ்மா கல்விகேள்விகளில் வல்லவர்; இதிஹாச புராணங்களை நன்கு அறிந்தவர், ஆகையால் அவருடைய காலட்சேபம் மிகவும் ரசிக்க கூடியதாக அமைந்தது. கேட்டவர்கள் அபரிதமான ஆனந்தமடைந்தனர்.

பாபாவின் முகம் பிரசன்ன வதனம் ஆயிற்று (மலர்ந்தது). எவ்விதமாக அனுமதி தந்தாரோ, அவ்விதமாகவே பக்தர்களை பஜனையுடனும் காலத்ஷேபதுடனும் கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்தார்.

காலத்ஷேபத்தில் ஸ்ரீ ராம ஜனன கட்டம் வந்தபோது குலால் என்னும் வர்ணப் போடி எங்கும் தூவப் பட்டது. அதில் சிறிது பாபாவின் கண்ணில் விழுந்து விட்டதால், கௌசல்யாவின் அரண்மனையில் குழந்தையாக இருப்பதற்குப் பதிலாக, பாபா நரம்சிம்ஹா அவதாரம் எடுத்து விட்டார்.

ஆனால், வர்ணப் போடி கண்ணில் விழுந்ததென்னவோ ஒரு சாக்குதான். ஸ்ரீ ராம அவதாரத்தில் மகா விஷ்ணு ராவணனை வதம் செய்து ராக்ஷசர்களின் கொடூரச் செயல்களை அழித்ததை, காலஷேபம் நடந்த நேரத்தில் பிரதிபளிப்பதற்காகவே அவர் கோபாவேசம் கொண்டார்.

உக்கிர நரசிம்ஹரைப் போல திடீரென்று கோபம் பொங்கி எழுந்தது; சாபங்களையும் வசவுகளையும் சரமாரியாகப் பொழிந்து தள்ளி விட்டார்.

தொட்டில் தூள்தூளாக போகிறதென்று நினைத்து ராதாகிருஷ்ணபாயி மிகவும் அதிர்ந்து போய் விட்டார். எப்படி அந்தத் தொட்டிலைக் காப்பாற்றுவது என்பது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது.

தொட்டிலைச் சீக்கிரமாக அவிழ்த்து விட வேண்டுமென்று அவரசரபடுதித் திரும்ப திரும்ப தொந்தரவு செய்தார். ஆகவே, காகா மகாஜனி தொட்டிலை அவிழ்ப்பதர்க்குச் சென்றார்.

இது பாபாவை மிகவும் எரிச்சலூட்டியது. அவர் பயங்கரமாகவும் காகாவை அடிக்கப் போவது போலவும் ஆக்ரோஷத்துடன் தொட்டிலை நோக்கி ஓடினார். தொட்டிலைக் கழற்றும் முயற்சி நிறுத்தப்பட்டது; பாபாவும் அமைதியடைந்தார்.

பின்னர், பிற்பகலில் தொட்டிலை அவிழ்க்க அனுமதி வேண்டப் பட்டபோது பாபா ஆச்சரியத்துடன் வினவினார், "இப்போது எப்படி தொட்டிலை இறக்கி விடுவது? இன்னும் அதற்குத் தேவை இருக்கிறது!"


Thursday 13 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆனால்,  ஸ்ரீ ராம ஜன்ம உற்சவத்தைக் கொண்டாட வேண்டுமென்றால், கதா காலாட்சேபதிற்கு ஏற்பாடு செய்யப் படவேண்டுமே? இந்தக் குக்கிராமத்தில் காலட்சேபம் செய்யும் திறமையுள்ள ஹரிதாசர் எப்படி கிடைப்பார்? இது ஒரு பிரச்சினையாக இருந்தது.

பீஷ்மா இவ்வாறு சொன்னார், 'நான் கதாகாலட்சேபம் செய்கிறேன். நீங்கள் ஆர்மோனியம் வாசியுங்கள்; ராதாக்ருஷ்ணபாய் இந்நிகழ்ச்சிக்கு பிரசாதமாக சுக்குவெல்ல உருண்டை செய்துவிடுவார். -

"வாருங்கள், பாபாவிடம் போகலாம்; சுபகரமான காரியங்களில் சீக்கிரமாக செயல்படுவது சுலபமாக வெற்றியைத் தரும். -

காகா பூஜையச் செய்து கொண்டிருந்தபோது பாபாவே முதற்கேள்வியாக கேட்டார், "ஆக, வாடாவில் என்ன நடந்தது?" ஆனால் அந்நேரத்தில், சம்பத்தப்பட்ட கேள்வியை எழுப்ப வேண்டுமென்று காகாவுக்குத் தோன்றவில்லை.

உடனே பாபா கேள்வியின் உருவத்தை மாற்றி, "புவா, நீர் என்ன சொல்கிறீர்?" என்று பீஷ்மாவக் கேட்டார்.

காகாவுக்கு உடனே விஷயம் ஞாபகத்திற்கு வந்து, அவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள் என்பதை எடுத்துச் சொன்னார். பாபா அவர்களுடைய யோசனைக்கு அனுமதி தந்தார்; உற்சவம் நிச்சயமாகி விட்டது.

அடுத்த நாள் காலையில், பாபா லென்டிக்கு கிளம்பிய பிறகு, காலத் சேபதிற்கு வேண்டிய சம்பிரதாயமான ஏற்பாடுகளுக்கு இடையே சபாமண்டபத்தில் ஒரு தொட்டிலும் கட்டப் பட்டது.

உரிய நேரத்தில் காலத் சேபத்தை கேட்பதற்கு மக்கள் கூடினர். பாபா லென்டியிலிருந்து திரும்பிவந்ததும் பீஷ்மா காலத் சேபம் செய்வதற்கு எழுந்தார். காகா மகாஜனி ஆர்மோனிய பெட்டியின் அருகில் அமர்ந்தார். பாபா திடீரென்று காகாவை அழைத்துவரச் சொன்னார்.

'பாபா உங்களைக் கூப்பிடுகிறார்' என்று செய்தி வந்தது. காகா இதைக் கேட்டு பயந்து போனார். ஏன் தம்முடைய மனத்தில் விபரீதமான எண்ணங்கள் தோன்றுகின்றன என்று அவருக்கு புரியவில்லை; எனினும் காலட் சேபதிற்கு குந்தகம் ஏதும் நேராது என்று நம்பிக்கை கொண்டார்.

பாபாவினுடைய அழைப்பை பற்றிக் கேட்டபோது பயத்தால் காகாவின் தொடைகள் நடுங்கின. 'பாபா ஏன் இவ்வாறு மனக் கொந்தளிப்பு அடைய வேண்டும்?

Thursday 6 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இவ்விரண்டு கொடிகளில் ஒன்று நிமோன் கருடையது; மற்றொன்று தாமு அண்ணாவினுடையது. இரண்டும் கோலாகலமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மசூதியின் உச்சியில் கட்டப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கும்.

ஷிர்டிக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் யோசனை உருஸ் திரு விழாவிலிருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள்.

1911  ஆம் ஆண்டில் முதன் முதலாக ஸ்ரீ ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழா விலிருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது.

இந்த யோசனை முதன் முதலில், பிரபலமான கீர்தங்கர் கிருஷ்ண ஜாகேச்வர் பீஷ்ம என்பவரால் கருத்துருவாக்கப் பட்டது. எல்லாருடைய நலனுக்காவவும் ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவம் கொண்டாடப் பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதுவரை உருஸ் திருவிழா மட்டுமே ஸ்ரீ ராம ஜன்ம தினத்தன்று வருடா வருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் அவ்வருடம் (1911 ) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதிலிருந்தே எழுந்தது.

பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனதுடன் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார். காகா மகாஜனி அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்கு போகத் தயார் செய்து கொண்டிருதார்.

சாயி தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா ஷீரடிக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து விடுவார்.

இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவை கேட்டார். "என்னுடைய மனதில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக் காட்ட உதவி செய்வீரா?

"உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப் படுகிறது. அந்த நாள் ஸ்ரீ ராம் ஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப் படாமலேயே ஸ்ரீ ராம் ஜன்மோர்சவதையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது".

காகா இந்த யோசனையை விரும்பினார். "பாபாவினுடைய அனுமதியை பெற வேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில்தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காது".


Thursday 30 August 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இப்பொழுது, நாம் ஏற்கெனவே ஆரம்பித்த, மச்சொதி ஜீரணோத்தாரணம் பற்றியும் ஸ்ரீ ராம ஜனன கதா கீர்த்தனம் பற்றியுமான காதையைத் தொடர்வோம்.

கோபால் குண்டட் என்ற பெயர் கொண்ட பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இடை விடாது பாபாவின் நாமத்தை ஜபம் செய்து வந்த பரம பக்தர்.

அவருக்குப் புத்திரப் பாக்கியம் இல்லாதிருந்தது. சாயியி னுடைய ஆசிர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திர ரத்தினம் பிறந்தான். அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

ஷீரடியில் கிராம மக்கள் அனைவரும் உல்லாசப்படும் வகையில் ஒவ்வொரு வருஷமும் ஒரு திருவிழா அல்லது உருஸ் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

தாத்யா கோதே, தாதா கோதே, மாதவராவ் தேச்பாண்டே போன்ற கிராம முக்கியஸ்தர்களும் இந்த யோசனையை மிகவும் விரும்பி அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

இம்மாதிரி திருவிழாக்கள் கொண்டாடுவது என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; ஜில்லா கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டிய நிர்பந்தமும் இருந்தது.

கலெக்டருடைய அனுமதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கிராமத்தின் கணக்கர் காழ்ப்புணர்வோடு விஷமத்தனமாக அதை எதிர்த்தார்; தடங்கல்களை ஏற்படுத்தினார்.

கிராமத்துக் கணக்கர் எழுப்பிய ஆட்சேபனைகளால், ஷீரடியில் திருவிழா கொண்டாடப் படக்கூடாது என்று கலெக்டர் ஆணையிட்டு விட்டார்.

ஆனால், பாபாவே ஷீரடியில் உருஸ் திருவிழா நடத்தும் யோசனையை விரும்பி, அவருடைய சம்மதத்தையும் ஆசிர்வாதத்தையும் அளித்திருந்தார்.

ஆகவே, கிராம மக்கள் மனவுறுதியுடன் இவ்விஷயமாக தொடர் முயற்சி எடுத்தனர்; படாதபாடு பட்டனர். அவர்கள் எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில், முன்னர்ப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதிகாரிகளால் ரத்து செய்யப் பட்டது;

அதிலிருந்து, பாபாவினுடைய சம்மதத்துடன் இந்த வருடாந்திர உருஸ் திருவிழாவை ஸ்ரீ ராமநவமியன்று கொண்டாடுவது என்று முடிவு செய்யப் பட்டது. தாத்யா கோதே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இத் திருவிழாவிற்குத் தற்காலத்திலும் மக்கள் திரள்திரளாக வருகிறார்கள்.

ஸ்ரீ ராம நவமியன்று மேளதாளத்தோடு வாத்தியங்களும் முழங்க, பூஜையும் பஜனையும் செய்யப் படுகின்றன. உற்சவத்தில் கலந்து கொள்ள மக்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்து ஷீரடியில் குவிகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய கொடிகள் மரியாதையாகச் சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லாபட்டு, நிரந்தரமாக பறந்துகொண்டிருக்குமாறு மசூதியின் உச்சியில் கட்டப்படும். 



Wednesday 22 August 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

வேதங்களையும் உப நிஷதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் படித்தால், 'நித்தியமெது?', 'அநித்தியமெது'?  என்னும் பாகுபாட்டு ஞானம் கிடைக்கும். 'குருவினுடைய திருவாய் மொழியே வேதாந்தம்' என்னும் அனுபவமும் கிடைக்கும்; பரமானந்தம்   கிடைக்கும்.

தம் பக்தர்களின் இல்லங்களில் உணவுக்கும் உடைக்கும் எந்த விதமான பற்றாக்குறையும் இருக்காது என்று சாயி உறுதி மொழி கொடுத்திருப்பது சாயி பக்தர்களுக்கு எப்பொழுதுமே தெரிந்த விஷயந்தான்.

"வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுக்கு யோக ஷேமத்தை அளிப்பதை என்னுடைய சத்தியப் பிரமாணமாகக் கருதுகிறேன்".

ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சாயி திருவாய் மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா.

இறைவனின் அரச சபையில் கௌரவம் தேடுங்கள். அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள். அவருடைய பிரசாதத்திற்காவே  முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர்.

பாராட்டுப் பவர்களுடைய தலையசைப்பை நாடி உன்னுடைய கவனம் ஏன் திரும்ப வேண்டும்? உன் இஷ்ட தெய்வமன்றோ காருண்யத்தினால் உருகி வியர்வையைத் 'தபதப' வென்று பெருக்க வேண்டும்;

அந்த லட்சியத்திற்கு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பாடுபடு! புலன்கள் அனைத்தும் பக்திப் பெருக்கால் மூழ்கடிக்கப் பட்டு, புலனின்ப நாட்டங்கள் எல்லாம் பக்தியுடன் கூடிய வழிபாடாக மாற்றம் எய்தட்டும்! ஓ, அந்நிலை எவ்வளவு அற்புதமானது!

இம்மாதிரியான வழிபாடு இதற் வழிகளில் ஆசை வைக்காது என்றென்றும் நிலைக்கட்டும். மனம் மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, என்னுடைய நாமஸ்மரணத்திலேயே நிலைத்து நிற்கட்டும்.

மனம் அந்நிலையில் உடலிலிருந்தும் குடும்பத் தொல்லைகளிலிருந்தும் பணத்தாசையிலிருந்தும் விடுதலை பெற்று ஆனந்தமயமாக இருக்கும். சம தரிசனத்தையும்  பிரசாந்தத்தையும்  (பேரமைதியையும்) அடைந்து, கடைசியாக பரிபூரணத்தையும் அடையும்.

சாந்தி நிறைந்த மனம் ஞானிகளின் சத் சங்கத்தில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு சதா அலையும் ஓய்வில்லாத மனத்தை இறைவனுடன் ஒன்றியாதாக எப்படிக் கொள்ள முடியும்?

ஆகவே, கதை கேட்பவர்களே! இப்பிரவசனத்தை பக்தியுடன் கேட்கும்போது முழு கவனத்தையும் கேள்வியின் மேல் வையுங்கள். சாயியின் இச் சரித்திரத்தை கேட்டு உங்களுடைய மனம் பக்தி நிரம்பியதாக ஆகட்டும்.

காதை முன்னேறும்போது திருப்தியை கொண்டுவரும்; சஞ்சலமான மனம் விச்ராந்தியடையும்; எல்லாக் கொந்தளிப்புகளும் அடங்கும்; சாந்தியும் சந்தோஷமும் ஆட்சி செய்யும். 


Thursday 16 August 2012

ஷிர்டி சாயி பாபா சத் சரிதம்

மனமென்னும் செழிப்பும் வீரியமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப் பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது. ஞானம் மலர்கிறது. பரவசநிலை பீறிட்டு கைவல்லியம் (வீடுபேறு - மோட்சம்) கை கூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக விலகி விடுகின்றன.

மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய சித்திகள் நிறைந்தது. அதுவே, சத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி, பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம் செய்கிறது.

பிரம்மம் சச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய குணங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

களிமண் ஓர் உருவகமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதை விட்டு அகன்று விடுகின்றன.

இவ்வுலகமே மாயையிலிருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரணகாரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக் கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது.

இவ்வுலகம் தோன்றுவதற்கு முன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால் அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட நிலை, உருவெடுக்காத நிலை.

உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்மா ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிலிருந்து பிரிக்க முடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.

மாயை, தமோ குணத்திலிருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷிடி காரியம்.

பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்' குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச் சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.

மாயையின் சத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுர்வி, சிருஷ்டி  என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.

இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக் கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றா நிலையிலேயே இருந்து விடுகின்றன. சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.

முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றா நிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றா நிலையிலேயே இருக்க முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. "பார்ப்பதனைத்தும் பிரம்மமே" என்னும் சொற்றோடர்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயில வேண்டும்.



Thursday 9 August 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

'நானே அது' என்னும் பாவம் எழுப்பப்பட்டு ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான் - நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற் பொருளோடு ஐக்கியமாகிவிடுவதை கொண்டாடுகிறது.

எந்தப் போதியையும் புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் சத்குருவின் ஞாபகமே வருகிறது. ஆகவே, சாயிதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ மத்பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உதாவ கீதையை பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நகத்திலிருந்து சிகை வரை சாயி யாகவே காட்சியளிக்கிறார்.

ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப் பேச்சிலேயே திடீரென்று சாயியினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

எழுத வேண்டுமென்ற சங்கல்பத்துடன் ஒரு நாள் காகிதத்தை எடுக்கிறேன். ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், சாயியே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன். எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலை தூக்குகிறதோ அப்பொழுது எல்லாம் அவருடைய கையால் அதை எழும்ப முடியாமல் அழுத்தி விடுகிறார். அத்தோடு மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின் மீது பாய்ச்சி, அவனை ஆருலாளன் ஆக ஆக்கி விடுகிறார்.

மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் சாயி பாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், ஆறாம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைந்துவிடுகின்றன.
கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றாலும், கடைசியில் போய்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் ப்ராப்தியே (இறைவனை அடைவதே)

பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டை கடந்து செல்வது போலக் கடினமானது. ஒருவரே, நடக்க கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.

இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களை தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார். 


Thursday 2 August 2012

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராம நவமி உற்சவம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ உலகியல் சுபிஷதிற்காகவோ எதற்காகவோ இருப்பினும் சரி, எங்கு சத்குரு படகோட்டி யாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கறை சேர்க்கிறார்.

சத்குரு என்ற வார்த்தை உள்ளதைக் கிள்ளும்போதே சாய் மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே என்முன் தோன்றித் தம்முடைய வரம் நல்கும் கரத்தை என் இதயத்தின் மீது வைக்கிறார்.

அவருடைய வரம் தரும் கரம், துனியிலிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.

குருவினுடைய ஹஸ்த ஸ்பரிசம் (கையால் தொடுதல்) பிரளயகாலத்து அக்கிநியாலும் அழிக்க முடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புத சக்தி வாய்ந்தது. கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது.

கடவுளைப் பற்றியோ புராணங்களைப் பற்றியோ தப்பித் தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருவபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாச்திகர்களுக்குங்கூட, அது (குருவினுடைய கரம் தீண்டல்) சாந்தியை அளிக்கும்.

தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பல ஜென்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. சாயியின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மை அடைகின்றனர்.

அவருடைய சுந்தரமான உருவத்தின் மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபாவம்  எழுகிறது. 


Thursday 26 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தோதி போதி, கண்ட யோகம் போன்ற பாபாவின் யோக சாதனைகள், மற்றும் அவர் எப்படி பக்தர்களின் கர்ம வினைகளால் ஏற்பட்ட உபாதைகளைத் தம்முடைய உடலில் ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியெல்லாம் முறைப்படி, எதுவும் விட்டுப் போகாமல் பிறகு சொல்லப்படும்.

ஹேமாட் பணிவுடன் சாயியை சரணடைகிறேன். இந்தப் பிரவசனம் அவருடைய பிரசாதமேயாகும். இப்புண்ணியமான காதையைக் கேட்பதாலேயே எல்லாப் பாவங்களும் அழிக்கப்படும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரிசமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும்' என்னும் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு  அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சாயி என்னும்  சொல்லுக்கு (சுலோகம் 25 ), சமகால அவதார புருஷரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர், கர்தாபஜா பிரிவினரைப் பற்றப் பேசியபோது அளித்த விளக்கம் கீழ்கண்டவாறு:
     "பிர்வர்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களை கடைபிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீ சைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல், அவருடன் எப்போதும் பேசுகின்றனர். நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை கர்த்தபஜாக்கள் சாயி என்கின்றனர். சாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை."


Thursday 19 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதை விடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வதை விடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் சமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.

இக் காதையின் முக்கியமான பாடம் இதுவே. ஆயினும், தம்முடைய அஹங்காரத்தை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக் கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின் படி செயல் பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப் பிடிப்பவரும் அபூர்வமானவரே!

இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமார்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய வேண்டுமென்று விரும்புபவர். அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.

பூத உடலிலிருக்கும் அபிமானத்தை எரித்துவிட்டவரே, எடுத்த ஜென்மத்தின் நிறைவைக் காண முடியும். பிறகு, அவர் முக்திபெருவதற்காக யாரிடமாவது சிஷ்யராக இருப்பதை ஏற்பார்.

(பாபாவின்) இளமையும் கவர்ச்சியும் நிறைந்த உருவத்தில், பற்றற்ற மனமும் இருந்ததைப் பார்த்த பெரியோர்களும் சிறியோர்க்களுமாகிய அணைத்து மக்களும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஞானிகளின் தேக சம்பந்தமான நிகழ்சிகளும் அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படியேதான் நடக்கின்றன. இருப்பினும், வினையின் பாரத்தை அவர்கள் சுமப்பதில்லை. காரணம், "செயல்புரிபவன் நான்" என்ற எண்ணமே அவர்களுக்கு இருப்பதில்லை.

சூரியன் எப்படி இருட்டில் இருக்க முடியாதோ, அப்படியே ஒரு ஞானி துவைத பாவத்தில் இருக்க முடியாது. ஏனெனில், இப் பிரபஞ்சமே அவரிடதில்தான் இருக்கிறது. அவர் அத்வைத பாவத்தில் வாழ்கிறார்.

இந்த குரு சிஷ்ய சரித்திரத்தை, பரம பக்தரான மஹால் சாபதி விவரித்த விதமாகப் பிரவசனம் செய்தாகி விட்டது.

இக் காதை இவ்வாறு நிறைவடையட்டும். அடுத்த காதை இதை விட ஆழமானது. கிரமப் படி சொல்லப்படும்; கேட்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

மசூதியுனுடைய நிலைமை எவ்வாறு இருந்தது? எவ்வளவு முயற்சியால் அது சீர்படுத்தப் பட்டது? சாய் ஹிந்துத்வா முஸ்லீமா என்று உறுதியாக எவருக்குமே தெரியாதது எப்படி ? (என்பது பற்றியெல்லாம் சொல்லப் போகிறேன்)


Thursday 12 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

சாயி பர பிரம்மத்தின் அவதாரம்; பக்கீரோ பிரமையே உருவானவர். ஷீரடியில் தேவி தாசரால் பரீக்ஷை செய்யப்பட்டபோது பிரமைகள் அனைத்தும் தூள் தூளாகிவிட்டன.

தேவிதாஸ் சுந்தரமான உருவமும் ஒளிவீசிய கண்களும் மனோஹரமான முகமும் படைத்தவர். ஷீரடிக்கு முதன்முதலாக அவர் வந்தபோது அவருக்குப் பாத்து அல்லது பதினொன்று வயதுதான் இருக்கும்.

ஒரு லங்கோட்டை மாத்திரம் கட்டிக்கொண்டு, இந்த பாலகன், வந்த புதிதில் மாருதி கோயிலில் தங்கினான்.

ஆப்பா பில்லும் மகால்சாபதியும் அடிக்கடி தேவி தாசரிடம் சென்றனர். காசிராமரும் மற்றவர்களும் இவருக்கு மளிகைச் சாமான்களையும் விறகையும் அளித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக அவருடைய முக்கியத்துவம் வளர்ந்தது.

பாபா கல்யாணக் கோஷ்டியுடன் வருவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, தேவிதாசர் ஷீரடியில் தங்குவதற்கு வந்துவிட்டார்.

தேவிதாசர் ஆப்பா பில்லுக்கு கரும்பலகையில் எழுதக் கற்றுக் கொடுத்தார். வெங்கடேச தோத்திரத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து கோஷ்டியாகப் பாராயணம் செய்ய வைத்தார். இவ்வகுப்புகளை அவர் தவறாது நடத்தினார்.

தேவிதாசர் மகா ஞானி. தாத்யாபா இவரைத் தம் குருவாகக் கொண்டார். காசிநாதரும் மற்றவர்களும் இவருடைய சிஷ்யர்களாகவும் அடியவர்களாகவும் ஆனார்கள்.

தேவிதாசர் முன்னிலையில் பக்கீர் கொண்டுவரப்பட்டார். தேவிதாசரும் பக்கீரும் சாஸ்திர ரீதியாக வாக்குவாதம் செய்தனர். தம்முடைய தவத்தின் சக்தியால் தேவிதாசர் பக்கீரை அடியோடு தோற்கடித்து விட்டார். பக்கீர் ஷிர்டியிலிருந்து விரட்டப்பட்டார்.

ஷிர்டியிலிருந்து தப்பியோடிய பிறகு, பக்கீர் வைஜாபுரிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஷீரடிக்கு வந்து சாய்நாதரை நமஸ்காரம் செய்தார்.

தாம் குருவென்றும் பாபா ஷிஷ்யரென்றும் எண்ணிய பிரமையனைத்தும் நிவர்த்தியாகி, மன்னிப்புக் கோரியதால் பக்கீர் தூய்மைடைந்து விட்டார். பாபாவும் அவரை முன்போலவே ஆதரித்தார்.

பாபவினுடைய வழிமுறைகள் இவ்வாறு ஆராய்ச்சிக்கும் காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை! நேரம் வந்தபோது பிரச்சினை தீர்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவரி பாபா பொறுமையாக குரு சிஷ்ய உறவுக்கு மதிப்புகொடுத்து வாழ்ந்தார்.

குருவென்று பக்கீர் தமக்குத்தாமே நினைத்துக் கொண்டால், அது முழுமையாக அவருடைய பொறுப்பாகிறது. ஆனால், சிஷ்யன் என்கிற முறையில் தமது கடமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை செவ்வனே செய்தார் பாபா. இதுதான் இக்காதையின் பாடமாகும்.



Thursday 5 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஆயினும், ஷிர்டி கிராம மக்கள் பாபாவின் அன்பார்ந்த பக்தர்கள்; அவர் மீது பந்தமும் பாசமும் கொண்டிருந்தனர். பாபாவிடமிருந்து அவ்வாறு பிரிந்திருந்தது அவர்களுக்கு முறையான செய்கையாக தோன்றவில்லை.

ஜவஹர் அலியின் பிடியில் பாபா அவ்வாறு பலமாக மாடிக் கொண்டது பற்றி கிராம மக்கள் மனத்துள் கலக்கமுற்றனர். பாபாவைத் திரும்ப பெறுவது எப்படியென்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

பொன்னும் அதன் காந்தியும் (பள பளப்பும் ), விளக்கும் அதன் ஒளியும் போன்று குருவும் சிஷ்யனும் பிரிக்க முடியாதவர்கள். இருவருமே இந்த ஒருமையை அனுபவிக்கிறார்கள்.

பக்தர்களின் கூட்டம் ஒன்று, எப்பாடுபட்டாவது பாபாவைத் திரும்பவும் ஷீரடிக்கு அழைத்துக் கொண்டு வரும்வரை, ஒருவரை ஒருவர்  பிரிவதில்லை என்னும் திட வைராக்கியத்துடன் ஷிர்டியிலிருந்து ரஹாதா விலிருந்த இத்காவிற்குச் சென்றது.

ஆனால், பாபா இதற்கு  நேரெதிரான நிலைப்பாடு எடுத்தார்.  "இந்தப் பக்கீர் மகா கோபி; அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்யின் , அவர் என்னை எப்பொழுதுமே விடுவிக்க மாட்டார். -

"நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள். அவர் கிராமத்திலிருந்து திரும்பிவரும் தருணம் வந்து விட்டது. கடுங்கோபியான அவர் உங்களைத் தீர்த்துக் கட்டி விடுவார்.

"பயங்கரமான கோபம் அவருடைய முகத்தைச் சிவக்க வைத்து விடும். போங்கள், போங்கள், உடனே இடத்தை காலி செய்து விட்டு ஷிர்டி போகும் பாதையில் நடையைக் கட்டுங்கள்".

"அடுத்ததாக என்ன செய்வது? நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேரெதிராக பாபா பேசுகிறாரே!" என்று அவர்கள் சிந்தித்தனர். இதன் நடுவே, பக்கீர் எதிர்பாரதவிதமாக த்ரயும்பி வந்து, அவர்களை வினவ ஆரம்பித்தார்.

"ஆக, நீங்கள் இந்த இளைஞனுக்காக வந்திருக்கிறீர்கள் அல்லீரோ? கோஷ்டியாக என்ன பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இளைஞனை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதை மறந்து விடுங்கள்; அது நடக்காத காரியம்".

ஆரம்பத்தில் இவ்விதமாக அவர் வெட்டொன்று துண்டிரண்டாக சொல்லி விட்டாலும், கடைசியில் அவரே கிராம மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இவ்வாறு சொன்னார், "உங்களுடன் என்னைச் ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லோரும் நம்முடன் இந்த பையனையும் அழைத்துக் கொண்டு போவோம்."

இவ்விதமாக பக்கீரும் கோஷ்டியுடன் திரும்பி ஷீரடிக்கு வந்தார். அவருக்கு பாபாவிடமிருந்து பிரிய மனமில்லை; பாபாவுக்கும் அவரை அனுப்பிவிட மனமில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்று யாருக்குமே புரியவில்லை!


Thursday 28 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

பக்கீர் அதிகம் படித்தவர்; குர் ஆனை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருந்தார். சுயநலவாதிகளும் இறையுணர்வாளர்களும்  விசுவாசிக்களுமாகப் பலர் அவரைப் பின்பற்றினர்.

பக்கீர் ஓர் இத்காவைக் (முஸ்லீம்கள் தொழுகை செய்யும் சுவர்) கட்ட ஆரம்பித்தார். சில நாள்கள் கழித்தபின், அவர் வீரபத்திர சாமி கோவிலை இழிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இத்கா கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது; பக்கீர் கிராமத்திலிருந்து (ரஹாதா) விரட்டியடிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஷீரடிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.

பக்கீர் திறமை வாய்ந்த இனிமையான பேச்சாளி. கிராமமே அவரைக் கொண்டாடியது. அவர் பாபாவை மயக்கித் தம் வசப் படுத்திவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

"நீ எனக்கு சிஷ்யனாக இருக்கலாம்" என்று அவர் பாபாவிடம் கூறினார். சுபாவத்தில் விளையாட்டுப் பிரியராக இருந்த பாபா, அதற்கு ஒத்துக் கொண்டார். பக்கீர் மிகுந்த சந்தோஷத்துடன், பாபாவை ஷிர்டியிலிருந்து வெளியே அழைத்து கொண்டு போய் விட்டார்.

பிரசித்தி பெற்ற பாபாவை ஷிஷ்யனாக்கி, ஜவஹர் அலி குருவாகிவிட்டார். இருவரும் ரஹாதாவிற்குச் சென்று வாழ்வதென  முடிவு செய்தனர்.

குருவிற்கு ஷிஷ்யருடைய கலைகள் தெரியாது; சிஷ்யருக்கோ குருவினுடைய குறைபாடுகள் தெரிந்திருந்தன. ஆனால், ஒருபொழுதும் சிஷ்யர் குருவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. சிஷ்யனுடைய கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்தார்.

குருவினிடமிருந்து  எந்த ஆனை வந்தாம் சரி, யோக்கியமானதா (தகுதியுடையதா) அயோக்கியமானதா என்று பாராமல், அது உடனே நிறைவேற்றப் பட்டது. குருவின் வீட்டிற்குத் தண்ணீரும் சுமந்தார் சாயி.

இவ்வாறு குருவின் சேவையில் நாள்கள் ஓடின. ஆனால், ஷீரடிக்கு வருவதென்பது எப்போதோ ஒருநாள்தான் முடிந்தது. இம்மாதிரியான நிலை ஏற்பட்டபோது, இதனால் என்ன விளைந்த தென்பதைக்  கேளுங்கள்.

இந்நிலை தொடர்ந்து, பாபா பிரதானமாக ரஹாதாவிலேயே எப்பொழுதும் இருந்தார். மக்கள், பாபாவைப் பக்கீர் மந்திர சக்தியால் கட்டி விட்டார் என்றும் ஷீரடிக்கு இனி அவர் வரப் போவதே இல்லை என்றும் உணர ஆரம்பித்தனர்.

ஜவஹர் அலி யோகபலத்தால், பாபாவைத் தம்முடனேயே இருக்குமாறு கட்டி விட்டார் என்று மக்கள் நினைக்க, பாபாவின் திட்டம் முற்றும் மாறுபட்டதாக இருந்தது. தம்முடைய அஹங்காரத்தை நாசம் செய்ய இதை ஓர் உபயாமாகக் கொண்டார்.

சாயிக்கு ஏது கர்வமும் அஹந்தையும்? கதை கேட்பவர்கள் இவ்வாறு சிந்திப்பது இயற்கையே. ஆனால், அம்மாதிரியான நடத்தை மக்களுக்கு நல்லது செய்யும்; அது அவருடைய அவதாரத்தின் லட்சியம் அன்றோ!


Thursday 21 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தினமும் நடக்கும் வழக்கப்படி, பாபா எண்ணெய் கேட்டுக்கொண்டு வந்தபோது அனைவரும் எண்ணெய் இல்லையென்று சொல்லிவிட்டனர். என்ன அற்புதம் விளைந்தது!

ஒரு வார்த்தையும் பேசாமல பாபா திரும்பி விட்டார். பழைய திரிகளைச் சீர் செய்து அகல் விளக்குகளில் பொருத்தினார். எண்ணெய் இல்லாமல் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கடைக்காரர்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாபா தகர டப்பாவை மசூதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து எடுத்தார். அதில் ஓரிரு துளிகள் எண்ணெய் இருந்தது; ஒரு மாலை விளக்கு ஏற்றுவதற்குக் கூடப் போதாது.

அந்த எண்ணையில் தண்ணீரை ஊற்றி, இறைவனுக்கு அர்பணிப்பது போலக் குடித்து விட்டார். பிறகு, அவர் வெறும் தண்ணீரை எடுத்துக் கொண்டார்.

தண்ணீரை அகல் விளக்குகளில் ஊற்றித் திரிகளை நனைத்தார். விளக்குகளை ஏற்றி, அவை பிரகாசமாக எரிவதைக் காண்பித்தார்.

சுவாலையுடன் தண்ணீர் எரிவதைப் பார்த்த கடைகாரர்கள் வியப்பிலாழ்ந்தனர். பாபாவிடம் பொய் சொன்னது தவறு என்று தங்களுக்குள்ளேயே pesik கொண்டனர்.

அணுவளவும் எண்ணெய் இல்லாது விளக்குகள் இரவு முழுவதும் எரிந்தன. எல்லா ஜனங்களும், கடைக்கார்களும் பப்வின் அருளைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்று சொன்னார்கள்.

"ஓ, பாபா எவ்வளவு அற்புதமான சக்தி பெற்றவர்!" என்பர் கடைகாரர்கள் ஆச்சரியப்பட்டனர்; பொய் சொல்லிப் பாவம் சேர்த்தது மட்டுமல்லாமல் பாபாவை அனாவசியமாக கோபப்படும்படி  செய்துவிட்டதையும் உணர்ந்தனர்.

இது இப்படி இருப்பினும், சினத்துக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்ட பாபா இதைப் பற்றச் சிந்திக்கவில்லை. அவருக்கு நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை எல்லா ஜீவராசிகளும் ஒன்றே.

(ஆசிரியர் மறுபடியும் காலத்தால் பின் நோக்கிப் போகிறார்)

மறுபடியும் அந்தக் காதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, மொஹித்தீன் தாம்போலி பாபாவை மல்யுத்தத்தில் வென்ற நிகழ்ச்சியிலிருந்து தொடரும் அக் காதையைக் கவனமாகக் கேளுங்கள்.

மல்யுத்த நிகழ்ச்சி நடந்த ஐந்தாவது வருஷம், அஹமத் நகரவாசியும் ஜவஹர் அலி என்னும் பெயர் கொண்டவருமான பக்கிரி ஒருவர் தம் சிஷ்யர்களுடன் ரஹாதாவிற்கு வந்தார்.

வீரபத்திரர் கோயிலுக்கு எதிரிலிருந்த மைதானத்தில் கொட்டாரம் போட்டுத் தங்கினர். இந்தப் பக்கீர் பெரும் அதிர்ஷ்டசாலி.

அதிர்ஷ்டசாலியாக இல்லாமல் இருந்தால், அவருக்கு எப்படி சாயியைப் போன்ற புகழ்ப் பெற்ற, மகிழ்ச்சியளிக்கும் சிஷ்யர் கிடைத்திருப்பார்?

கிராமத்தில் அநேக
மக்கள் இருந்தனர்; அவர்களில் பலர் மராட்டியர். மராட்டியர்களில் பகூ ஸ்தாபல் என்ற ஒருவர் பக்கீருக்குச் சேவகராக ஆகிவிட்டார். 


Thursday 14 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இது, அஹங்காரத்தையும் வாசனைகளையும் மனவக்கிரங்களையும் உலகியல் வாழ்வில் ஏற்படக்கூடிய ஆசாபாசங்களையும் யுக்திகளையும் குயுக்திகளையும் அனைத்தையும் அவர் துனியில் ஆஹுதியாக இடுவது போலத் தோன்றியது.

கொழுந்துவிட்டெரியும் துனியில் கர்வம் பிடித்த ஞானத்தைக் கட்டைகளாகப் போட்டு, 'அல்லாமாலிக்' என்று சதா ஜபம் சொல்லி, அல்லாவின் கொடியை ஏற்றினார்.

மச்சொதி விசாலமான இடமா என்ன? இரண்டு தூலங்களுக்கு இடையே இருட்ன்ஹா சிறய இடந்தானே! இங்கேதான் அவர் உட்கார்ந்தார்; வளையவந்தார். எல்லாரையும் சந்தித்தார். உறங்கினார்; வசித்தார்.

தரை விரிப்புகள், திண்டுகள், எல்லாம் பக்தர்கள் பெருகப் பெருக இப்போது வந்து விட்டன. ஆனால், ஆரம்ப காலத்தில் பக்தர்கள் யாரும் பயமின்றி அவரை அணுக முடியவில்லை.

1912  ஆம் ஆண்டிலிருந்து எல்லா மாற்றங்களும் ஏற்பட்டன. அந்த வருடத்திலிருந்துதான் மசூதியின் உருவமே மாற ஆரம்பித்தது.

முட்டிக்கால் ஆழத்திற்குப் பள்ளம் பள்ளமாக இருந்த மசூதியின் தரை, பக்தர்களின் அன்பார்ந்த சேவையால் ஒரே இரவில் சரளைக் கற்கள் நிரவப்பட்டுத் தளமிடப்பட்டது.

மசூதியில் வசிக்க வருவதற்கு முன்னால், பாபா பக்கீர்கள் தாங்கும் இடமான தகியாவில் தங்கினார். அங்கு பல காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்.

இந்தத் தகியாவில் வசித்தபோதுதான் பாபா கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு கஞ்சிராவின் தாளத்திற்கேற்றவாறு நளினமாக நடனம் ஆடினார். இனிமையான குரலில் பாடினார்.

ஆரம்ப காலத்தில் சமர்த்த சாயி விளக்குகள் பல ஏற்றுவதில் மிக ஆவல் கொண்டிருந்தார். இதற்காகத் தாமே போய்க் கடைக்காரர்களிடம்  எண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தார்.

தகர டப்பாவைக் கையிலெடுத்துக் கொண்டு போய், மளிகைக் கடைகாரர்களைத் தாமே பிச்சை கேட்டு வாங்கிவந்து, அகல் விளக்குகளை நிரப்புவார்.

பிறகு, அவர் கோயிலிலும் மசூதியிலும் பிரகாசமாக விளக்குகளை ஏற்றுவார். இது சில நாள்களுக்கு தொடர்ந்து நடந்துவந்தது.

விளக்குகளைத் தொழுவத்தில் அவருக்கு ஆர்வம் அதிகம். விளக்குகளின் திருநாளான தீபாவளியைக் கொண்டாடுவார். துணியைத் துண்டுகளாகக் கிழித்து, முருக்கித் திரிகளாக்கி, மசூதியில் விளக்குகள் எரிப்பார்.

எண்ணையையப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் இலவசமாகத்தான் கொண்டுவந்தார். கடைகாரர்களின் மனதுள் கபடம் புகுந்து, 'போதும் இந்தச் சனியன் பிடித்த தொல்லை' என்று நினைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து பாபாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.



Thursday 7 June 2012

ஷிர்டி சாயி பாபா சத் சரிதம்

பாபசாஹெப் அவரை சாயி தரிசனத்திற்கு அனுப்பிவைத்தார். சாயியினுடைய ஆசிர்வாதத்தால் நானா சாஹேபுக்கு ஒரு மகன் பிறந்தான்.

இதன் பிறகு, சாயியுனுடைய புகழ் வளர்ந்து, சாயி தரிசனத்திற்காக ஜனசமுதாயம் கூட்டங்கூட்டமாக ஷிர்டியை முற்றுகையிட்டது. இச் செய்தி ஜில்லாவின் தலைநகரமான அஹமத் நகரை  எட்டியது.

நானா சாஹேப் (நிம்காங்க்வ் வாசி) அஹமத் நகரத்திலிருந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வட்டத்தில் நல்ல செல்வகுக் கொண்டவர். அதிகாரிகளுடன் நன்கு பழகினார். அதிகாரிகளில் ஒருவருக்கு சிதம்பர கேசவ் என்று பெயர். ஜில்லா கலெக்டரின் காரியதரிசியாக வேலை பார்த்தவர்.

நானா சாஹேப் டான்கேலே, அவரை ஷிர்டிக்குக் கட்டாயமாக மனைவியுடனும் மக்களுடனும் நண்பர்களுடனும் சாய் தரிசனம் செய்ய வரச் சொல்லி ஒரு கடிதம் எழுதினார். இவ் விஜயம்  பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியிருந்தார்.

இவ்விதமாக பாபாவின் புகழ் பரவபரவ, ஒவ்வொருவராக ஷீரடிக்கு வர ஆரம்பித்தனர். பக்தர்களுடைய கூட்டம் பெருகியது.

பாபாவுக்கு எவருடைய சந்காதமும் தேவைப்படவில்லை எனினும், பகல் நேரத்தில் பக்த பரிவாரம் அவரைச் சூழ்ந்து கொள்ளும், சூரிய அச்த்மனதைற்குப் பிறகு, அவர் (ஷிர்டியிலிருந்த) பாழடைந்த மசூதியில் தூங்குவார்.

சில்லிமும் புகையிலையும் ஒரு தகர டப்பாவும் எப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தன. தழையத் தழைய  நீண்ட கப்னி ஒன்றை அணிந்து கொண்டு தலையை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு எப்பொழுதும் சட்காவைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.

சுத்தமான வெள்ளைத் துநியோன்றைத் தலைமேல் போர்த்து, இடக்காதிற்குப் பின்னால் ஜடாமுடியைப் போன்று இறுக்கமாக முறுக்கி, அழகான தலைப்பாகை போல் பாபா கட்டிக்கொண்டார்.

இம்மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு சில சமயங்களில் சேர்ந்தாற்போல் எட்டு நாள்களும் குளிக்காமல் இருப்பார். வெறும் பாதங்களுடந்தான் நடந்தார். ஒரு கோணிப் பையையே ஆசனமாகக் கொண்டார்.

இவ்வாறு, ஒரு கந்தல் கோணித் துணியே அவருடைய நிரந்தரமான ஆசனமாக அமைந்தது. மெத்தையின் சுகமென்பது என்னவென்றே அவருக்கு தெரியாது. மொத்தத்தில், எது கிடைத்ததோ அதில் திருப்தி அடைந்தார்.

நலிந்து போன பழைய சாக்குத் துணியே அவருடைய பிரியமான ஆசனம். சதா சர்வகாலமும் அது அவ்விடத்திலேயே இருந்தது.

ஆசனம், விருப்பு, எல்லாம் அதுவே. பாபா கோவணம் மட்டும் தரித்தார். வஸ்திரமோ போர்வையோ வேறு எதுவுமே இல்லை. குளிரை விரட்ட துனி (நெருப்பு) இருந்தது.

இடக்கையைக் கிராதியின்மீது வைத்துக் கொண்டு தெற்குப் பார்த்தவாறு இக் கோணிப் பை ஆசனத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, தம்மெதிரில் இருந்த துனியையே பாபா உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்.


Thursday 31 May 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

ஒரு கோணிப் பையை ஆசனமாக ஏற்று, மற்றொரு கோணிப் பையை படுக்கை விரிப்பாக்கிக் கொண்டார். தாம் அணிந்து கொண்ட கந்தைத் துணிகளிலும் த்ரிருப்தி கண்டார்.

வறுமையே மகோன்னதமான சாம்ராஜ்யம்; பணகாரனுடைய ஆடம்பரத்தை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. 'அல்லா ஏழைகளையே நேசிக்கிறார்' என்று பாபா அடிக்கடி சொல்லுவார்.

கங்காகீருக்கும் வாழ்கையில் இந்நிலை ஒரு சமயத்தில் வந்தது. மல்யுத்தப் பிரியரான அவர், ஒரு முறை மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே திடீரென்று சலிப்படைந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தார்.

பிராப்தம் வந்த காலத்து, ஒரு சித்தருடைய வார்த்தைகள் அவருடைய காதுகளை அசரீரியாக வந்தடைந்தன. "இப்பூதவுடல் கடவுளிடம் விளையாடுவதில் கரைவதே சிலாக்கியம். "

அவர் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே, இவ்வநுக்கிரஹ ரூபமான வார்த்தைகள் அவருடைய காதுகளில் விழுந்தன. உலகியல் வாழ்க்கையைத் துறந்து இறைவனை தேடும் பாதையில் இறங்கி விட்டார்.

அவருடைய மேடம் புந்தாம்பே வுக்கு அருகில், கோதாவரி நதி இரண்டாகப் பிரிந்து மறுபடியும் கூடுவதால் ஏற்படும் தீவில் இருக்கிறது. சேவை செய்யும் ஆர்வமுள்ள சிஷ்யர்களும் அநேகர் அங்கு இருக்கின்றனர்.

நாள்கள் ஆக, ஆக , சாயி நாதர், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லி வந்தார். தாமாக யாரிடமும் பேசுவதில்லை.

பகல் நேரத்தில் வேப்பமரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். சில சமயங்களில் கிராம எல்லையான ஓடையின் கரையில் இருந்த ஒரு கருவேல மரத்தின் குறுக்கு வாட்டமாக வளந்த கிளையில் கீழ் அமர்ந்திருப்பார்.

சில நாள்களில் அவர் விருப்பபட்டபோது மதியத்திற்குப் பிறகு, கால்போனவாக்கில் நடந்து ஒரு மைல் தூரத்திலிருந்து நிம்காங்க்வ் கிராமதினருகில் செல்வார்.

புகழ்பெற்ற  த்ரியம்பக டங்களே நிம்காங்க்வினுடைய ஜாகீர்தாராக இருந்தவர். பாபா சாஹேப், அவருடைய வம்சத்தில் பிறந்தவர். பாபா இந்த பாபா சஹேப்பை மிகவும் நேசித்தார்.

நிம் காங்கிற்கு சிறு நடையாகப் போனபோதெல்லாம், பாபா அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடன் அந்நாள் முழுவதும் மிகுந்த பிரேமையுடன் பேசிக் கொண்டிருப்பார்.

பாபா சாஹேப்பிற்கு, நானா சாஹேப் என்னும் பெயர் கொண்ட தம்பியொருவர் இருந்தார். புத்திரப் பாக்கியம் இல்லாததால் நானா எப்பொழுதும் மன வருத்தத்துடன் இருந்தார்.

முதல் மனைவிக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படும் வாய்ப்பேதும் இல்லது போனதால், நானா இரண்டாவது மனைவியை மணந்து கொண்டார். ஆனால், எவராலும் குணானு பந்தத்திலிருந்து (முன் ஜன்ம வினைகளும் தளைகளும்) தப்பிக்க முடியாது. தெய்வத்தின் வழிகள் மர்மமானவை!


Thursday 24 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

1912 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், புண்ணிய காலமான வளர்பிறையில், மிகுந்த அன்புடன் பூஜையோடும் பஜனையோடும் வேப்பரமரத்தின் கீழ் 
பாதுகைகளை ஸ்தாபனம் செய்தார்.

ஒரு சுப ஹர்த்த நாளில், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளோடு உபாசனி  சாஸ்திரி என்ற பக்தர் நடத்தி வைத்தவாறு, தாத்தா கேல்கர் தமது கரங்களால் 
பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

பாதுகைகளின் தினசரி பூஜை, தீட்சிதர் என்றழைக்கப்பட்ட பிராமணரிடம்  
ஒப்படைக்கப்பட்டது. பொதுப் பணிகளை சகுண   மேரு நாயக் பார்த்துக்
 கொண்டார். பாதுகைகளுடைய  ஆக்கியானம் (காதை ) இதுவே.

இவ்விதமாகத்தான் நிர்விகாரமானர்களும் இறைவனின் அவதாரமுமான 
ஞானிகள் சுயநலம் ஏதும்  கருதாது உலகத்தை உயிவிப்பதற்காகவே  தோன்றுகிறார்கள் .

(காட்சி இங்கு மாறுகிறது. ஆசிரியர்  காலத்தால் பின்னுக்குப் போய், இளமைப் பருவத்து நிகழ்ச்சியை விவரிக்கிறார்.)

சில நாள்கள் கழித்து  ஆச்சரியமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. இதை 
கவனத்துடன் கேட்டால் கேட்பவர்களும் அதிசயப் படுவார்கள்!

மொஹித்தின் தாம்போளிக்கும் (பீடா வியாபாரி) பாபாவுக்குமிடையே  சில வாக்குவாதங்களும் சச்சரவுகளும்  இருந்து வந்தன. இந்நிலைமை சூடேறி, ஒருநாள் மல்யுத்தம் வரை
 கொண்டு போய்விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டையிட்டனர். 

இருவருமே சிறந்த மல்யுத்த வீரர்கள். ஆயினும், உடல் பலம் விதியை எதிர்த்துப் போராட முடியுமா?மொஹித்துனுக்கு 
அதிக சக்தி கிடைத்தது. பாபாவால் அதற்கு ஈடு கொடுக்க முடியாததால் 
பாபா தோற்கடிக்கப் பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு, பாபா மனதில் ஒரு முடிவெடுத்து விட்டார். அவருடைய 
முழு உடையையும் மாற்றி விட்டார். லங்கோட்டை கட்டிக் கொண்டு அதற்கு
 மேலே   நீண்ட கப்னியை  அணிந்துகொண்டார். ஒருதுணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். 






 


 

Thursday 17 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

வாமன் தாத்யா  என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத 
(வெயிலில் காய வைக்கப்பட்ட நிலை) பானைகளைக் கொடுப்பார். 
பாபா தம்முடைய கைகளாலேயே  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

கிணற்றின் பக்கத்திலிருந்த கற் தொட்டியிலிருந்து குடங்களில் தண்ணீரைத் 
தோள்களின் மீது சுமந்து செல்வார். சூரிய அஸ்தமன நேரத்தில் குடங்களை 
(வேலையை முடித்துவிட்டு) வேப்பமரத்தடியில் வைத்து விடுவார்.

அவ்வாறு வைக்கப்பட்டவுடன் குடங்கள் தாமாகவே உடைந்து விடும். 
மறுநாள் காலையில் , தாத்யா  மறுபடியும் இரண்டு குடங்களைக் கொண்டு 
வந்து தருவார்.

சூளையிலிட்டு  சுடப்பட்ட குடந்தான் உறுதியாக இருக்கும். நாட்பட உழைக்கும் ஆனால், பபவுக்குச் சுடாத குடந்தான் தேவைப்பட்டது . இவ்விதமாக, குயவரால் தினமும் இரண்டு பானைகளைச் சூளையிலிடும்  சிரமம் இன்றியே விற்க முடிந்தது.

மூன்று ஆண்டுகள் பாபா இதையே முக்கியமான வேலையாக ஏற்றுக்கொண்டு செய்தார். 
இன்று அதிர்ஷ்டவசமாக மக்கள் அனுபவிக்கும் சௌகரியமான சத்திரம் இருக்கும் 
இடத்தில் ஓர் அழகான பூந்தோட்டம் உருவாகியது.

மேலும்,அதே இடத்தில்வேப்ப மரத்தடியில் பாயி என்ற பெயருடைய பக்தர்
 ஒருவரால், சமர்த்த சுவாமி அக்கல்  கோட்  மகாராஜினுடைய பாதுகைகள் பக்தர்கள் வழிபடுவதற்காக ஸ்தாபனம் 
செய்யப்பட்டிருக்கிறது.

பாயியுனுடைய உபாசனைத் தெய்வம் அக்கல் கோட்  மகாராஜ், அவருடைய உருவப் படத்திற்கு மிகுந்த பக்தியுடன்  நித்திய நியாமாக பாயி 
பூஜை செய்து வந்தார்.

ஒரு சமயம் அவர் அக்கல்  கோட்டிற்க்கு  சென்று, ஸ்வாமியினுடைய  பாதுகைகளை தரிசனம் செய்து கொண்டு, மனம் லயித்து  உபசாரங்களுடன் கூடிய போசை செய்ய வேண்டுமென்ற மனோபாவம் 
கொண்டார்.

ஆகவே, பம்பாயிலிருந்து அக்கல் கோட்  செல்வதற்கும் அங்கு பூஜை செய்வதற்கு முண்டான எல்லா 
ஏற்பாடுகளையும் செய்து, 
பொருள்களையும் தயார் செய்தார்.  கிளம்புவதற்கு முதல்நாள், இத் தீர்மானத்தையும் எல்லா ஏற்பாடுகளையும் றது செய்துவிட்டு, ஷிர்டி போகும் பாதையில் காணப்பட்டார்.

மறுநாள் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிலையில், முதல் நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். கனவில் அக்கல் கோட்  சுவாமி அவருக்கு ஆக்ஞாபனம் (ஆணை) செய்தார், "ஷிர்டியே இப்பொழுது என்னுடைய ஸ்தானமாக ஆகிவிட்டது; ஆகவே, நீர் ஷிர்டிக்குச் செல்வீராக.!

ஆக்ஞை இவ்வாறு இருந்தபோது,  பயபக்தியுடன் அதற்குக் கீழ்படிந்த பாயி பம்பாயிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். ஷீரடியில் ஆறுமாதங்களை  ஆனந்தமாக கழித்தார்.

பாயி பூரணமான விசுவாசமும் நம்பிக்கையும் உடையவராக இருந்ததால்,
தாம் கண்ட கனவுக் காட்சியின் ஞாபகார்த்தமாக, சமர்த்த அக்கல்  கோட்  சுவாமிகள் பாதுகைகளை வேப்ப மரத்தடியில் ஸ்தாபனம் செய்தார்.