valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

பக்கீர் அதிகம் படித்தவர்; குர் ஆனை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருந்தார். சுயநலவாதிகளும் இறையுணர்வாளர்களும்  விசுவாசிக்களுமாகப் பலர் அவரைப் பின்பற்றினர்.

பக்கீர் ஓர் இத்காவைக் (முஸ்லீம்கள் தொழுகை செய்யும் சுவர்) கட்ட ஆரம்பித்தார். சில நாள்கள் கழித்தபின், அவர் வீரபத்திர சாமி கோவிலை இழிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இத்கா கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது; பக்கீர் கிராமத்திலிருந்து (ரஹாதா) விரட்டியடிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஷீரடிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.

பக்கீர் திறமை வாய்ந்த இனிமையான பேச்சாளி. கிராமமே அவரைக் கொண்டாடியது. அவர் பாபாவை மயக்கித் தம் வசப் படுத்திவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.

"நீ எனக்கு சிஷ்யனாக இருக்கலாம்" என்று அவர் பாபாவிடம் கூறினார். சுபாவத்தில் விளையாட்டுப் பிரியராக இருந்த பாபா, அதற்கு ஒத்துக் கொண்டார். பக்கீர் மிகுந்த சந்தோஷத்துடன், பாபாவை ஷிர்டியிலிருந்து வெளியே அழைத்து கொண்டு போய் விட்டார்.

பிரசித்தி பெற்ற பாபாவை ஷிஷ்யனாக்கி, ஜவஹர் அலி குருவாகிவிட்டார். இருவரும் ரஹாதாவிற்குச் சென்று வாழ்வதென  முடிவு செய்தனர்.

குருவிற்கு ஷிஷ்யருடைய கலைகள் தெரியாது; சிஷ்யருக்கோ குருவினுடைய குறைபாடுகள் தெரிந்திருந்தன. ஆனால், ஒருபொழுதும் சிஷ்யர் குருவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. சிஷ்யனுடைய கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்தார்.

குருவினிடமிருந்து  எந்த ஆனை வந்தாம் சரி, யோக்கியமானதா (தகுதியுடையதா) அயோக்கியமானதா என்று பாராமல், அது உடனே நிறைவேற்றப் பட்டது. குருவின் வீட்டிற்குத் தண்ணீரும் சுமந்தார் சாயி.

இவ்வாறு குருவின் சேவையில் நாள்கள் ஓடின. ஆனால், ஷீரடிக்கு வருவதென்பது எப்போதோ ஒருநாள்தான் முடிந்தது. இம்மாதிரியான நிலை ஏற்பட்டபோது, இதனால் என்ன விளைந்த தென்பதைக்  கேளுங்கள்.

இந்நிலை தொடர்ந்து, பாபா பிரதானமாக ரஹாதாவிலேயே எப்பொழுதும் இருந்தார். மக்கள், பாபாவைப் பக்கீர் மந்திர சக்தியால் கட்டி விட்டார் என்றும் ஷீரடிக்கு இனி அவர் வரப் போவதே இல்லை என்றும் உணர ஆரம்பித்தனர்.

ஜவஹர் அலி யோகபலத்தால், பாபாவைத் தம்முடனேயே இருக்குமாறு கட்டி விட்டார் என்று மக்கள் நினைக்க, பாபாவின் திட்டம் முற்றும் மாறுபட்டதாக இருந்தது. தம்முடைய அஹங்காரத்தை நாசம் செய்ய இதை ஓர் உபயாமாகக் கொண்டார்.

சாயிக்கு ஏது கர்வமும் அஹந்தையும்? கதை கேட்பவர்கள் இவ்வாறு சிந்திப்பது இயற்கையே. ஆனால், அம்மாதிரியான நடத்தை மக்களுக்கு நல்லது செய்யும்; அது அவருடைய அவதாரத்தின் லட்சியம் அன்றோ!


No comments:

Post a Comment