ஷீர்டி சாயி சத்சரிதம்
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக்கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்." (சாயி சொன்ன கதை இங்கு முற்றும்)
ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக் கதையின் விவரணம் அபூர்வமானது! சாயியே ஒரு காரியத்தைச் செய்யும்போது, 'என்னுடையது, நான்' என்னும் எண்ணங்கள் பிசுபிசுத்துப் போகின்றன.
கதையை அளிப்பவர் அவரே; படிப்பவரும் அவரே; காதால் கேட்பவரும் அவரே; அவரே கதையை எழுதுகிறார். அவரே கதையை எழுதும் ஊக்க சக்தியையும் அளிக்கிறார். அர்த்த போதனையை அளிப்பதும் அவரே.
சாயியே இக் கதையின் பாட்டுடைத் தலைவர்; சாயியே இக் கதையின் ருசியுமானவர். அவரே கதையை சொல்பவராகவும் கேட்பவராகவும் ஆகிறார். விளையும் ஆத்மானந்தத்தை அனுபவிப்பவரும் அவரே.
ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் இவ்வினிமையான கதைகளை, 'கேட்டது போதும்' எனச் சொல்வாரோ? இந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் பக்தர்கள் பாக்கியசாலிகள்.
அடுத்த அத்தியாயத்தின் சாரம் உதீயின் அபாரமான மஹிமை. கதை கேட்கும் நல்லோரை பயபக்தியுடன் கேட்குமாறு வேண்டுகிறேன்.
சமர்த்த சாயி, கிருபையால் உந்தப்பட்டு தம்முடைய சரித்திரத்தை தாமே என் மூலமாக எழுதிக்கொண்டார் என்பதை, ஹேமாட் விநயத்துடன் சொல்ல விரும்புகிறேன். கதையோ அபூர்வமான ரசம் நிரம்பியது!
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாம் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குரு மஹிமை வர்ணனை' என்னும் முப்பத்திரண்டாம் அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.