valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

மஹாராஜின் பாதங்களுக்கு அருகில் மூன்று நாள்கள் உபவாசமாக உட்காருவது என்று மனத்தில் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டு வந்தார். கடைசியில், அவருடைய தீர்மானத்தை அவரே வைத்துக்கொள்ளும்படி ஆயிற்று!

பாபாவின் விதிமுறைகளின்படி, ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள விரும்புபவர் முதலில் தம்முடைய சோளரொட்டிக்கு (உணவுக்கு) வழிசெய்துகொள்வது அவசியம். இப் பெண்மணியின் தீர்மானமோ அதற்கு நேர்மாறாக இருந்தது!

இறைவனைக் காண விரும்புபவர் முதலில் ஒரு சோளரொட்டித்துண்டாவது சாப்பிட வேண்டும். ஜீவன் சமாதானமடையாமல் தேவனைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்த யுகத்தின் முடிவுரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது. சாயியை பொறுத்தவரை உபவாசம் போன்ற உடலை வருத்தும் செயல்களை அவர் என்றுமே அனுமதித்ததில்லை.

மஹராஜ் உள்ளுணர்வால் அனைத்தயும் (பெண்மணியின் உபவாச சங்கற்பம்) முந்தைய தினமே அறிந்திருந்தார். தாதா கேள்கரிடம் சொன்னார். -

"வரப்போகும் ஹோலிப் பண்டிகை போன்ற நன்னாளில் என்னுடைய குழந்தைகள் பட்டினி கிடப்பார்களா? அதை நான் அனுமதிப்பேனா? அதை பார்த்துக்கொண்டு நான் இங்கு உட்கார்ந்திருப்பேனா?

சாயியின் திருவாய்மொழி இவ்வாறு வெளிப்பட்ட அன்றைக்கு மறுநாளே இப்பெண்மணி ஷீர்டி வந்துசேர்ந்தார்.

இப் பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. ஏற்கெனவே விவரித்த வாறு, அவர் உபவாஸத் தீர்மானத்துடன் வந்தார். தாம் கொண்டுவந்திருந்த அறிமுகக் கடிதத்தை கொடுத்துவிட்டு தாதா கேள்கரின் இல்லத்தில் தம்முடைய மூட்டையை வைத்தார்.

காசீபாய் காணீட்கர் என்ற கேள்கரின் நெருங்கிய உறவினர், இப் பெண்மணிக்கு பாபாவை தரிசனம் செய்துவைக்குமாறு கேட்டுக்கொண்டு அறிமுகக் கடிதம் கொடுத்திருந்தார்.

ஷீர்டி வந்துசேர்ந்த பிறகு, உடனடியாக பாபாவை தரிசனம் செய்வதற்காக இப் பெண்மணி சென்றார். தரிசனம் முடிந்து சிறிது ஓய்வெடுப்பதற்கு முன்னரே பாபா இப் பெண்மணிக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

எவ்வளவு ஆழமாக ஓடும், எண்ணங்களாக இருந்தாலும் சரி, எல்லாருடைய எண்ணங்களையும் பாபா அறிந்திருந்தார். இவ்வுலகில் அவர் அறியாதது ஒன்றுமேயில்லை!

"உணவு மஹாவிஷ்ணு ரூபம்; உண்பவரும் மஹாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத் தின்பது (அவல், பழங்கள் போன்றவை) பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது - எதற்காக இந்த வீண் சிரமங்கள்?-