valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஞானிகள் தம்முள் இருக்கும் தேஜஸைத் (ஒளியைத்) தூண்டிவிட்டு அதில் தங்களுடைய தேஹங்களை எரித்துவிடுவர். பாபாவும் அந்த விதமாகவே செயல்பட்டார்.

எது நேர்ந்திருக்கவே கூடாதோ அது நடந்து முடிந்துவிட்டது. மஹராஜ் சாயுஜ்யம் (முழுமுதற் பொருளுடன் ஒன்றுதல்) அடைந்துவிட்டார். மக்கள் அடியோடு மனமுடைந்து அழுது தீர்த்தனர்.

"அய்யகோ! நான் அவரை விட்டு விலகிப் போகாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டேனே! ஒருவேளை நான் உபயோகமாக ஏதாவது சேவை செய்திருப்பேனோ என்னவோ! ஓ, எப்படி, எப்படி என் மனம் நெருக்கடியான நேரத்தில் அவ்வாறு குழம்பியது?"

இதுபோன்ற நாலாவிதமான எண்ணங்கள் மக்களுடைய மனத்தை துக்கப்படவைத்தன. ஆயினும், பாபாவின் மனத்திலிருந்த எண்ணங்களை யாரால் அறிந்துகொள்ள முடிந்தது?

தொண்டையில் கரகரவென்று இழுக்கவில்லை; மூச்சும் திணறவில்லை; இருமலுமில்லை; ஜீவன் துடிக்கவுமில்லை. பாபா உல்லாசமாகப் பிரயாணம் கிளம்பிவிட்டார்!

அய்யகோ! இப்பொழுது சாயிதரிசனம் எங்கே? இனிமேல் கால்களை பிடித்துவிடுவது எப்படி? பாதங்களை அலம்புவது எங்கனம்? தீர்த்தத்தை அருந்துவது எவ்வாறு?

அந்திமவேளை நெருங்கிவிட்டதென்று தெரிந்து, சுற்றிலுமிருந்த, பிரேமை மிகுந்த பக்தர்களை கலைந்த போகச் சொல்லி அவர்களை மனவேதனை அடையச் செய்தது ஏன்?

ஒருவேளை இப்படி இருக்குமோ? நிர்யாணகாலத்தில் உயிருக்குயிரான பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தால்பாபாவின் மனத்தில் அந் நேரத்தில் அன்பின் அலைகள் போங்க வாய்ப்பு இருந்தது.

இம்மாதிரியான பிரேமபந்தங்கள் சாயுஜ்யம் அடைவதற்குத் தடையாக  அமையும். இவற்றை சரியான நேரத்தில் அறுத்தெரியாவிட்டால், மனம் எவ்வாறு வாசனைகளிலிருந்து (பற்றுகளிலிருந்து) விடுபடும்?

பற்றுகளிலிருந்து விடுபடாமல் ஜீவன் பிரிந்தால், அக்கணமே சம்சார வாழ்வில் ஒரு புதிய ஈடுபாடு ஜனனமாகிறது. கூடவே எத்தனையோ புதிய எதிர்பார்ப்புகளையும் அவாக்களையும் கூட்டிவருகிறது.

ஞானிகளும் சாதுக்களும் என்றும் இந் நிலையைச் சட்டென்று தவிர்த்துவிடுவர். அந்தப் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாபா மனத்தில் நிர்த்தாரணம் செய்துகொண்டார்.

அந்திமகாலத்தில் சாந்தியாக இருக்கவேண்டும்; ஏகாந்தமாக இருக்கவேண்டும்; அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அந் நிலையில்தான் மனம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்ய முடியும். இவ்வுணர்வை, வாழ்வின் இறுதிக்கு கட்டத்தில் எவரும் நிலைநிறுத்த வேண்டும்.

'அந்திமத்தில் மதி எப்படியோ, அப்படியே கதி'. (உயிர் பிரியும் நேரத்தில் மனம் எதை நினைக்கிறதோ அதற்கேற்றவாறு மறுபிறவி ஏற்படுகிறது.) இந்தப் பிரசித்தி