ஷீர்டி சாயி சத்சரிதம்
தர்வேசிகள் மூவர் இருந்தனர். புலியை வைத்துத்தான் அவர்களுடைய ஜீவிதம் நடந்துகொண்டிருந்தது. ஊர் ஊராகச் சென்று, புலியைக் காட்டிக் காசு வாங்கி வாழ்க்கை நடத்தினர்.
அந்தப் பிராந்தியத்தில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தபோது, பாபாவின் லீலைகளை பற்றிக் கேள்விப்பட்டனர். ஆகவே, தர்வேசிகள் நினைத்தனர், "நாம் அவரை தரிசனம் செய்வோம். புலியையும் அங்கே கொண்டுசெல்வோம்.-
"அவருடைய பாதங்கள் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி; அஷ்ட மகா சித்திகளும் அவரை நமஸ்காரம் செய்கின்றன; நவநிதிகள் பாததீர்த்தம் வேண்டி அவருடைய காலடியில் புரளுகின்றன. -
"ஆகவே, நாம் அவருடைய பாதங்களை வணங்கிப் புலியை ஆசீர்வாதம் செய்யச்சொல்லி வேண்டுவோம். ஞானியின் ஆசிகளால் நாம் எல்லாருமே மங்களமடையவோம்."
தர்வேசிகள் இந்த நோக்கத்துடன் புலியை மசூதியின் வாயிலுக்கருகில் வண்டியிலிருந்து இறக்கினர். சங்கிலிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாயிலில் காத்திருந்தனர்.
புலி இயல்பாகவே ஒரு பயங்கரமானதும் கொடூரமானதுமான காட்டு மிருகம்; இந்தப் புலிக்கு வியாதி வேறு கண்டிருந்தது. ஆகவே, புலி நிலைகொள்ளாமல் தவித்தது. எல்லாரும் இந்தக் காட்சியை வேடிக்கைப் பார்த்தனர்.
தர்வேசிகள் படியேறிச் சென்று பாபாவிடம் புலியின் நிலைமைபற்றித் தெரிவித்தனர். அவருடைய சம்மதம் பெற்றபின் வாயிலுக்குத் திரும்பிவந்தனர்.
புலி தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு, தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.
படியை தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.
படியை நெருங்கியபோது புலி சாயியின் ஜோதிமயமான உருவத்தைப் பார்த்தது. புலி மனத்துள்ளே நடுங்கியது ஏன் என்று கடவுளுக்குத்தான் தெரியும்! மிக மரியாதையாகத் தலையை கவிழ்த்துக்கொண்டது.
ஆஹா, என்னே அந்த அற்புதம்! பரஸ்பரமாகப் பார்வைகள் சந்தித்தபோது, புலி படியேறிக்கொண்டே பாபாவை அன்புடன் உற்றுப்பார்த்தது.
உடனே வாலின் நுனியைத் தூக்கி மூன்று தடவைகள் பூமியில் அடித்தது. சேஷ்டை ஏதும் செய்யாமல் சாயிபாதங்களில் தன் வியாதி பிடித்த உடலைச் சாய்த்தது.
ஒருமுறை பயங்கரமாக உறுமிவிட்டு அக்கணமே அவ்விடத்திலேயே உயிர் நீத்தது. புலி உயிர் நீத்த பாணியை கண்ட சகல ஜனங்களும் வியப்படைந்தனர்.
ஒருவிதத்தில் தர்வேசிகள் சோகமுற்றனர். அதே நேரத்தில், வியாதியால் பீடிக்கப்பட்ட புலி மரணமடைந்தாலும் முக்தியடைந்ததைக் கண்டு மனம் தேறினர்.
சாதுக்களின், ஞானிகளின் கண்ணெதிரில் மரணமடைவதென்பது புண்ணியம் சேர்க்கும். புழுவாய் இருந்தாலென்ன, பூச்சியாய் இருந்தாலென்ன, புலியாய் இருந்தாலென்ன? எல்லாப் பாவங்களிலிருந்தும் உடனே விமோசனம் கிடைக்கறது.
புலி போன ஜென்மத்தில் தர்வேசிகளுக்குக் கடன்பட்டிருக்கும். அது தீர்ந்தவுடன் புலிக்கு விடுதலை கிடைத்தது. சாயிபாதங்களில் தேகத்தை உகுத்தது. விதியின் விளையாட்டு நமக்கு விளங்காது!.
தர்வேசிகள் மூவர் இருந்தனர். புலியை வைத்துத்தான் அவர்களுடைய ஜீவிதம் நடந்துகொண்டிருந்தது. ஊர் ஊராகச் சென்று, புலியைக் காட்டிக் காசு வாங்கி வாழ்க்கை நடத்தினர்.
அந்தப் பிராந்தியத்தில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தபோது, பாபாவின் லீலைகளை பற்றிக் கேள்விப்பட்டனர். ஆகவே, தர்வேசிகள் நினைத்தனர், "நாம் அவரை தரிசனம் செய்வோம். புலியையும் அங்கே கொண்டுசெல்வோம்.-
"அவருடைய பாதங்கள் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி; அஷ்ட மகா சித்திகளும் அவரை நமஸ்காரம் செய்கின்றன; நவநிதிகள் பாததீர்த்தம் வேண்டி அவருடைய காலடியில் புரளுகின்றன. -
"ஆகவே, நாம் அவருடைய பாதங்களை வணங்கிப் புலியை ஆசீர்வாதம் செய்யச்சொல்லி வேண்டுவோம். ஞானியின் ஆசிகளால் நாம் எல்லாருமே மங்களமடையவோம்."
தர்வேசிகள் இந்த நோக்கத்துடன் புலியை மசூதியின் வாயிலுக்கருகில் வண்டியிலிருந்து இறக்கினர். சங்கிலிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாயிலில் காத்திருந்தனர்.
புலி இயல்பாகவே ஒரு பயங்கரமானதும் கொடூரமானதுமான காட்டு மிருகம்; இந்தப் புலிக்கு வியாதி வேறு கண்டிருந்தது. ஆகவே, புலி நிலைகொள்ளாமல் தவித்தது. எல்லாரும் இந்தக் காட்சியை வேடிக்கைப் பார்த்தனர்.
தர்வேசிகள் படியேறிச் சென்று பாபாவிடம் புலியின் நிலைமைபற்றித் தெரிவித்தனர். அவருடைய சம்மதம் பெற்றபின் வாயிலுக்குத் திரும்பிவந்தனர்.
புலி தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு, தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.
படியை தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.
படியை நெருங்கியபோது புலி சாயியின் ஜோதிமயமான உருவத்தைப் பார்த்தது. புலி மனத்துள்ளே நடுங்கியது ஏன் என்று கடவுளுக்குத்தான் தெரியும்! மிக மரியாதையாகத் தலையை கவிழ்த்துக்கொண்டது.
ஆஹா, என்னே அந்த அற்புதம்! பரஸ்பரமாகப் பார்வைகள் சந்தித்தபோது, புலி படியேறிக்கொண்டே பாபாவை அன்புடன் உற்றுப்பார்த்தது.
உடனே வாலின் நுனியைத் தூக்கி மூன்று தடவைகள் பூமியில் அடித்தது. சேஷ்டை ஏதும் செய்யாமல் சாயிபாதங்களில் தன் வியாதி பிடித்த உடலைச் சாய்த்தது.
ஒருமுறை பயங்கரமாக உறுமிவிட்டு அக்கணமே அவ்விடத்திலேயே உயிர் நீத்தது. புலி உயிர் நீத்த பாணியை கண்ட சகல ஜனங்களும் வியப்படைந்தனர்.
ஒருவிதத்தில் தர்வேசிகள் சோகமுற்றனர். அதே நேரத்தில், வியாதியால் பீடிக்கப்பட்ட புலி மரணமடைந்தாலும் முக்தியடைந்ததைக் கண்டு மனம் தேறினர்.
சாதுக்களின், ஞானிகளின் கண்ணெதிரில் மரணமடைவதென்பது புண்ணியம் சேர்க்கும். புழுவாய் இருந்தாலென்ன, பூச்சியாய் இருந்தாலென்ன, புலியாய் இருந்தாலென்ன? எல்லாப் பாவங்களிலிருந்தும் உடனே விமோசனம் கிடைக்கறது.
புலி போன ஜென்மத்தில் தர்வேசிகளுக்குக் கடன்பட்டிருக்கும். அது தீர்ந்தவுடன் புலிக்கு விடுதலை கிடைத்தது. சாயிபாதங்களில் தேகத்தை உகுத்தது. விதியின் விளையாட்டு நமக்கு விளங்காது!.