valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 February 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

காகா சாகேப் தீக்ஷிதரும் அதற்காகவே அங்கு அமர்ந்திருந்தார். திடீரென்று மாதவ்ராவ் சிரித்தார். "என்ன, அண்ணாசாஹேப்! இங்கு ஒட்டிக்கொண்டிருக்கும் தானியங்கள் எங்கிருந்து வந்தன?"

இவ்வாறு கேட்டுக்கொண்டே மாதவ்ராவ் என்னுடைய கோட்டின் மடிப்புகளை விரலால் தொட்டார். ஆஹா! அங்கு உடைத்த கடலைப் பருப்புகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அது என்னவென்று பார்க்க நான் முழங்கையை நீட்டியபோது சில உடைத்த கடலைப் பருப்புகள் உருண்டோடியதையும் சுற்றியிருந்தவர்கள் அவற்றை பொறுக்கியதையும் பார்த்தேன்.

கவனத்துடன் பொறுக்கியெடுத்து ஒன்று சேர்க்கப்பட்ட போது சுமார் 25  பருப்புகள் இருந்தன. அதுவே அந்த நேரத்தில் தமாஷ் செய்யவும் என்னை நையாண்டி செய்யவும் காரணமாக அமைந்தது! ஆனால், இது எவ்விதம் நிகழந்தது?

ஊகத்திற்கு மேல் ஊகம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் தம்முடைய எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தனர். அந்த உடைத்த கடலைப் பருப்புகள் கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது எல்லாரையுமே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

அந்தக் காக்கிக் கோட்டில் எத்தனை மடிப்புகள்தாம் இருந்திருக்க முடியும்? உடைத்த கடலைப் பருப்புகளை மடிப்புகள் எப்படி அடக்கி வைத்திருக்க முடியும்? முதலாவதாக, அங்கு எப்படி, எவ்விதமாக, உடைத்த கடலை வந்திருக்க முடியும்? யாருக்குமே இது தெளிவாக விளங்கவில்லை!

மனதளவில் நான் நாமஜபத்தில் மூழ்கிக் கைகளால் பாதசேவை செய்துகொண்டிருந்தபோது, நடுவில் இந்த உடைத்த கடலைக் கதை எங்கிருந்து முளைத்தது?

மேலும் இவ்வளவு நேரம் நான் பாபாவின் பாதங்களை பிடித்து விட்டு கொண்டிருந்தபோது உடைத்த கடலைப் பருப்புகள் ஏன் உருண்டோட வில்லை? அவ்வவளாக நேரமாக அவை கோட்டிலேயே ஒட்டிக் கொண்டிருந்தன என்பது எல்லாருடைய மனதிலும் ஆச்சரியத்தை விளைவித்தது.

உடைத்த கடலைப்பருப்புகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றியும் கோட்டு மடிப்பில் எப்படி இவ்வளவு நேரம் பதுங்கி இருந்தன என்பது பற்றியும் எல்லாரும் தலையை பிய்த்துக்கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தபோது பாபா என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

அநேக மக்களுக்கு அநேக விதமாகவும் விசித்திரமாகவும் போதனையளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கேற்றவாறு பாபா போதனை அளித்தார்.

சாயி மஹாராஜினுடைய போதனை முறைகள் அபூர்வமானவை. போதனை முறை மிக சுவாரஸ்யமாக இருந்ததால், மனதில் நிலைத்தது. இம்மாதிரியான போதனை முறைகளை நான் வேறெங்கும் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது.

பாபா சொன்னார், "இந்த மனிதருக்கு தின்பண்டங்களை முழுக்கத் தாமே தின்றுவிடும் கெட்டபழக்கம் இருக்கிறது. இன்று சந்தை நாளாக இருப்பதை நன்கு சாதகப்படுத்திக் கொண்டு உடைத்த கடலையை பேராவலுடன் தின்றுகொண்டே விசாரமேதுமின்றி இங்கு வந்திருக்கிறார்.-