valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா?

மசூதி ஏற்கெனவே ஒரு குறுகலான இடம்; பக்தர்களும் பலர் இருந்தனர். போதாதற்கு டாக்டர் பிள்ளையின் நிலைமை வேறு ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருந்தது; அப்துல்லாவுக்குக் கால் வைப்பதற்கும் வசதி இல்லாதிருந்தது.

மேலும், அப்துல் காரியமே கண்ணாக அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதிலேயே குறியாக இருந்தார். பிள்ளை அங்கு உட்கார்ந்திருந்தததை ஒருகணம் கவனிக்கவில்லை. அப்பொழுது சற்றும் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது.

அப்துல்லாவால்தான் என்ன செய்ய முடியும் பாவம்! நடப்பது நடந்தே தீரும் அன்றோ? வேதனை குறைவதற்காக நீட்டி வைத்திருந்த பிள்ளையின் காலைத் தவறுதலாக அப்துல் மிதித்துவிட்டார்.

ஏற்கெனவே வீங்கிப் போயிருந்த பிள்ளையின் காலை அப்துல்லாவின் பாதம் பார்த்துவிட்டது. "ஐயோ!" பிள்ளை பயங்கரமாக அலறினார்; வழியால் துடிதுடித்தார்.

ஒருமுறை, ஒரே ஒரு முறைதான் பாவூ வலி பொறுக்கமாட்டாமல் அலறினார். அந்த அலறல் அவருடைய தலையைத் துளைத்துக்கொண்டு சென்றது போலும்! கூப்பிய கைகளுடன் அவர் பாபாவின் கருணைநாடி வேண்ட ஆரம்பித்தார். வேண்டுதலைக் கேளுங்கள்!

கட்டி உடைந்து, சீழ் வெளிவர ஆரம்பித்தது. பிள்ளை மிக்க கலவரமடைந்து ஒரு பக்கம் ஓவென்று அழுதார்; மறுபக்கம் பாட ஆரம்பித்தார்.
"ஓ , கரீம் (அல்லா)! என் நிலைமையைப் பார்த்து மனமிறங்க மாட்டீரா ? ரஹ்மான் (கருணாமூர்த்தி) என்றும் ரஹீம் (தயாளர்) என்றும் உம்மை அழைக்கின்றனரே! நீரே இரண்டு உலகங்களுக்கும் சுல்தான் (சக்கரவர்த்தி); இவ்வுலகமே உம்முடைய மகிமையின் வெளிப்பாடன்றோ! இவ்வுலக வியாபாரம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்; உம்முடைய புகழோ என்றும் நிலைத்திருக்கும்! நீங்களே என்றும் உம் அடியவர்களின் அடைக்கலம்."

குத்துவலி அவ்வப்பொழுது வந்து போயிற்று. டாக்டர் புள்ளியின் ணம் கொந்தளித்தது; அவர் சோர்வடைந்து பலமிழந்துபோனார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஈத்தனைத்தும் பாபாவின் விளையாட்டே என்றறிந்தனர்.

பாபா சொன்னார், "பாவூவைப் பாருங்கள்; பாட ஆரம்பித்துவிட்டார்". பிள்ளை பாபாவைக் கேட்டார், "பாபா, அந்தக் காக்கை வந்து என்னுடைய புன்னைக் கொத்தப் போகிறதா?"

பாபா சொன்னார், "நீர் போய் வாடாவில் அமைதியாகப் படுத்துக்கொள்ளும். காக்கை கொத்துவதற்கு மறுபடியும் வாராது.-