valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


செயல் புரியும் உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்போல் தோன்றினாலும், அவர் சிறிதளவும் செயலேதும் புரியவில்லை. 'நான்' என்ற உணர்வை முழுவதும் இழந்துவிட்டதால் கர்மத்தில் அகர்மத்தைக் (செயல் புரிவதில் புரியாமையைக்) கண்டார் பாபா.

"கர்மவினை அனுபவிக்காமல் அழியாது". கர்மவினைப்பற்றிய இந்த சூக்குமம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்ம ஞானம் பெற்றவருக்கு இதுபற்றிக் குழப்பம் ஏதும் இருக்கமுடியாது. ஏனெனில், அவர் எல்லா வஸ்துக்களிலும் பிரம்மத்தையே பார்க்கிறார்.

செயலின் பலன், செயலிலிருந்தே விளைகிறது. துவைத பாவத்தின் (இரண்டு உண்டு என்னும் கோட்பாட்டின்படி ) இந்த நியதி பிரசித்தமானது. பிரம்மத்தை அறிந்தவர்கள் கிளிஞ்சலையும் வெள்ளியையும் சமமாகப் பார்ப்பதுபோல், இந்த நியதியையும் பிரம்மமாகவே கருதுகின்றனர்.

எல்லாருக்கும் கருணை காட்டும் அன்னையான சாயி, எப்படி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார்? கரிய இரவு, பகலை விழுங்கிய கதையாயிற்றே!

ஒவ்வொரு மாதத்தின் வரையறையை மனத்தில் கொண்டு இந்த அத்தியாயத்தை இங்கு முடிப்போமாக! மிக விஸ்தாரமாக்கிவிட்டால் கேட்பவர்கள் அயர்ந்து போவார்கள்.

மஹாசமாதிபற்றிய மற்ற விவரங்களைப் பின்னர்க் கிரமமாக கேட்கலாம். எவருடைய கிருபையால் யான் பெரு பெற்றவனாக ஆனேனோ, அந்த சமர்த்த சாயியை ஹேமாட் சரணடைகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த ஸாயீ சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஸ்ரீ சாயிநாத நிர்யாணம்' என்னும் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றும்.



ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.