ஷீர்டி சாயி சத்சரிதம்
எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற, 'சமர்த்த சாயி' என்னும் மந்திரத்தை சதா ஜபம் செய்வோம். அதுவே எங்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும். நிட்டையின் மூலமாக நற்செயலை செய்த திருப்தியையும் பெறுவோம்.
முந்தைய அத்தியாயத்தில், தயாபரரான சமர்த்த சாயி எவ்வாறு பக்தர்களின் மங்களம் கருதி சிக்ஷை (போதனை - பயிற்சி) அளித்தார் என்பது விவரிக்கப்பட்டது.
இந்த அத்தியாயத்தில், அவர் ஒரு பக்தருக்கு குலகுருவின் மீதிருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு நிலைபெறச் செய்தார் என்பது விவரிக்கப்படும். விந்தையான இக் காதையை கேளுங்கள்.
செவிமடுப்பவர்களே! சித்தம் சிதறாமல் மனமொன்றி, பந்த் என்னும் பெயர் கொண்ட பக்தரின் இனிமையான காதையைக் கேளுங்கள். தத்துவம் மனத்தில் ஆழமாகப் பதியும்.
எந்த விதமான அனுபவம் எப்படிக் கொடுக்கப்பட்டது. நம்பிக்கை என்னும் அஞ்சனம் (மை) எவ்வாறு அவருடைய கண்ணுக்கிடப்பட்டது. குலகுருவிடம் கொண்ட விசுவாசம் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப் பட்டது. அவருடைய மனம் சாந்தியடைய விவரம், இவற்றையெல்லாம் விளக்குகிறேன்; கேளுங்கள்.
ஒரு சமயம் பந்த் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் மிக சிரமப்பட்டு தம் நண்பர்களுடன் சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு வந்தார்.
அவர் ஏற்கெனவே தம் குலகுருவிடம் தீட்சை (மந்திர உபதேசம்) பெற்றவர். குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஆகவே, அவருடைய மனத்தில் ஷிர்டிக்கு எதற்காக செல்லவேண்டும் என்ற ஐயம் இருந்தது.
ஆயினும், ஏற்கெனவே விதிக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக எப்படியாவது நடந்தே தீரும். சாயிதரிசனம் செய்யும் நல்வாய்ப்பு, முயற்சி ஏதும் செய்யாமலேயே வந்தது; அதனால் அமோகமான நன்மையும் விளைந்தது.
மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறுவிதமாக நினைக்கிறது. விதியை எதிர்த்து எதுவும் நடக்காது. அமைதியான மனத்துடன் இந்த அனுபவத்தை கேளுங்கள்.
ஷிர்டிக்கு போவதென்றே திட்டத்துடன் சில பக்தர்கள் தத்தம் இடங்களில் இருந்து சந்தோஷமாக கிளம்பி ஒரு கோஷ்டியாகப் புகைவண்டியில் ஏறினர்.
ரயில் பெட்டியில் ஏறும்பொழுது பந்த் உள்ளே உட்கார்ந்திருந்ததை பார்த்தனர். அவர்கள் ஷிர்டிக்கு பயணப்பட்டிருந்தார்கள் என்று பந்த் அறிந்து கொண்டார்.
அந்த கோஷ்டியில் பந்தின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் இருந்தனர்! இதன் விளைவாக, ஷிர்டிக்கு செல்ல நாட்டமேதும் இல்லாத பந்தும் அவர்களுடைய நிர்பந்தத்திற்கு இணங்கி, கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள நேர்ந்தது.
பார்க்கப்போனால், அவரிடம் ஆரம்பத்தில் செல்ல நினைத்த இடம் வரைக்குமே பயணசீட்டு இருந்தது. ஆனால், அவர் சூழ்நிலையால் மனத்தை மாற்றிக் கொண்டார்.
"நாமெல்லோரும் ஒன்றாக ஷிர்டிக்கு பயணம் செல்வோம்" என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்களுடைய வற்புறுத்தலுக்கு பந்த் இணங்க வேண்டியதாயிற்று.
எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற, 'சமர்த்த சாயி' என்னும் மந்திரத்தை சதா ஜபம் செய்வோம். அதுவே எங்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும். நிட்டையின் மூலமாக நற்செயலை செய்த திருப்தியையும் பெறுவோம்.
முந்தைய அத்தியாயத்தில், தயாபரரான சமர்த்த சாயி எவ்வாறு பக்தர்களின் மங்களம் கருதி சிக்ஷை (போதனை - பயிற்சி) அளித்தார் என்பது விவரிக்கப்பட்டது.
இந்த அத்தியாயத்தில், அவர் ஒரு பக்தருக்கு குலகுருவின் மீதிருந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எவ்வாறு நிலைபெறச் செய்தார் என்பது விவரிக்கப்படும். விந்தையான இக் காதையை கேளுங்கள்.
செவிமடுப்பவர்களே! சித்தம் சிதறாமல் மனமொன்றி, பந்த் என்னும் பெயர் கொண்ட பக்தரின் இனிமையான காதையைக் கேளுங்கள். தத்துவம் மனத்தில் ஆழமாகப் பதியும்.
எந்த விதமான அனுபவம் எப்படிக் கொடுக்கப்பட்டது. நம்பிக்கை என்னும் அஞ்சனம் (மை) எவ்வாறு அவருடைய கண்ணுக்கிடப்பட்டது. குலகுருவிடம் கொண்ட விசுவாசம் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப் பட்டது. அவருடைய மனம் சாந்தியடைய விவரம், இவற்றையெல்லாம் விளக்குகிறேன்; கேளுங்கள்.
ஒரு சமயம் பந்த் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் மிக சிரமப்பட்டு தம் நண்பர்களுடன் சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு வந்தார்.
அவர் ஏற்கெனவே தம் குலகுருவிடம் தீட்சை (மந்திர உபதேசம்) பெற்றவர். குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஆகவே, அவருடைய மனத்தில் ஷிர்டிக்கு எதற்காக செல்லவேண்டும் என்ற ஐயம் இருந்தது.
ஆயினும், ஏற்கெனவே விதிக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக எப்படியாவது நடந்தே தீரும். சாயிதரிசனம் செய்யும் நல்வாய்ப்பு, முயற்சி ஏதும் செய்யாமலேயே வந்தது; அதனால் அமோகமான நன்மையும் விளைந்தது.
மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறுவிதமாக நினைக்கிறது. விதியை எதிர்த்து எதுவும் நடக்காது. அமைதியான மனத்துடன் இந்த அனுபவத்தை கேளுங்கள்.
ஷிர்டிக்கு போவதென்றே திட்டத்துடன் சில பக்தர்கள் தத்தம் இடங்களில் இருந்து சந்தோஷமாக கிளம்பி ஒரு கோஷ்டியாகப் புகைவண்டியில் ஏறினர்.
ரயில் பெட்டியில் ஏறும்பொழுது பந்த் உள்ளே உட்கார்ந்திருந்ததை பார்த்தனர். அவர்கள் ஷிர்டிக்கு பயணப்பட்டிருந்தார்கள் என்று பந்த் அறிந்து கொண்டார்.
அந்த கோஷ்டியில் பந்தின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் இருந்தனர்! இதன் விளைவாக, ஷிர்டிக்கு செல்ல நாட்டமேதும் இல்லாத பந்தும் அவர்களுடைய நிர்பந்தத்திற்கு இணங்கி, கோஷ்டியுடன் சேர்ந்துகொள்ள நேர்ந்தது.
பார்க்கப்போனால், அவரிடம் ஆரம்பத்தில் செல்ல நினைத்த இடம் வரைக்குமே பயணசீட்டு இருந்தது. ஆனால், அவர் சூழ்நிலையால் மனத்தை மாற்றிக் கொண்டார்.
"நாமெல்லோரும் ஒன்றாக ஷிர்டிக்கு பயணம் செல்வோம்" என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்களுடைய வற்புறுத்தலுக்கு பந்த் இணங்க வேண்டியதாயிற்று.