பாபா தம் கையை இதயத்தின் மேல் வைத்து ஆணித்தரமாக சொன்னார். "ஆமாம், ஆமாம், விட்டலின் உருவம் பிரசன்னமாகும். பக்தனுக்குத் தேவையான அளவுக்கு நம்பிக்கை இருந்தால்! -
"டாகுர்நாதரின் டங்கபுரியும் விட்டல்ராயரின் பண்டர்பூரும் ரன்சோடின் துவாரகையும் எல்லாமே ஷீரடியில் இருக்கின்றன. எங்கே தேடியும் அலைய வேண்டியதில்லை. -
"விட்டால் என்ன, ஒரு ரகசியமான இடத்திலிருந்தா வெளிவரப்போகிறார்? பக்தர்களின் அபரிதமான அன்பினால் உந்தப்பட்டு, இவ்விடத்திலேயே அவர் உங்களுக்காகத் தோன்றுவார். -
"புண்டலிகர் தம்முடைய பெற்றோர்களுக்கு பக்தியுடன் செய்த சேவையால், தேவாதிதேவனைத் தாம் சொன்னபடி கேட்கவைத்தார். அவனும் புண்டளிகரின் அன்பாலும் பக்தியாலும் கட்டுண்டு ஒற்றைச் செங்கல்லின்மேல் நின்று காத்திருந்தான்." (பண்டரிதாருக்கு விட்டால் என்று பெயர் வந்த கதை)
ஆகவே, சப்தாஹம் முடியும் தருவாயில், தாஸ்கனுவிற்குச் ஷிர்டியிலேயே விட்டால் தரிசனம் பிராப்தமாகியது என்று சொல்லப்படுகிறது. பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின.!
ஒருமுறை காகாசாஹெப் தீட்சிதர் நியமானசாரமாக காலை ஸ்நானம் செய்துவிட்டு வழக்கம்போல் தியானம் செய்யும்போது விட்டல் தரிசனம் கிடைத்தது.
பிறகு அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது, பாபா அவரிடம் என்ன சொன்னார் என்னும் அதிசயத்தை பாருங்கள். "ஆக, விட்டல் பாடீல் வந்தார் இல்லையா? அவரை நீர் கட்டாயம் சந்தித்திருப்பீர்; எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது;-
"ஆனால், உஷார்; அந்த விட்டல் பாடீல் ஒரு நழுவல் பேர்வழி. அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓரிடத்தில் பலவந்தமாக ஸ்தாபனம் செய்யும். இல்லையெனில் நீர் ஒருகணம் கவனக்குறைவானாலும் போதும், உம்மை ஏமாற்றிவிட்டு ஓடி விடுவார்".
இது காலையில் நடந்த சம்பவமே. இதற்குப் பிறகு சூரியன் உச்சிக்கு வந்த நடுப்பகலில், எப்படி இன்னுமொரு மகிமை வாய்ந்த விட்டல் தரிசனத்திற்கு நிரூபணம் கிடைத்ததென்று பாருங்கள்.
யாரோ ஒருவர் இன்னொரு கிரமாத்திலிருந்து, பந்தர்பூர் விடோபாவின் இருபத்தைந்து முப்பது படங்களை எடுத்துகொண்டு, விற்பதற்காக ஷிர்டி கிராமத்திற்கு வந்தார்.
அப்படங்கள் தாம் காலையில் தியானத்தில் கண்ட விட்டலின் உருவத்தின் பூரணமான அச்சாக இருப்பது கண்டு, தீட்சிதர் வியய்ப்பிலாழ்ந்தார். பாபாவினுடைய வார்த்தைகள் உடனே அவருக்கு ஞாபகம் வந்தன.
மிகுந்த பிரீத்தி யுடன் ஒரு படத்தை அதற்குண்டான விலையை விற்பனையாளரிடம் கொடுத்து வாங்கி, பக்தி பாவத்துடன் பூஜைக்கென நிர்மாணம் செய்தார்.
பாபாவுக்கு விட்டல் வழிபாட்டில் இருந்த மரியாதையும் பக்தியையும் மேலும் கோடிட்டுக் காட்டும் வகையில், இன்னுமொரு மனோஹரமானதும் சுந்தரமானதுமான காதையைக் கேளுங்கள் ...