ஷிர்டி சாய் சத்சரிதம்
கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த பிரம்ம ஞானத்தை தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தை பற்றிக் கேளுங்கள்.
பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.
எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்;
சிலர் புத்திர சந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்யத்தையும் விரும்புவர்; சிலர் பாவ பக்தியையும் நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியிலிருந்து விடுதலையை நாடுவர்.
பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவரும், தம்மைப் பக்தனாக பாவித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.
செல்வம், சந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா சம்பத்துக்களும் அவரிடம் அபரிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதார குணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.
"பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; சாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை.-
"எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாக கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்!"
நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், "பிரம்மத்தை அறிவது சுலபமான காரியம் அன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசை பிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது நடக்காத காரியம்.-
"செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களை தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனபிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?-
"இந்திரிய சக்திகள் க்ஷனம்டைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.-
கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த பிரம்ம ஞானத்தை தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தை பற்றிக் கேளுங்கள்.
பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.
எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்;
சிலர் புத்திர சந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்யத்தையும் விரும்புவர்; சிலர் பாவ பக்தியையும் நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியிலிருந்து விடுதலையை நாடுவர்.
பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவரும், தம்மைப் பக்தனாக பாவித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.
செல்வம், சந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா சம்பத்துக்களும் அவரிடம் அபரிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதார குணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.
"பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; சாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை.-
"எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாக கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்!"
நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், "பிரம்மத்தை அறிவது சுலபமான காரியம் அன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசை பிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது நடக்காத காரியம்.-
"செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களை தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனபிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?-
"இந்திரிய சக்திகள் க்ஷனம்டைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.-