ஷிர்டி சாயி சத்சரிதம்
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பி வழியும் பாகம். ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தை போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களை கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீட்சிதர் தினமும் வாசித்துக் கொண்டிருந்தார்.
பகல் நேரத்தில் தீட்சிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவர்த்த இராமாயணத்தை படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீட்சிதருக்கு ஒரு பிரமான நூலாக அமைந்தது.
பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் சாரம் ஏகநாத பாகவதம். ஞாநேச்வரியின் இரண்டாவது அவதாரத்தை போன்றது. ஏகநாதர் மகாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப் பெரியதுமான வரம்.
விடியற்காலையில் ஸ்நானம், நியம நிஷ்டையுடையவன் சாயி பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம் முடிந்தபின், -
நிவேதனம் செய்த பால், சொற்பமான ஆகாரம், இவை இரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீட்சிதர் பயபக்தியுடன் போதியை படிக்க ஆரம்பிப்பார்.
பாகவதர்களில் உத்தமரான துகாராமை, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்க வைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்க முடியும்?
ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்! எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீட்சிதர்! இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷ்தரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்க சொல்லி சமர்த்த சாயி ஆணையிட்டார்.
வனத்தை தேடித் போக வேண்டா. உத்தவ கீதையில் பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.
ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்களத்தில் நேர்ந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைதான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கி இருக்கிறார்.
இக்காரணத்தினால், கிருபையே உருவான சமர்த்த சாயினாதர் தெய்வப் பிரசாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.
பாபா சகாரம் ஹரி ஜோக்கை படிக்கச் சொல்லி இருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் சாடேவாடாவில் தினமும் படித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பி வழியும் பாகம். ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தை போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களை கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீட்சிதர் தினமும் வாசித்துக் கொண்டிருந்தார்.
பகல் நேரத்தில் தீட்சிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவர்த்த இராமாயணத்தை படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீட்சிதருக்கு ஒரு பிரமான நூலாக அமைந்தது.
பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் சாரம் ஏகநாத பாகவதம். ஞாநேச்வரியின் இரண்டாவது அவதாரத்தை போன்றது. ஏகநாதர் மகாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப் பெரியதுமான வரம்.
விடியற்காலையில் ஸ்நானம், நியம நிஷ்டையுடையவன் சாயி பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம் முடிந்தபின், -
நிவேதனம் செய்த பால், சொற்பமான ஆகாரம், இவை இரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீட்சிதர் பயபக்தியுடன் போதியை படிக்க ஆரம்பிப்பார்.
பாகவதர்களில் உத்தமரான துகாராமை, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்க வைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்க முடியும்?
ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்! எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீட்சிதர்! இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷ்தரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்க சொல்லி சமர்த்த சாயி ஆணையிட்டார்.
வனத்தை தேடித் போக வேண்டா. உத்தவ கீதையில் பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.
ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்களத்தில் நேர்ந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைதான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கி இருக்கிறார்.
இக்காரணத்தினால், கிருபையே உருவான சமர்த்த சாயினாதர் தெய்வப் பிரசாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.
பாபா சகாரம் ஹரி ஜோக்கை படிக்கச் சொல்லி இருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் சாடேவாடாவில் தினமும் படித்துக் கொண்டிருந்தார்.