ஷீர்டி சாயி சரிதம்
சாந்த்பாய் பாடீலின் மனைவியின் மருமகன் திருமணப் பிராயத்தை எட்டியது, மணமகள் ஷிர்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. கல்யாண கோஷ்டி மணமகளின் கிராமத்திற்கு வந்தது,-
இந்த விவரங்களை ஏற்கனேவே கேட்டுவிடீர்கள் (5 ஆவது அத்தியாயம்). அது இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது; அவ்வளவே. அதை இங்கே மறுபடியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
சாந்த் பாடீல் என்னவோ, ஒரு நிமித்தகாரணமே. பக்தர்களை உத்தாரணம் செய்ய அத்தியந்தமான ஆர்வம் கொண்டதால் சாயி பூலோகத்தில் அவதரித்தார். தம்மிச்சையாகவே ஷிர்டிக்கு வந்தார்!
ஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழைஎளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் சடங்குகள் ஆகியவற்றால் பயனடைய முடியாதவர்களையும் இந்த சாயியைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்?
பதினெட்டு வயதான இளைஞன் அந்தப் பருவத்திலிருந்தே தனிமையை நாடினான். இரவில் நிர்பயமாக (பயமேயின்றி) எங்கும் படுத்து உறங்கினான். அவனுடைய கண்களுக்கு எல்லாமே ஈசுவரமயமாக தெரிந்தன!
முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருந்த இடத்தில் கிராமமக்கள் குப்பைகளைக் கொட்டினர். பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்த பையன் இரவில் அங்கு உறங்கினான்.
இவ்விதமாகப் பல ஆண்டுகள் கழிந்தன. அந்தப் பள்ளத்திற்கும் விடிவுகாலம் வந்தது. தீனதயாளரான சாயியால் அவ்விடத்தில் ஒரு விசாலமான மாளிகை எழுந்தது.
முடிவில், அந்தப் பள்ளம் இருந்த இடமே சாயியின் பூதவுடல் சமாதி செய்யப்பட்ட மூலஸ்தானம் ஆயிற்று, அதைத்தான் அவர் என்றும் உறையும் இடமாக ஏற்றுக்கொண்டார்; சமாதியும் கட்டப்பட்டது.
வணங்கியவர்களைப் பாலிக்கும் இந்த சமர்த்த ஸாயிதான் தம் பக்தர்களின் நலன் கருதி, கடத்தற்கரிய சம்சார சாகரத்தை பக்தர்கள் எளிதாக கடக்க உதவும் படகான தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறார்.
"கடத்தற்கரிய பிறவிகடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மனப்பூர்வமான ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.
எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் குருடர்களும் முடவர்களும் பக்த பரிவாரமும் எங்ஙனம் கடக்கபோகின்றனர்?" இந்த மணிப்பூர்வாமன ஆதங்கத்தால் உந்தப்பட்டு சாயி அவ்வாறு செய்தார்.
எல்லாரும் அவசியம் பிறவிக்கடலைக் கடந்தே ஆகவேண்டும். அதன் பொருட்டு நாம் அந்தக்கரண சுத்தம் பெறவேண்டும். இதற்கு மனத்தைத் தூய்மை செய்துகொள்வதே முக்கிய சாதனம். இறைவனிடம் பக்தியே அனைத்திற்கும் மூலம்.
கேள்வி (காதால் கேட்டல்) இல்லாது பக்தி இல்லை. கேள்வி சகஜமாகவே குருவின்பால் அன்பைத் தூண்டுகிறது. அன்பிலிருந்து ஆன்மிகம் பிறக்கிறது!