ஷீர்டி சாயி சத்சரிதம்
பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முதலில் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளில் இருந்து பிரசாதமாக திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.
அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப்புத்தகத்தை போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாக பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களை கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்தினி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.
சிலர் தாசகணு இயற்றிய சந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களை கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேக சிந்து' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தும் சாமாவிடம் ஒப்படைத்தார்.
பாபா அப்பொழுது கூறுவார், "சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று." சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துவந்தார்.
பக்தர்கள் கடைகளில் இருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, பிரசாதமாகத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.
சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.
ஆகவே, அவர் மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமையை மட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.
பக்தர்கள் புத்தகங்ளை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலிருந்த வாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்ளை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.
ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, "சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுவார்.
சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே )வினவுவார், "ஆர்வத்துடன் கை நீட்டிய இவர்களுடைய புத்தகங்களை திருப்தியளித்து விடட்டுமா?" அப்பொழுதும் பாபா சொல்வார், "நீயே வைத்துக்கொள்."
பக்தர் எவருக்காவது ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டால், முதலில் அதை பாபாவிடம் கொடுத்து, அவர் கைகளில் இருந்து பிரசாதமாக திரும்பப் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது.
அந்நூலைப் பாராயணம் செய்யும் காலத்தில், செய்பவருக்கு அபாரமான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வாறே, அப்புத்தகத்தை போதியாகப் படித்து விரிவுரை சொல்பவருக்கும் கதை கேட்பவர்களுக்கும் பூரணமான பிரசாதமாக பரம மங்களம் விளையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
சிலர் பாபாவிடம் பெருமாளின் தசாவதாரச் (பத்து அவதாரங்கள்) சித்திரத்தைக் கொணர்ந்தனர்; சிலர் தசாவதாரத் தோத்திரப் புத்தகங்களை கொணர்ந்தனர். மேலும் சிலர், பஞ்சரத்தினி கீதை போன்ற புனிதமான நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அர்ப்பணம் செய்தனர்.
சிலர் தாசகணு இயற்றிய சந்தலீலாமிருதம், பக்தலீலாமிருதம் ஆகிய புத்தகங்களை கூட அர்ப்பணம் செய்தனர். வேறு சிலர் 'விவேக சிந்து' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். பாபா இவையனைத்தும் சாமாவிடம் ஒப்படைத்தார்.
பாபா அப்பொழுது கூறுவார், "சாமா, இந்தப் புத்தகங்களெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வீட்டில் பத்திரமாக வைத்துக் காப்பாற்று." சாமா இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, புத்தகங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துவந்தார்.
பக்தர்கள் கடைகளில் இருந்து இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, பிரசாதமாகத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பாபாவின் கைகளில் வைப்பர்.
சுபாவத்தில் பாபா உதாரகுணம் படைத்தவரெனினும், இதைச் செய்வதற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆகவே, பக்தர்கள் தங்களுடைய ஆசையைத் தெரிவிப்பதற்கு மாதவராவை உடன் அழைத்துச் சென்றனர்.
ஆகவே, அவர் மூலமாகத்தான் பாபாவின் கைகளில் தக்க தருணத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. பாபாவுக்குப் புத்தகத்தின் மஹிமையை மட்டுமின்றி, பக்தரின் ஆன்மீகப் பரிணாமநிலையும் தெரிந்திருந்தது.
பக்தர்கள் புத்தகங்ளை பாபாவின் கைகளில் வைப்பர். பாபா புத்தகங்களை மேலிருந்த வாரியாகப் புரட்டுவார். அதன் பிறகு, பக்தர்கள் புத்தகங்ளை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகக் கைநீட்டுவர்.
ஆனால், பாபா பல சந்தர்ப்பங்களில் புத்தகங்களை பக்தர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டார். மாறாக, புத்தகங்களை மாதவராவிடம் கொடுத்து, "சாமா, இந்தப் பிரதிகளை வைத்துக்கொள். தற்சமயம் இவை உன்னிடமே இருக்கட்டும்" என்று சொல்லிவிடுவார்.
சாமா பட்டவர்த்தனமாகவே (வெளிப்படையாகவே )வினவுவார், "ஆர்வத்துடன் கை நீட்டிய இவர்களுடைய புத்தகங்களை திருப்தியளித்து விடட்டுமா?" அப்பொழுதும் பாபா சொல்வார், "நீயே வைத்துக்கொள்."