valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆன்மீகப் பாதையில் நாட்டமிருந்தவர்கள் சாயியின்மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்களை எல்லாத் தடங்கல்களிலிருந்தும் விடுவித்து, ஆத்மானந்தம் பெறுவதற்கு அருள் செய்தார் சாயி.

இது சம்பந்தமாக சுவாரசியமான அனுபவம் ஒன்று உண்டு. பாலா சாஹேப் தேவின் ஆழ்ந்த விருப்பமொன்றைப் பூர்த்திசெய்து அவர் செய்துகொண்ட உறுதியொன்றை நிறைவேற்றி அருள் செய்தார் பாபா. அத்துடன் சேர்த்து அவருக்கு பக்தியையும் ஊட்டினார்.

பகல் நேரத்தில் பணி செய்து சம்பாதிப்பதைத் தவிர பிழைப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லாதிருந்தவர் தேவ். ஆனாலும், இரவு நேரத்தில் ஆன்மீக அப்பியாசங்கள் செய்வதில் தடைகள் ஏன் ஏற்படவேண்டும்?

தினமும் தவறாது ஞானேச்வரி வாசிக்கவேண்டுமென்று தேவ் பலகாலம் விரும்பினார். ஆனால், அதைக் கையில் எடுத்தாலே ஏதாவதொரு விக்கினம் வந்துகொண்டிருந்தது. விரும்பியவாறு செயல்பட இயலவில்லை.

தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒரு அத்தியாயம் படிக்கவேண்டுமென்ற நியமத்தின்படி செயல்பட முடிந்தது. ஆனால், அதேபோல் ஞானேச்வரியையும் படிக்கமுயன்றபோது, பல விக்கினங்கள் எழுந்தன.

இதர கிரந்தங்களை (நூல்களைக்) கையிலெடுத்தால் நித்திய நியமமாகப் படிக்க இயன்றது. அவர் பெரிதும் விரும்பிய ஞானேச்வரியைப் பொறுத்தவரை இந்த நியமம் வழிக்கு வரவில்லை.

ஒருசமயம் தேவ் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஷிர்டிக்குச் சென்றார். அங்கிருந்து பௌண்டிலிருந்த தம் சொந்த வீட்டிற்கு சுகமாகவும் விச்ராந்தியாகவும் இருப்பதற்காகச் சென்றார்.

அங்கும் மற்ற வேலைகள் ஒழுங்காக நடந்தன. போதி வாசிப்பது போன்ற மற்ற நித்திய நியமங்கள் முறையாக நிறைவேறின. ஆனால், ஞானேச்வரிபற்றிய ஆழ்ந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதற்கு வேளை வரவில்லை!

ஞானேச்வரியைக் கையிலெடுத்தபோதெல்லாம்  பல குறுக்குச் சிந்தனைகளும் சந்தேகங்களும் உள்ளே எழுந்தன. மேலெழுந்தவாரியாகப் படிக்க இயன்றதே தவிர, மனம் கனிந்து பிடிக்கமுடியவில்லை.

மன ஏக்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உறுதி சித்தியாகவில்லை. உண்மையில், ஒரு நாளைக்கு ஐந்து ஓவிகள்கூட நித்திய நியமமாக பிடிக்கமுடியவில்லை.

"தினமும் ஐந்து ஓவிகளாவது (சுலோகங்களாவது) படிக்கவேண்டுமென்று மனத்தில் நிச்சயம் செய்துகொண்டேன். அந்த நியமத்தைக்கூட என்னால் ஆர்வத்துடன் கடைபிடிக்க இயலவில்லை. -