valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சேவை பாபாவை மகிழ்ச்சியுறச் செய்கிறது, அந்த சேவை பாபாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது, என்று நினைப்பதெல்லாம் நமது மனத்தின் விகாரங்களே. உண்மை நிலை நமக்கென்றுமே புலப்படாது.

ஆக, இக் காதை நகைச்சுவையும் கேலியும் நிறைந்தது. அவரவரவர்களுடைய சக்திக்கேற்றவாறு கேபவர்கள் போதனை பெறுவார்கள். சாயிகதையின் இனிமையைப் பூவிலுள்ள மகரந்தத்தை தேனீ சுவைப்பது போலச் சுவைப்பீர்களாக!

ஹேமாட் சாயியின் பாதங்களில் விநயத்துடன் பணிகிறேன். அடுத்த அத்தியாயம் இதைவிட அர்த்தபுஷ்டி (பொருட்ச்செறிவு) வாய்ந்தது. தயாசாகரமான சாயி, தாமோதர் என்னும் பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பார்.

அதுவும் ஒரு மகத்தான அற்புதம்! உலகவாழ்வில் அடிபட்டு ஓய்ந்துபோன தாமோதரைத் தம்மிடம் அழைத்து அவருடைய விசாரங்களில் இருந்து விடுதலை அளித்தார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பணத்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'ஒளிவீசும் ஹாஸ்ய உணர்வு' என்னும் இருபத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.

                                 ஸ்ரீ சத் குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                             சுபம் உண்டாகட்டும்.