valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 November 2011

பாபா காவியம் எழுத சம்மதித்தது..!

இப்பொழுது பாபாவின் திருவாய் மொழி ஒன்றை அதே உட்பொருளில் சொல்கிறேன். கதை கேட்கும் நன்மைக்களே பயபக்தியுடன் கவனமாக கேளுங்கள்.


     என்னுடைய அரசாங்க உத்தியோகம் 1916 ம் ஆண்டில் முடிவுற்று, எனக்கு தகுதியான ஓய்வூதியமும் வழங்கப் பட்டது. ஷிர்டிக்குப் போகும் காலம் வந்தது. அன்று ஆடிமாத பௌர்ணமி நாள். குரவைப் பூஜிப்பதற்காக பக்தர்கள் ஷீரடியில் குழுமி இருந்தனர். சாயி பக்தர் அவருடைய சொந்த உந்துதலால் எனக்கு சிபாரரிசாக பாபாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

      என்னிடம் உள்ள உண்மையான ஆதங்கத்தினால் பாபாவிடம் இவ்வாறு கெஞ்சினார். இவருடைய பெரிய  குடும்பத்தின் பொருட்டு இவர் மீது கருணை காட்டுங்கள் பாபா.  

     "இவருக்கு இன்னுமொரு உத்தியோகம் கொடுங்கள். வாங்கும் ஓய்வூதியம் போதுமா என்ன? ஏதாவது ஒரு உதவியை செய்து, அண்ணா சஹேபினுடைய கவலையை விலக்குங்கள். "


     பாபா பதில் கூறினார். "ஓ..! அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும்; ஆனால், அவர் என்னுடைய சேவையில் இறங்க வேண்டும். இறங்கினால், சுகமான வாழ்க்கை நடத்துவார்".



     அவருடைய உணவுத் தட்டு என்றும் நிறைந்திருக்கும்; உயிருள்ளவரையில் காலியாகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடை விடாது என்னுடையப் பாதுகாப்பை நாடுவாரனால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.


    "யார், நாம் நமது இஷ்டம் போல் செயல்பட்டால் என்ன ஆகிவிடும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் வலி தவறி விட்டார்கள் என்பதை அறிந்து கொள். தர்ம நெறியை விட்டு விலகியவர்களை நாம் முதற் காரியமாக விளக்கி விட வேண்டும்.

     "நேர்முகமாக அன்னவர் வந்தால், வேறு வழியில் சென்று விடுங்கள். அவர்களை பயங்கரமானவர்களாக கருதுங்கள். சிறிது சிரமப்பட்டாவது, அவர்களுடைய நிழலும் உங்கள் மீது விழாதவாறு paarthuk கொள்ளுங்கள்.

     "நெறி முறை பாராதவனும் ஒழுக்க மில்லாதவனும் ஆத்மா விசாரம் செய்யாதவனும் அனுஷ்டானம் இல்லாதவனும் , நன்மை- தீமை பாகுபாடு தெரியாத வனும் எப்படி நல வாழ்வு வாழ முடியும்.?

     "மேலும், நாயாயினும் பன்றியாயினும் ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவமரியாதையாக வெறுக்கவோ ஒதுக்கவோ செய்யாதிர்கள். ஏனெனில், முன் ஜென்ம பந்தம் எதோ இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை. " -

    "இப்போதிலிருந்து அவர் பக்தியுடன் எனக்கு சேவை செய்ய வேண்டும்; இறைவன் அவர் மீது இறக்கம் காட்டுவான்; அள்ள அள்ள குறையாத தேவ லோகத்துச் செல்வம் அவருக்கு கிடைக்கும். -

    "ஆகா இந்தப் பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்? நான் யார் என்பதை ஆணித்தரமாக எப்படி அறிய முடியும்? என்னுடைய பூத உடல் அழியக் கூடியது; என்றும் அழியாத பிரமமே வழிபாட்டுக்கு உரியது.

     "நிலம், நீர், தீ, காற்று , ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் இவைகளின்  ரூபத்தில், நான் இப் பிரபஞ்சத்தின் நான்கு பக்கங்களிலும் நிறைந்து இருக்கின்றேன்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கீதையில் அர்ஜுனனுக்கு இதையே சொல்லி இருக்கிறார். -

    "தாவரங்களும், ஜங்க மங்களும்  நிறைந்த இந்த ஜகத்தில் ஒரு பெயராகவோ உருவமாகவோ தோற்றமாகவோ எது இருந்தாலும், அது எட்டு பிரகிருதிகளை கோர்த்துக் கொண்ட நானே! அதுவும் என்னுடைய ஸ்ரிஷ்டியின் அற்புதமே!"


     " ஓம் என்னும் பிரணவம் என்னுடைய ஒளியாகும்; நானே இவ்வொளியின் பொருள் . உருவெடுத்த இப் பிரபஞ்சத்தில் எதனை வஸ்துகள் உண்டோ. அவை அனைத்திலும் நான் நிறைந்திருக்கிறேன். -


     "இவ்வாறு தம்மை தவிர வேறு எதுவமே இல்லாத நிலையில் எதை விரும்புவது? இப் பிற்பஞ்சந்தின் பத்து திசைகளையும் நான் வியாபிக்கிறேன். -


      "என்னுடைய சர்வ வியாபக விழிப்பில், நான் எனது என்னும் உணர்வுகள் கரைந்து விட்ட நிலையில், விரும்பப் படுவது யாது.? முழுமையில் அனைத்தும் மூழ்கி இருக்கின்றன. -


     "புத்தியில் எத்தனையோ ஆசைகள், ஆத்மாவின் சம்பந்தம் இல்லாமல் எழுகின்றன. நான் நிஜமான ஆத்மாவின் உருவமாக இருப்பதால் நினைவு அலைகள் எங்கிருந்து எழும்.?