ஷீர்டி சாயி சத்சரிதம்
அழைக்காமலேயே வந்தார்! வேறு உருவத்தில் தோன்றினார்! தம் பக்தர்களைக் கடமைப்பட்டவர்களாகச் செய்தார்! ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வூட்டினார்.
ஹேமாட் சாயியை சரணைடைகிறேன். அடுத்த அத்தியாயத்தின் அரங்கேற்றத்தை அவருடைய விருப்பம்போல் ஏற்பாடு செய்வார். அடுத்த அத்தியாயமும் சென்ற அத்தியாயத்தை போலவே மலரும்.
சாயி சரணாகதியடைந்தவர்களை பாதுகாக்கிறார். சாயியின் இந்த வாக்குறுதிக்காகவே ஹேமாட் அவருடைய பாதங்களை பற்றிக்கொள்கிறேன். அவரும் உதைத்துத் தள்ளுவதில்லை!
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உத்தியாபன விழா' என்னும் நாற்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.