ஷீர்டி சாயி சத்சரிதம்
"நாங்கள் உருவமற்ற கடவுளையே வணங்குவோம்; தக்ஷிணை கொடுக்கமாட்டோம்; நாங்கள் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்தான் தரிசனத்திற்கு வருவோம்".
இவ்வாறு நிச்சயம் செய்துகொண்டு வந்தவர்கள் சாயியின் பாதங்களைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!
மேலும், உதீயின் அபூர்வ மகிமையையும் நெவாஸ்கர் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!
இதுபோன்ற உத்தமமான கதைகளை பக்தியுடனும் பிரேமையுடனும் செவிமடுத்தால், சம்சார இன்னல்கள் சாந்தமடையும். அதைவிடப் பரம சுகம் வேறெதுவும் உண்டோ?
ஆகவே, ஹேமாட் சாயிபாதங்களில் வணங்கி, கதை கேட்பவர்களுக்குப் பிரேமையை அருளுமாறு வேண்டுகிறேன். அவர்களுடைய மனம் சத் சரித்திரம் கேட்பதில் ரமிக்கட்டும். (மகிழட்டும்).
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.