ஷீர்டி சாயி சத்சரிதம்
பூஜையறையில் மற்ற தெய்வங்களுடன் இந்தச் சிற்பமும் வழிபடப்படுகிறது. இதுவே, சாயியின் அபூர்வமான லீலை; சரித்திரம். பக்தர்களுக்கு ஒவ்வொரு சாயி வழிகாட்டுகிறார் அல்லரோ!
அல்லீ முஹம்மதும் இஸ்மூ முஜாவரும் விவரம் சொல்வதற்காகச் செய்யவேண்டிய வருகையைத் தள்ளிபோட்டுக்கொண்டே போயினர். ஒன்பது ஆண்டுகள் கடந்த என்னால் அவர்களைச் சந்திக்கமுடியவில்லை.
கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்து, ஒருநாள் நாள் இயல்பாகச் சாலையில் நாம் சென்றுகொண்டிருந்தபோது அல்லீ முஹம்மது அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.
சந்தித்தபோது, எனக்களிக்கப்பட்ட சாயியின் புடைச்சிற்பம் பற்றிய அற்புதத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவரைக் கேட்டேன், "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?-
"அன்று எப்படியோ, இன்றும் அப்படியே எதிர்பாராதவிதமாக சந்தித்திருக்கிறோம். இந்த நல்வாய்ப்பு நமக்கு சகஜமாக அமைந்திருக்கிறது. ஆகவே, சுவாரசியமான அந்த விருத்தாந்தந்தை முழுவதும் சொல்லுங்கள். -
"நீங்களும் ஒரு சாயி பக்தர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், சற்றும் எதிர்பாராதவிதமாக அந்தக் குறிப்பிட்ட நாளில் வருவதுதான் சிறப்பு என்று நீக்கினால் எப்படி நிச்சயத்தீர்கள்?"
பிறகு, அல்லீ முஹம்மது முழு விருத்தாந்தத்தையும் சொன்னார், "ஆச்சரியம் நிரம்பியதும் மிக அற்புதமானதுமான சாயியின் லீலையை ஆதியோடந்தமாக சொல்கிறேன்; கேளுங்கள்.-
"இந்த லீலைக்கு என்ன அர்த்தம்? லீலை எதற்காகச் செய்யப்பட்டது? இதன்மூலம் பக்தர்கள் அறியவேண்டியது என்ன? அனைத்தும் சாயிக்கே வெளிச்சம்! -
"நம்மைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் லீலைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்; வாயினால் பாடவேண்டும். இரண்டுமே நமக்கு நற்பேறுகளை அளிக்கும்".
மேற்கொண்டு வரும் கதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். கேட்கும் மக்கட்கூட்டம் ஆனந்தமடையும். சாயியின் சரித்திரம் அமோகமாக நன்மையளிக்கும்.
சாயி, ஆனந்தம் நிறைந்த கனமேகம் . துவேஷமென்பதே இல்லாதவர். அவரை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுபவர்கள் ஆனந்தமும் திருப்தியும் அடைவார்கள்; மனம் விருப்புவெறுப்புகளிலிருந்து விடுபடும்.
சாதகப்பறவை சுயநலத்திற்காக மேகத்தை நாடுகிறது. மேகமோ சகல சிருஷ்டிக்குமே மழையாகப் பொழிகிறது . பாலாசாஹேப் (தேவ்) பாபாவை விருந்துக்கு அழைத்தார். பாபாவோ பக்தர் குழாமைத் தம்முடன் அழைத்துச் சென்றார்.
பந்தியாக உட்கார்ந்து உத்தியாபன விழா கதையைக் கேட்டவர்களும் இந்த பக்தர் குழாமில் அடக்கம். சாயியின் சங்கம் என்னும் விருந்தை அனுபவித்து திருப்தியை ஏப்பம் விட்டு தெரிவிக்கின்றனர்.