ஷீர்டி சாயி சத்சரிதம்
"உம்முடைய இல்லத்தில் காட் பிபி இல்லை? முகூர்த்த லக்கினத்தின்போது இந்த முஸ்லீம் தேவதையை அவளுக்குண்டான பூஜை, படையல்களைச் செய்து திருப்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்வதில்லை?"
அவர் (ம.ம), "ஆம்" என்று சொல்லி ஒப்புக்கொள்கிறார். "வேறென்ன வேண்டும்?" என்று பாபா கேட்டதற்கு, தம் குரு ராமதாசரை தரிசனம் செய்ய ஆவலாக இருக்கிறது என வேண்டுகிறார்.
மஹராஜ் அவரைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறார். அவ்வாறு செய்தவுடன் , சமர்த்த ராமதாசர் சரீரத்துடன் தம்மெதிரே நிற்பதை அவர் (ம.ம) காண்கிறார்.
ராமதாசருடைய பாதங்களில் விழுந்தபோது ராமதாசர் அங்கிருந்து அப்பொழுதே மறைந்துவிடுகிறார். விஷய ஆர்வம் கொண்ட அவர் (ம.ம) பாபாவைக் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். -
"பாபா, உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. உடலும் கிழடு தட்டிவிட்டது. உங்களுடைய மொத்த ஆயுள் எவ்வளவென்று உங்களுக்கு தெரியுமா?"
"என்ன, நீர் என்ன சொல்கிறீர்? நான் கிழவனாகிவிட்டேன் என்றா? எனக்குப் போட்டியாக ஓடும் பார்க்கலாம்!" என்று கேட்டுக்கொண்டே சாயி ஓட ஆரம்பிக்கிறார். அவரும் (ம.ம) சாயியை துரத்திக்கொண்டு ஓடுகிறார்.
ஆனால், சாயி வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய்த் தம்முடைய பாதையில் புழுதி படலத்தைக் கிளப்பிவிடுகிறார். அந்தக் குழப்பத்தில் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறார். (கனவுக்கு காட்சி விவரணம் இங்கு முடிகிறது) மதராஸ் மனிதர் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார்.
முழுமையாக விழித்துக்கொண்டபின் கனவில் நடந்ததை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். உடனே அவருடைய மனம் மாறியது. பாபாவின் மஹிமையைப் புரிந்துகொண்டு புகழ்ந்தார்.
பாபாவின் அற்புதமான லீலையைக் கண்டபின் அவரிடம் பக்தி ஏற்பட்டது. பாபா விஷயத்தில் முன்பிருந்த சந்தேகங்களும் எதிர்மறைச் சிந்தனைகளும் பறந்தோடின.
அது ஒரு கனவுதான் என்றாலும், அக் கனவில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் கதை கேட்பவர்கள் கிரஹித்துக்கொண்டால் கனவின் மறைபொருள் புரியும்.
இந்தக் கேள்வி-பதில் சம்பாஷனையில் இருந்து மதராஸ் மனிதர் ஒரு மகத்தான படிப்பினை பெற்றார். சாயி சம்பந்தமாக இருந்த விரோதமனப்பான்மையை நையாண்டியும் கேலியும் விரட்டிவிட்டன.
மறுநாள் காலைநேரத்தில் பஜனை கோஷ்டி மசூதிக்கு தரிசனத்துக்காக வந்தது. சாயிநாதர் கிருபை செய்து இரண்டு ரூபாய் மதிப்பிற்கு பர்பி கொடுத்தார்.
தம்முடைய பாக்கெட்டிலிருந்து எடுத்து இரண்டு ரூபாய் கொடுத்தார். அவர்களை மேலும் சில நாள்களுக்கு ஷிரிடியில் தங்க வைத்தார். இந்த நாள்கள் பஜனையிலும் பூஜையிலும் கழிந்தன.
"உம்முடைய இல்லத்தில் காட் பிபி இல்லை? முகூர்த்த லக்கினத்தின்போது இந்த முஸ்லீம் தேவதையை அவளுக்குண்டான பூஜை, படையல்களைச் செய்து திருப்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்வதில்லை?"
அவர் (ம.ம), "ஆம்" என்று சொல்லி ஒப்புக்கொள்கிறார். "வேறென்ன வேண்டும்?" என்று பாபா கேட்டதற்கு, தம் குரு ராமதாசரை தரிசனம் செய்ய ஆவலாக இருக்கிறது என வேண்டுகிறார்.
மஹராஜ் அவரைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறார். அவ்வாறு செய்தவுடன் , சமர்த்த ராமதாசர் சரீரத்துடன் தம்மெதிரே நிற்பதை அவர் (ம.ம) காண்கிறார்.
ராமதாசருடைய பாதங்களில் விழுந்தபோது ராமதாசர் அங்கிருந்து அப்பொழுதே மறைந்துவிடுகிறார். விஷய ஆர்வம் கொண்ட அவர் (ம.ம) பாபாவைக் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். -
"பாபா, உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. உடலும் கிழடு தட்டிவிட்டது. உங்களுடைய மொத்த ஆயுள் எவ்வளவென்று உங்களுக்கு தெரியுமா?"
"என்ன, நீர் என்ன சொல்கிறீர்? நான் கிழவனாகிவிட்டேன் என்றா? எனக்குப் போட்டியாக ஓடும் பார்க்கலாம்!" என்று கேட்டுக்கொண்டே சாயி ஓட ஆரம்பிக்கிறார். அவரும் (ம.ம) சாயியை துரத்திக்கொண்டு ஓடுகிறார்.
ஆனால், சாயி வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய்த் தம்முடைய பாதையில் புழுதி படலத்தைக் கிளப்பிவிடுகிறார். அந்தக் குழப்பத்தில் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறார். (கனவுக்கு காட்சி விவரணம் இங்கு முடிகிறது) மதராஸ் மனிதர் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார்.
முழுமையாக விழித்துக்கொண்டபின் கனவில் நடந்ததை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். உடனே அவருடைய மனம் மாறியது. பாபாவின் மஹிமையைப் புரிந்துகொண்டு புகழ்ந்தார்.
பாபாவின் அற்புதமான லீலையைக் கண்டபின் அவரிடம் பக்தி ஏற்பட்டது. பாபா விஷயத்தில் முன்பிருந்த சந்தேகங்களும் எதிர்மறைச் சிந்தனைகளும் பறந்தோடின.
அது ஒரு கனவுதான் என்றாலும், அக் கனவில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் கதை கேட்பவர்கள் கிரஹித்துக்கொண்டால் கனவின் மறைபொருள் புரியும்.
இந்தக் கேள்வி-பதில் சம்பாஷனையில் இருந்து மதராஸ் மனிதர் ஒரு மகத்தான படிப்பினை பெற்றார். சாயி சம்பந்தமாக இருந்த விரோதமனப்பான்மையை நையாண்டியும் கேலியும் விரட்டிவிட்டன.
மறுநாள் காலைநேரத்தில் பஜனை கோஷ்டி மசூதிக்கு தரிசனத்துக்காக வந்தது. சாயிநாதர் கிருபை செய்து இரண்டு ரூபாய் மதிப்பிற்கு பர்பி கொடுத்தார்.
தம்முடைய பாக்கெட்டிலிருந்து எடுத்து இரண்டு ரூபாய் கொடுத்தார். அவர்களை மேலும் சில நாள்களுக்கு ஷிரிடியில் தங்க வைத்தார். இந்த நாள்கள் பஜனையிலும் பூஜையிலும் கழிந்தன.