ஷீர்டி சாயி சத்சரிதம்
மேலும், பக்தர்களின் கற்பகவிருக்கிஷமான சாயி, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலகுக்குவதற்கு எப்படி ஓர் உபயாத்தை துவக்கி வைத்தார் என்பதையும் கேளுங்கள்.
டாக்டர் பிள்ளைக்கு பாபாவுக்கு அனுப்பிய செய்தி தீக்ஷிதரால் கொண்டுவரப்பட்டது. அதைக் கேட்ட பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், "போய் அவரிடம் சொல்லுங்கள். 'நிர்பயமான மனத்துடன் இருக்கவும்' என்று"
பாபா மேலும் டாக்டருக்குப் பாடம் சொல்லியனுப்பினார், "இந்த அவதியைப் பத்து ஜென்மங்களுக்குப் பரப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பத்து நாள்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இதை ஒழித்துவிடலாம்!-
"ஓ, உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடிய சமர்த்தன் நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் மரணத்தை வேண்டுகிறீரே! இதுதான் உமது புருஷார்த்தமோ (நீர் அடைய வேண்டியதோ)?
"அவரை எழுப்பித் தூக்கிக்கொண்டு இங்கு வாருங்கள். அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கட்டும். பயத்தால் அவர் மனங்கலங்க வேண்டா. அவரை இங்கு உங்களுடைய முதுகிலாவது தூக்கி கொண்டு வாருங்கள்".
ஆகவே, அந்த நிலையிலேயே டாக்டர் உடனே மசூதிக்கு கொண்டுவரப்பட்டார். பாபா தாம் சாய்ந்துகொண்டிருந்த தலையணையை அவருக்கு கொடுத்தார்.
தலையணை பாபாவின் வலப்பக்கத்தில், பக்கீர் பாபா வழக்கமாக உட்காரும் இடத்தில் வைக்கப்பட்டது. "இதன்மேல் சாய்ந்துகொண்டு அமைதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக மனத்தைக் குழப்பிக்கொள்ளாதீர்" என்று பாபா சொன்னார்.
"மெதுவாகக் காலை நீட்டி உட்காரும். அது சிறிது நிவாரணம் அளிக்கும். ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே, வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.
"வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ - இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றை கண்டு சிரிக்கவும் வேண்ட, அழவும் வேண்டா.-
"எது எது நேர்கிறதோ, அது அதை பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாலிக் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!-
"மனம் , செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தமாக அவருடைய நாமத்தை ஸ்மாரணம் செய்ததால் லீலைகள் அனுபவமாகும்."
டாக்டர் பிள்ளை அப்பொழுது சொன்னார், "நானாசாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல் கட்டுபோட்டிருந்தார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை".
பாபா பதில் சொன்னார், "நானா ஒரு பித்துக்குளி! அந்தக் கட்டைப் பிரிந்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர் குணமடைவீர்".