ஷீர்டி சாயி சத்சரிதம்
இப் பிரபஞ்சமே இறைவனால் நிர்வகிக்கப்படுகிறது. இறைவனுடைய ஆணையிலிருந்து சுதந்திரம் பெற்றவர் எவருமே இல்லை. இது பாபாவின் அனுபவ ஞானம்; ஆனால், நம்மையோ இழிவான அஹங்காரம் விடுவதாக இல்லை!
குளத்தில் விழுந்துவிட்ட தேள், வெளிவருவதற்கு உருண்டு புரண்டு முயற்சி செய்தும் பயனில்லாமல் மூழ்கிப் போகிறது. இதை பார்த்த ஒருவர், 'நீ மற்றவைகளைச் சித்திரவதை செய்கிறாயே, அது போல்தான் இது' என்று சொல்லிக் கைதட்டி மகிழ்கிறார்.
கைதட்டல் சத்தத்தைக் கேட்ட ஒருவர் குளத்திற்கு ஓடிவந்து பலதடவை மூழ்கியும் மிதந்தும் போராடிக் கொண்டிருக்கும் தேளைப் பார்க்கிறார்; கருணையால் உந்தப்படுகிறார்.
தேளின் அருகில் சென்று கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் கெட்டியாகப் பிடித்து தூக்குகிறார். தேள் தன்னுடைய சுபாவத்தின்படி அவரை எதிர்த்து, கண்டு விரலைக் கொட்டுகிறது.
நம்முடைய ஞானமெல்லாம் எதற்கு உபயோகம்? நாம் முழுக்க முழுக்க ஒரு மஹாசக்தியின் ஆதிக்கத்தில் வாழ்கிறோம். புத்தியைக் கொடுப்பவன் நாராயணன்; அவனுடைய சித்தம் எவ்வாறோ அவ்வாறே எல்லாம் நடக்கும்.
பலபேர்களுக்குப் பலவிதமான அனுபவங்கள். நானும் என்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறேன். சாயியின் திருவாய்மொழிக்கு மரியாதை அளித்து பரிபூரணமாக நம்பவேண்டும். ஏனெனில், அம்மாதிரியான உறுதியான விசுவாசத்தினால்தான் அவருடைய வைபவத்தை அனுபவிக்க முடியும்.
காகா சாஹேப் தீட்சிதர் தினமும் பகலில் ஏகநாத பாகவத்தையும் இரவில் பாவார்த்த இராமாயணத்தையும் வாசித்துவந்தார்.
அவர், இறைவனுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்வதை மறந்திருக்கலாம்; நீராடுவதற்கும் மறந்திருக்கலாம்; எத்தனையோ நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்; இவ்விரண்டு புராண நூல்களை பாராயணம் செய்யும் நேரத்தை அவர் என்றுமே மறந்ததில்லை.
இரண்டுமே ஏகநாதர் அருளிய நூல்கள்; ஆன்மீகத்தின் சாரம். இந்தப் பாராயணம் தீட்சிதருக்கு பாபா செய்த அனுக்கிரஹம்.
ஆத்மஞானம், வைராக்கியம், வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைகள் இவை மூன்றும் இவ்விரண்டு நூல்களிலும் திவ்விய முக்குண ஜோதியாகப் பிரகாசிக்கின்றன.
எந்த பாக்கியவானுடைய உதடுகளுக்கு இந்த தேவாமிருதத்தையொத்த ஆத்ம போதனை வருகிறதோ, அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார்; மோட்சம் அவர் பாதங்களை நாடும்.
இப் பிரபஞ்சமே இறைவனால் நிர்வகிக்கப்படுகிறது. இறைவனுடைய ஆணையிலிருந்து சுதந்திரம் பெற்றவர் எவருமே இல்லை. இது பாபாவின் அனுபவ ஞானம்; ஆனால், நம்மையோ இழிவான அஹங்காரம் விடுவதாக இல்லை!
குளத்தில் விழுந்துவிட்ட தேள், வெளிவருவதற்கு உருண்டு புரண்டு முயற்சி செய்தும் பயனில்லாமல் மூழ்கிப் போகிறது. இதை பார்த்த ஒருவர், 'நீ மற்றவைகளைச் சித்திரவதை செய்கிறாயே, அது போல்தான் இது' என்று சொல்லிக் கைதட்டி மகிழ்கிறார்.
கைதட்டல் சத்தத்தைக் கேட்ட ஒருவர் குளத்திற்கு ஓடிவந்து பலதடவை மூழ்கியும் மிதந்தும் போராடிக் கொண்டிருக்கும் தேளைப் பார்க்கிறார்; கருணையால் உந்தப்படுகிறார்.
தேளின் அருகில் சென்று கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் கெட்டியாகப் பிடித்து தூக்குகிறார். தேள் தன்னுடைய சுபாவத்தின்படி அவரை எதிர்த்து, கண்டு விரலைக் கொட்டுகிறது.
நம்முடைய ஞானமெல்லாம் எதற்கு உபயோகம்? நாம் முழுக்க முழுக்க ஒரு மஹாசக்தியின் ஆதிக்கத்தில் வாழ்கிறோம். புத்தியைக் கொடுப்பவன் நாராயணன்; அவனுடைய சித்தம் எவ்வாறோ அவ்வாறே எல்லாம் நடக்கும்.
பலபேர்களுக்குப் பலவிதமான அனுபவங்கள். நானும் என்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறேன். சாயியின் திருவாய்மொழிக்கு மரியாதை அளித்து பரிபூரணமாக நம்பவேண்டும். ஏனெனில், அம்மாதிரியான உறுதியான விசுவாசத்தினால்தான் அவருடைய வைபவத்தை அனுபவிக்க முடியும்.
காகா சாஹேப் தீட்சிதர் தினமும் பகலில் ஏகநாத பாகவத்தையும் இரவில் பாவார்த்த இராமாயணத்தையும் வாசித்துவந்தார்.
அவர், இறைவனுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்வதை மறந்திருக்கலாம்; நீராடுவதற்கும் மறந்திருக்கலாம்; எத்தனையோ நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்; இவ்விரண்டு புராண நூல்களை பாராயணம் செய்யும் நேரத்தை அவர் என்றுமே மறந்ததில்லை.
இரண்டுமே ஏகநாதர் அருளிய நூல்கள்; ஆன்மீகத்தின் சாரம். இந்தப் பாராயணம் தீட்சிதருக்கு பாபா செய்த அனுக்கிரஹம்.
ஆத்மஞானம், வைராக்கியம், வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைகள் இவை மூன்றும் இவ்விரண்டு நூல்களிலும் திவ்விய முக்குண ஜோதியாகப் பிரகாசிக்கின்றன.
எந்த பாக்கியவானுடைய உதடுகளுக்கு இந்த தேவாமிருதத்தையொத்த ஆத்ம போதனை வருகிறதோ, அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார்; மோட்சம் அவர் பாதங்களை நாடும்.