valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 October 2012

ஸ்ரீ சாயி சத் சரிதம்

மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்! 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுணம்? தாத்யா பாடீலை இந்த ஆபத்திலிருந்து விடுவிப்பது எப்படி?" என்று மக்கள் வியந்தனர்.

பாகோஜி சிந்தே (பாபாவுக்கு பணியால் போல் சேவை செய்த அடியவர்.) தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார். பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம் போல் துவம்சம் செய்யப் பட்டார்.

மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதே போன்று செங்கற்களால் தாக்கப் பட்டார்கள்.

'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்?" என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்த போதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது.  கடைசியில் பாபா அமைதியடைந்தார்.

உடனே ஒரு ஜவுளிக்கடைக்காரர் அழைக்கப் பட்டு, தங்கச் சரிகை போட்ட தலைப் பாகை கொண்டு வரச் செய்யப் பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப் பாகையைத் தாத்யாவுக்கு கட்டி விட்டார்.

இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

எக்காரணம் பற்றி அவர் கடும் கோபமடைந்தார்? எப்படிக் காண நேரத்தில் சாந்தியடைந்து சந்தோசம் ஆகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்கமே புரியவில்லை.

சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும்.

பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்று மனதில் தோன்றுகிறது; எதை முதலில் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்கு முக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது.

எந்நாளும் பாரபட்சம் காட்ட முடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்க வேண்டுமென்ற ஆவலைத் திருப்தி செய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்கு பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்பது பற்றிய வாய்மொழி விவரங்களையும் முதியோர்களிடம் நான் கேட்டவாறு ஆதிகாலக் கதைகளையும் என்னுடைய சக்தி அனுமதிக்கும் அளவில் சொல்கிறேன்; கேளுங்கள்.