ஷிர்டி சாயி சத்சரிதம்
"வாரும் வாரும்! அமரும்; நான் இப்பொழுத்தான் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கச்சத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய நித்திய பூஜையை முடித்து விட்டு உடனே வந்து விடுகிறேன். -
"நீங்கள் ஒரு தாம்பூலம் தயாரித்து தின்பதற்குள் நான் பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு, இருவரும் அமைதியாகவும் திருப்தியடையும் வரையிலும் சாவதானமாகப் பேசலாம். "
இவ்வாறு சொல்லிக்கொண்டே மாதவராவ் வீட்டின் உள்ளே சென்றார். பிறகு நான் யதேச்சையாக் ஜன்னல் விளிம்பில் இருந்த ஏசுநாத பாகவத போதியைக் கையில் எடுத்தேன்.
புத்தகத்தை கைவந்தவாக்கில் ஏதோ ஓர் இடத்தில் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரித்த பக்கம், நான் அன்று காலை பாராயணத்தை poorthi செய்யாமல் நடுவில் நிறுத்திய பக்கமாக இருந்தது.
மிக ஆச்சரியம் அடைந்தேன்! காலையில் படிக்காமல் விட்டுவிட்ட பகுதியை பூர்த்தி செய்ய வைத்துப் பாபா என்னை ஒழுக்கமாகச் செயல்பட வைக்கிறாரோ!
இங்கு ஒழுக்கம் என்பது, நியமனம் செய்த நூலைத் தவறாமல் பாராயணம் செய்வது. நியமிக்கப்பட்ட நித்திய உபாசனையை முடிக்காமல் இடத்தை விட்டு நகரக் கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் ஏக்நாத பாகவதத்தை பற்றிய சிறு விளக்கம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது; அதைச் சொல்லாமல் விடமுடியாது. கதை கேட்பவர்கள் கவனமாக கேளுங்கள்.
குருபக்தி நிரம்பிய இந்த ஏகநாத பாகவதத்தைத்தான் சாயியின் கிருபாபாத்திரரான (அருளைப் பெற்றவரான) காக சாஹேப் தீட்சிதர், மற்ற பக்தர்கள் சிறுகுழுவாக அமைந்து கேட்கும் வகையாக தினமும் வாசித்து வந்தார்.
மகா விஷ்ணு உலக மக்களை உத்தாராணம் செய்வதற்காக பிரம்மா என்ற மண்ணில் விதைத்த விதையானது நாரதர் என்னும் சோளக் கொல்லையாக விளைந்தது.
அந்தச் சோளக் கொல்லையில் இருந்து வியாச முனி சோளக் கதிர்களை அறுவடை செய்துக் கிடங்கில் சேர்த்துவைத்தார். பத்து லக்ஷணங்களை உடைய இச் சோளக் கதிர்களை சுகதேவ மகரிஷி, பரீஷித்து ராஜா என்னும் களத்தில் அடித்துத் துவைத்துச் சோளத்தை தானியமாக பிரித்து எடுத்தார்.
களத்தில் இருந்த சோளத்தை ஸ்ரீதர சுவாமிகள் காற்றில் தூற்றி, நோம்பிச் சுத்தம் செய்தார். ஜனார்த்தன சுவாமிகள் சுத்தம் செய்யப்பட்ட சோளத்தை அளந்து மதிப்பிட்டு, ஏகனாதரிடம் தந்தார். ஏகநாதர் அதிலிருந்து பல இனிப்பான பண்டங்களை சமைத்து விருந்து தயாரித்தார்.
"வாரும் வாரும்! அமரும்; நான் இப்பொழுத்தான் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கச்சத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய நித்திய பூஜையை முடித்து விட்டு உடனே வந்து விடுகிறேன். -
"நீங்கள் ஒரு தாம்பூலம் தயாரித்து தின்பதற்குள் நான் பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு, இருவரும் அமைதியாகவும் திருப்தியடையும் வரையிலும் சாவதானமாகப் பேசலாம். "
இவ்வாறு சொல்லிக்கொண்டே மாதவராவ் வீட்டின் உள்ளே சென்றார். பிறகு நான் யதேச்சையாக் ஜன்னல் விளிம்பில் இருந்த ஏசுநாத பாகவத போதியைக் கையில் எடுத்தேன்.
புத்தகத்தை கைவந்தவாக்கில் ஏதோ ஓர் இடத்தில் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரித்த பக்கம், நான் அன்று காலை பாராயணத்தை poorthi செய்யாமல் நடுவில் நிறுத்திய பக்கமாக இருந்தது.
மிக ஆச்சரியம் அடைந்தேன்! காலையில் படிக்காமல் விட்டுவிட்ட பகுதியை பூர்த்தி செய்ய வைத்துப் பாபா என்னை ஒழுக்கமாகச் செயல்பட வைக்கிறாரோ!
இங்கு ஒழுக்கம் என்பது, நியமனம் செய்த நூலைத் தவறாமல் பாராயணம் செய்வது. நியமிக்கப்பட்ட நித்திய உபாசனையை முடிக்காமல் இடத்தை விட்டு நகரக் கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் ஏக்நாத பாகவதத்தை பற்றிய சிறு விளக்கம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது; அதைச் சொல்லாமல் விடமுடியாது. கதை கேட்பவர்கள் கவனமாக கேளுங்கள்.
குருபக்தி நிரம்பிய இந்த ஏகநாத பாகவதத்தைத்தான் சாயியின் கிருபாபாத்திரரான (அருளைப் பெற்றவரான) காக சாஹேப் தீட்சிதர், மற்ற பக்தர்கள் சிறுகுழுவாக அமைந்து கேட்கும் வகையாக தினமும் வாசித்து வந்தார்.
மகா விஷ்ணு உலக மக்களை உத்தாராணம் செய்வதற்காக பிரம்மா என்ற மண்ணில் விதைத்த விதையானது நாரதர் என்னும் சோளக் கொல்லையாக விளைந்தது.
அந்தச் சோளக் கொல்லையில் இருந்து வியாச முனி சோளக் கதிர்களை அறுவடை செய்துக் கிடங்கில் சேர்த்துவைத்தார். பத்து லக்ஷணங்களை உடைய இச் சோளக் கதிர்களை சுகதேவ மகரிஷி, பரீஷித்து ராஜா என்னும் களத்தில் அடித்துத் துவைத்துச் சோளத்தை தானியமாக பிரித்து எடுத்தார்.
களத்தில் இருந்த சோளத்தை ஸ்ரீதர சுவாமிகள் காற்றில் தூற்றி, நோம்பிச் சுத்தம் செய்தார். ஜனார்த்தன சுவாமிகள் சுத்தம் செய்யப்பட்ட சோளத்தை அளந்து மதிப்பிட்டு, ஏகனாதரிடம் தந்தார். ஏகநாதர் அதிலிருந்து பல இனிப்பான பண்டங்களை சமைத்து விருந்து தயாரித்தார்.