valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்டேஷன் மாஸ்டர் இவ்வாறு தமது அறையில் சொல்லிக்கொண்டிருந்தபோதே  வெளியில் குதிரைக் குளம்படி ஒலி கேட்டது. மாம்லேதாரே  (தேவ்) அங்கு வந்துவிட்டார். குதிரையிலிருந்து இறங்கி ஸ்டேஷனுக்குள் சென்றார்.

ஸ்டேஷன் மாஸ்டரை சந்திக்க அவர் உள்ளே நுழைந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் சந்நியாசியிடம் சொன்னார், "இதோ பாருங்கள்; மாம்லேதாரே இங்கு வந்துவிட்டார்!-

"இப்பொழுது நீர் அவரிடம் என்ன சொல்லவிரும்புகிறீரோ அதைச் சொல்லலாம். தெய்வாதீனமாக அவரை சுலபமாகவே சந்தித்துவிட்டீர்கள்". பிறகு, சந்நியாசி தாம் அங்கு வந்த நோக்கத்தை மாம்லேதாருக்கு விவரித்தார்.

இருவரும் வெளியே வந்து ஒரு பெட்டியின்மீது அமர்ந்தனர். சந்நியாசி வினயமாக தேவ் அவர்களை வேண்டினார், "இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.-

"கோமாதா சம்ரட்சணம் (நன்கு காப்பாற்றுகை) தருமகாரியம். உங்களுடைய கைகளால் எடுத்துக்கொள்ளப்படாவிடின், என் போன்ற வெளியூர்காரனால் எள்ளளவும் எப்படி சாதிக்க முடியும்?-

"நீங்கள் தாலுகாவின் அதிகாரி; நானோ பசுக்கள் பட்டினி கிடைப்பதைத் தவிர்க்க, வீடுவீடாக அலையும் பிச்சைக்காரன்.-

"நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமேயில்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; கோமாதாவின் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்."

சந்நியாசியின் வேண்டுகோளைக் கேட்ட தேவ் பதில் சொன்னார், "நாங்கள் இப்பொழுதுதான் வேறொரு தர்மகாரியத்திற்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கியிருக்கிறோம். -

"ராவ்சாஹிப் நரோத்தம் சேட் என்ற கௌரவம் மிக்க சமூகத் தலைவர், ஏழைகளின் நண்பர், முனைப்புடன் செயல்படுபவர், இப்பொழுதுதான் நிதி திரட்ட ஆரம்பித்திருக்கிறார். -

"இந்த சமயத்தில் உங்களுடைய நிதி திரட்டும் முயற்சி எப்படி ஒத்துப்போகும் என்பதை நீங்களே சொல்லுங்கள். ஆகவே, இது உங்களுக்கு சாதகமான நேரம் அன்று. ஆயினும், சில காலம் கழித்துப் பார்க்கலாம். -

"நீங்கள் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இங்கு வாருங்கள். அப்பொழுது நாம் முயற்சி செய்வோம். இப்பொழுது உம்முடைய முயற்சி அனுகூலமாகாது."

சந்நியாசி கிளம்பிப் போய்விட்டார். சற்றேறக்குறைய ஒரு மாதம் கழித்து டஹாணுவுக்கு மறுபடியும் ஒருநாள் வந்தார். (தேவ் அன்று உத்தியாபன விழா கொண்டாடிக்கொண்டிருந்தார்.!)

தேவின் இல்லத்திற்கு எதிரே பராஞ்சபே என்று பெயர்கொண்ட வக்கீல் ஒருவாறு வசித்துவந்தார். தேவ் அவ் வீட்டுக்கெதிராக ஒரு குதிரை வண்டி வந்து நிற்பதையும் சந்நியாசி வண்டியிலிருந்து இறங்குவதையும் கவனித்தார்.