ஷீர்டி சாயி சத்சரிதம்
பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவரராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனஉளைச்சல் நிற்கவில்லை.
திரியம்பகேசுவரத்தில் பாத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை.
உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார்.
தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும், மனம் அமைதியற்று இருந்தது.
மறுபடியும், தேவியின் கோயிலுக்குச் சென்று, "என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனதிற்கு அமைதி கொடுங்கள்! என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டா" என்று மனமுருகி வேண்டினார்.
தீனமான குரலில் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினர். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி,-
"பாபா என்று நான் குறிப்பிட்டது ஷிர்டியில் வாழும் சமர்த்த சாயியை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே!" எனச் சொல்லி அருள் செய்தார்.
"இந்த ஷீர்டி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீர்டி விஜயம் எப்படி நடக்கபோகிறதென்றும் தெரியவில்லையே!" என்று காகாஜி குழம்பினார்.
ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமில்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார்.
ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசமும் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளாலும் இறைவனும் அத்வைதம்.
"என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன்." இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையும் ஆகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை.
ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்ல முடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.
பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவரராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனஉளைச்சல் நிற்கவில்லை.
திரியம்பகேசுவரத்தில் பாத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை.
உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார்.
தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும், மனம் அமைதியற்று இருந்தது.
மறுபடியும், தேவியின் கோயிலுக்குச் சென்று, "என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனதிற்கு அமைதி கொடுங்கள்! என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டா" என்று மனமுருகி வேண்டினார்.
தீனமான குரலில் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினர். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி,-
"பாபா என்று நான் குறிப்பிட்டது ஷிர்டியில் வாழும் சமர்த்த சாயியை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே!" எனச் சொல்லி அருள் செய்தார்.
"இந்த ஷீர்டி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீர்டி விஜயம் எப்படி நடக்கபோகிறதென்றும் தெரியவில்லையே!" என்று காகாஜி குழம்பினார்.
ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமில்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார்.
ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசமும் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளாலும் இறைவனும் அத்வைதம்.
"என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன்." இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையும் ஆகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை.
ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்ல முடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.